விறுவிறுப்பான பதிவு மிலா.முத்தழகி பற்றி கவலை இல்லாமல் பாலமுருகன் இருப்பதாக நினைத்தால்,இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொல்லுதுன்னு தான் வீட்டுக்கு வராம வேலை வேலைன்னு வெளியே சுத்திட்டு இருந்தானா.
பொண்டாட்டி நல்லா இருக்கறப்போவே அடுத்தவளோட சுத்தற ஆம்பிளைங்க இருக்க,உடம்பு சரியில்லாதவன்னு தெரிஞ்சு கட்டிட்டு ஒழுங்கா குடும்ப நடுத்துறவன முத்தழகி தான் பேசியே தொறத்திருக்கு.அன்பும்,அக்கறையும் இருந்தும் நல்ல புரிதல் இல்லாததால இவங்களும் பிரிஞ்சிருந்து,அன்பழகிக்கு ஆபத்தை உண்டாக்கிட்டாங்க.
பதினாலு வயசு பையனா இருந்தாலும் அசோக் திருமணத்தை தடுக்க முயற்சி செய்வதும், கணபதி , முனீஸ்வரிக்கு உள்ள தொடர்பை,அன்பழகியை திருமணம் செய்யும் காரணத்தை சொல்வதுடன் அம்மாவினால் அண்ணனும் தவறானா பாதைக்கு செல்வதாக கூறி ஆசிரமத்தில் சேர்த்து விட சொல்வது அருமை.
சிறுவனாக இருந்தாலும் அவனுக்கு இருக்கும் தெளிவு இல்லாததால் வயசான காலத்துல கிழவி வாய வச்சுட்டு சும்மா இருக்காம பேசினதுல,அன்பழகி தற்கொலை செய்யற முடிவுக்கு வந்துட்டா.கெட்டதுலேயும் ஒரு நல்லதா அருள்,அன்பு கல்யாணம் நடந்திருச்சு.