அத்தியாயம் - 3

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
சீமை சீயான் - 3



“ஏலேய்! எசக்கி நில்லு டா”


“நில்லு டாங்கிறேன்....” வயதில் முதிர்ந்த ஓர் மூதாட்டி முத்துவின் பின் கூவி கொண்டே வர காது கேளாதவன் போல் சென்று கொண்டு இருந்தான்.


“ஏலேய்! எடுபட்ட பயலே.......” கடுப்பாகிய கிழவி சற்று உரக்க குரல் கொடுக்க வெகு பொறுமையாகத் திரும்பியவன் “கூப்டியா அப்பத்தா" வலது காதினை தேய்த்துக் கொண்டே தனது முன் மூச்சு வாங்கி நிற்கும் மூதாட்டியை பார்த்து அவன் நிதானமாகக் கேட்டு வைக்க அவனைக் கொலைவெறியோடு பார்த்தவர்


“ஏன்டா நீ தெக்காலப் போகும் போதே உன் பின்னாடி நாயாட்டம் கத்திக்கிட்டு ஓடியாரேன் ராசா கணக்கா மெதப்புல போற”


“நீ கூப்புட்டும் நான் போவேன்னா காது கேட்கல அப்பத்தா சரி எதுக்குக் கூப்புட்ட” சொல்லு வெகு அலட்சியமாகக் கேட்டவன் மீது கோபம் வந்தாலும் காரியம் முக்கியம் என்பதால்.

கோபம் மறந்தவராக “அது நேத்து நம்பப் பொன்னுரங்கம் வீட்டுல எதோ விவகாரம் ஆயிபோச்சாமே வண்டி.. வண்டியா... ஆளுங்க கட்டையோட வந்தங்களாமே” மோவாயில் கைவைத்து கண்களை உருட்டி புறணி பேசும் அந்த மூதாட்டியை முறைத்து பார்த்துக் கொண்டு இருந்தான் முத்து இதற்குத் தானே அவன் கண்டும் காணாதது போல் வந்தது.


“வண்டி வண்டியா…. கட்டையோட……..நீ பார்த்த”


“நம்ப மாரியம்மா தான் சொன்னாப்பு அதுவும் உன் கூட்டாளி வேம்புவ நான் தான் கட்டிக்கப் போறேன்னு சொல்லுச்சாமே இதை முன்னயே பண்ணி இருந்தா அந்த புள்ளையும் நல்ல பொழச்சு இருக்கும்” என்று பெருமூச்சு விட


“ஆமா நல்ல பொழைக்க விடுவீங்களே.இங்க பாரு அப்பத்தா போனாப் போகுதுனு சின்னம்மா சோறு போட்டு பார்த்துக்குது அதுக்கு ஒத்தாசையா ஏதவாது சோலி இருந்தா பாரு.அத விட்டுட்டு ஊர் வம்பு பேசிகிட்டு இருந்த” அவரை எச்சரித்துவிட்டு ஓர் அடி வைக்க ஓங்கி ஒலித்தது மூதாட்டியின் குரல்.


“அடேய்! என்ன தைரியம் இருந்தா உன் சின்னாயிக்கு வேல பார்க்க சொல்லுவ என் மகன கைக்குள்ள போட்டுக்கிட்டு இந்த வயசுலயும் மினிக் கிட்டு திரியிறா அவளுக்கு நான் வேல பார்க்கணுமா” என்பது கடந்த நிலையில் ஜம்பம் பேசியவரை என்ன செய்தால் தகும் என்று எண்ணியவன்

“ஏன் மருமகளுக்கு வேல பார்த்தா என்ன குறையுதுனு கேட்குறேன்” பதிலுக்கு அவனும் எகுறினான்.


