அனலும் மழையும் 5

Advertisement

Lakshmi N

Writers Team
Tamil Novel Writer
Hi every one ....here it is next epi.........it is small epi i know ......but suspense were opening next epi so oly i stoped here........enjoy reading thanks for your commends and likes.......thank you all......:):)


அத்தியாயம் 5:



அப்பா என்று சொந்தத்துடன் தன் தோளில் சாய்ந்த மகளை தன்னுடன் சேர்த்து அனைத்தவன் சுபாவை முறைத்தவாரே நின்றான்.
முதலில் திகைத்த ராம் சற்று நேரத்திலேயே சம நிலைக்கு வந்தவன் அர்ஜூனை பாத்தான்.


சுபாவை பார்த்தவாரே தன்னை நிலைபடுத்தி கொண்டு, தன் மகளையும் தூக்கிகொண்டு பார்டி நடக்கும் இடத்துக்கு சென்றுவிட்டான். அவன் உள்ளே வந்தவுடன் அவன் அருகே வந்த பெற்றோரிடம், எந்த முன்னறிவிப்பும் இன்றி


அம்மா அப்பா “இது உங்க பேத்தி பேர் அபிநயா , இது உங்க மருமகள் பேர் சுபத்ரா” என்றான் பின்னால் திரும்பாமலே. அப்பொழுது தான் பார்வதி சுபாவையும் அபியையும் பார்த்தவர் கண்கலங்கி அபியை முத்தமிட்டார். ஜானுவும் தந்தையும் சிரித்து கொண்டு அபியை முத்தமிட்டனர் .

சுபா தான் குழம்பி போனால் தான் வந்ததை பார்க்கவில்லை பின் எப்படி பின்னால் நிற்பதை அறிந்தான் ? அது அவன் மட்டுமே அறிந்தது.{பின்னாடி சொல்லுவான் மா…..)

அவள் குழம்பி இருப்பதை பார்த்து யாரும் அவள் அருகில் செல்லவில்லை.

ராம் அவனை முறைப்பதை பார்த்து அவனருகில் வந்தவன்

“ என்னடா”

“ என்ன நடக்குதுடா இங்க…..கல்யாணம் ஆச்சுனு சொன்ன… குழந்தை இருக்குனு சொல்லவேயில்லடா நீ” ஒரு சின்ன பையன ஏமாத்திருக்க ம்ம்ம்….இதெல்லாம் சரியில்ல சொல்லிட்டேம் ஆமா…………என்றான் வடிவேல் பானியில்.( நமக்கு தெரியாம இது வேறயா……)



பின்பு பார்டி தொடங்க வேண்டும் என்பதால் மேடையை நோக்கி சென்றனர்,

மேடை ஏறிய அர்ஜீன் “ ஹாய் ஃபிரண்ட்ஸ்……இன்னைக்கு உங்க எல்லாருக்கும் முக்கியமான விஷயங்கள் சொல்லத்தான் இந்த பார்டி அரேன்ஜ் பண்ணியிருக்கு.



அவன் மேடையில் ஏறியதுமே சுபாவிற்கு தெரிந்துவிட்டது அடுத்து என்ன நடக்கும் என்று, அவன் குடும்பத்தினரோ இதைதான் எதிர்பார்த்தோம் என்பது போல முகபாவனையுடன் இருந்தனர்.

தாயை பார்த்தால் இதை நான் முன்பே அறிவேன் என்பது போல் எந்த வித அதிர்ச்சியும் இல்லாமல் இருந்தார்.

தன் மகளோ தந்தையை இனி பிரிய மாட்டேன் என அவன் தொள்களில் ஒய்யாரமாய் வீற்றிருந்தாள்.

தான் மட்டும் தனித்து விட்டது போல் ஆயிற்று.

கண்ணீர் கண்களை மறைக்க இனி தன்னை அவன் விடமாட்டான் என்பதை அறிந்து ஒன்றும் செய்ய இயலாதவளாய் நின்றாள்.

அவள் பார்க்காமல் விட்டது இரண்டு பேர்.....அவர்கள் அவளையே தான் பார்த்தனர். மீண்டும் இவளா? என்று.......


அர்ஜீன்” இந்த பார்டி நான் company பொறுப்புகள் எடுத்ததுக்காக் மட்டும் இல்ல, என் தங்கைக்கு இன்னைக்கு பிறந்த நாள் அது மட்டும் இல்லாம , என் தங்கைக்கும் ராமுக்கும் கல்யாணம் பன்ன முடிவு எடுத்துருக்கோம், then ஒரு முக்கியமான ஆள உங்களுக்கு அறிமுகபடுத்தனும்…இவங்க தான் அது ..........என் பொண்ணு பெயர் அபிநயா …அப்றம் என்று சுபாவை பார்த்தான். தன்னையறியாமல் மேடை ஏறி அவன் அருகில் நின்றால் இவங்க தான் என் மனைவி பெயர் சுபத்ரா.
That’s all friends…..have a dinne…. pls. thank you. என்று கூறி மேடையை விட்டு கீழ் இறங்கினான். சுபத்ராவும் பின்னே சென்றாள்.



பார்டி முடிந்தவுடன் குழந்தையை தூக்கி கொண்டு தன் அறைக்கு சென்றுவிட்டான். யாரையும் திரும்பி பார்க்காமல் சுபா இப்பொழுதும் யாரிடமும் பேசவில்லை எதுவும் கேட்கவில்லை அது அவளுக்கு தோனவும் இல்லை. அவளுக்கு தனிமை வேண்டும். என்ன செய்ய வேண்டும் ,,,என தெரியவில்லை.

பார்வதி சுபாவின் தாய்க்கு அறை ஒதுக்கி அவரை ஒய்வு எடுக்க சொன்னார்.பின்பு அனைவரும் பேச வார்த்தைகளின்றி தத்தம் அறைக்கு சென்றனர்.

பார்வதி வந்து அர்ஜூன் அறையை காட்டி போக சொன்னார். அவளுக்கு இருந்த மன நிலையில் எதையும் கவனிக்க தோன்றவில்லை. அறைக்கு சென்று அங்கு இருந்த சோபாவில் சாய்ந்தவள் நினைவுகளில் பயணம் செய்தாள்.

அறைக்கு வந்த அர்ஜீன் தன் மகளை உறங்க செய்துவிட்டு அங்கிருந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்தான் அப்பொழுது கதவு திறக்கும் ஓசையில் நிமிர்ந்து பார்த்தவன் கண்களில் சுபாவின் செயல்கள் அனைத்தும் விழுந்தது இருந்தும் ஒன்றும் சொல்லாமல் இருந்தான்.



அந்த அறையில் இருந்த இருவர் நினைவும் ........நினைவு பயணம் செய்யும் அதே வேளையில் மற்றும் இருவரும் அதே பயணத்தில் இருந்தனர்.



அந்த இருவரை இவர்கள் நினைவு கொண்டால் …………………….

நினைவு வருமா …………..

விதி தூரம் நின்று சிரித்தது….உங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்திருக்கிறேன் பயன்படுத்துங்கள் என்று…………

மலராத மொட்டுக்கள் பல………விரியுமா? வாசம் வெளியில் வீசுமா?

பொறுத்திருப்போம்………..



மழை வரும்……………………………
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top