“நாளைக்கி உனக்குன்னு வருவாள அந்தப் பிச்சி சிறுக்கி அவகிட்ட உங்க ஆத்தாக்காரி எப்படி இருக்கானு நான் பாக்கேன் டா கொட்டி பையலே” தாடையை தோளில் இடித்து கொண்டு திரும்பி செல்ல


அவர் பேச்சில் அதிர்ந்தவன் “என்னது பிச்சியா!...ஏய்!..... அப்பத்தா நில்லு….அட நில்லுங்குறேன்” அவர் கையை பிடித்து தடுத்தவன் “யாரு சொன்னா உனக்கு அவளை நான் கண்ணாலம் கட்டிக்குவேன்னு”


“ஊரே சொல்லுது” அவர் அசால்ட்டாகக் கூற


“என்னது ஊரு சொல்லுதா சொன்னவனைக் காட்டு அவனைக் காட்டு காட்டுனு காட்டுறேன் சண்டாள பாவிங்களா என்ன பாதாளத்துல தள்ளி கொள்ளப் பாக்குறானுகளா” வழமை போல் வேட்டியை பட்டப்பட்டிக்கு மேல் தூக்கி கட்டியவன் குரல் உயர்த்தி ஆவேசமாக பேச அவனுக்கு பின்னால் பார்த்த கிழவி அவ்விடம் விட்டு விரைய.


தன்னை பார்த்து தான் பயந்து விட்டார் என்று எண்ணிய முத்து “அந்தப் பயம் இனி பேசுவ” என்று திரும்பியவன் அதிர்ந்து நின்றான் அங்கு உக்கிரமாக நின்று கொண்டு இருந்தாள் பிச்சி.


மூதாட்டியின் ஓட்டம் எதனால் என்று அறிந்த முத்து நொந்து போனான் பேசுனது கேட்டு இருப்பாளோ நிக்கிறதே தினுசா இருக்கே அதனை வெளிக்காட்டாது வாறு அவளைச் சுற்றிக் கொண்டு செல்ல பார்க்க.


“யோவ்! நில்லு யாரை பார்த்துப் பாதாளமுன்னு சொல்லுற” சொடக்கிட்டு அழைத்துக் கேள்வி கேட்டவளின் செய்கை கோபத்தை கொடுக்க தன் முன் நீட்டிய கையைக் கோபமாகப் பிடித்து முறுக்கியவன்.


“என்னடி கையு நீளுது உடைச்சு புடுவேன் பாத்துக்கோ ஆமா நீ பாதாளம் தான் என்னடி பண்ணுவ” கண்ணில் நீர் நிரம்ப அவனிடமிருந்து கைகளை உருவி கொண்டு திரும்பியும் பார்க்காமல் சென்றுவிட்டாள் மனதில் அத்தனை வலி.


அவளது கண்ணீர் எதனால் என்று புரியாமல் குழம்பியவன் யோசனையுடன் நடந்து சென்றான் ஏனென்றால் தன்னிடம் சரிக்கு சரி சண்டை இடுபவள் இன்று கண்ணீர் வடித்தது ஏன்?என்ற கேள்வி தான் ஆனால் அவன் அதனை முழுதாக யோசிக்கவில்லை (அவனது யோசனைக்கு அப்பாற்பட்டவள் அல்லவா பிச்சி)


வேம்பு இல்லம்……….



வேம்பு நேற்று நடந்ததை பற்றித் தான் எண்ணி கொண்டு இருந்தாள். தனது வீட்டின் முன் வந்து நின்ற ஜனத்தைப் பார்த்து பயந்து போய் அவரது தங்கை குடும்பத்தை அழைத்து விட்டார் பொன்னுரங்கம்.முனியாண்டி வருவதற்குள் இவர்கள் பேச்சை தொடங்கி விட்டனர்


“என்ன பொன்னுரங்கம்? என்ன முடிவு எடுத்திருக்க ?என்ன சொல்லுறா உன் பொண்ணு? எங்க சொந்தத்துல யாரை கை காட்டுனாலும் சரிதான்” என்று கேள்வியும் அவரே பதிலும் அவரே என்பது போல் பெரியவர் பேச அவர் பேசுவதைக் கேட்டபடியே வந்தனர் சீயானும்,முனியாண்டியும்.


கூட்டத்தில் சலப்பு சலப்பு வர பெரியவர் பேச்சு நின்றது அனைவரையும் பார்த்து “வாங்க” என்று கை கூப்பிய இருவரும்.திண்ணையில் அமர்ந்து கொண்டு இப்போ பேசு என்றவாறு முனியாண்டி கை அசைத்தார் இவர்கள் வருகையை சற்றும் எதிர் பார்க்கவில்லை என்பதை அவர்கள் அதிர்ச்சியே சொன்னது.



அதுவரை மிரட்டிய தொனியில் பேசியவர் பேச்சு குழைய “ஒண்ணுமில்ல முனியாண்டி நம்ம பாப்பாவா அப்படியே விட்டுற முடியுமா வயசும் ரொம்பக் கம்மி அதான் எங்க சனத்துலையே ஒருத்தர......... “


சீயான் பார்த்த அனல் பார்வையில் அவரது வாய் தானாக மூடிக்கொண்டது “ஒருதடவை உங்களுக்கு பொண்ணு கொடுத்ததே தப்பு இதுல எங்கனம் அதே தப்ப செய்ய” உருத்து விழித்தபடி சீயான் கேட்க பதில் அளிக்கத் தைரியமற்று அனைவரும் தலை குனிந்தனர்.


கோபத்தை அடக்க முடியாமல் தடுமாறியவன் “என்ன வேலா உங்க வீட்டு ஆளுங்களுக்கு எங்க குடும்பத்தைப் பார்த்தா எப்படி தெரியுதாம்” அங்கு நின்ற ஒருவனைப் பார்த்து சீயான் குரலை உயர்த்த.


ஐயோ! அண்ணே எனக்கு இந்த விவகாரம் தெரியாது அப்பா தான் தம்பி வீட்டுல பஞ்சாயத்துனு சொன்னாரு அதான் கூட வந்தேன்.இவுங்க பொண்ணு கேட்க வாரங்கனு ஆத்தா மேல சாத்தியமா தெரியாது அண்ணே” சீயானை பற்றி நன்கு அறிந்தவன் கால்களில் விழாத குறையாக அலறி விட்டான்.


அவனை விடுத்து அனைவரையும் பார்த்தவன் “உங்க பையன் எப்படி செத்தான்னு எனக்கு தெரியும் எல்லாம் தெரிஞ்சும் நான் ஏன் சும்மா இருக்கேனா என் வருங்காலப் பொண்டாட்டிக்காகத் தான்”


அழகாகச் சொல்லிவிட்டான் தனது விருப்பத்தை இதை விட யாராலும் உறவை சொல்ல முடியாது. அதனை முனியாண்டியும் ஆதரிப்பது போல மௌனமாக இருந்தார்.


இத்தனை நேரம் துள்ளிய அந்தப் பெரியவர் வாய் அடைத்து நின்றார் முனியாண்டி குடும்பத்துக்கும்,பொன்னுரங்கம் குடும்பத்துக்கும் இருக்கும் விரிசலை வைத்து தான் அவர் வேம்புவை பெண் கேட்டு தனது தம்பி மகனுக்குத் திருமணம் செய்தது இப்போதும் அதையே எண்ணி வர இங்கு கதையே வேறாகி போனது.


இனி எவனுக்குத் துணிவு வரும் சீயானை மீறி பெண் கேட்க சுவற்றில் அடித்த பந்தாக வந்தவர்கள் திரும்பி செல்ல பொன்னுரங்கம் முனியாண்டி காலை பற்ற பதறி போனவர் “மச்சான் என்ன பண்ணுறீங்க எந்திரிங்க முதல ஏலேய்! பாண்டி தூக்குலே”


“மாமா எந்திரிங்க என்ன இது” அவனது அதட்டலுக்கு அடி பணிந்தவர் சீயான் கையை பற்றி கொண்டு கண்ணில் வைத்து கொண்டார்



இதனை எல்லாம் வீட்டினுள் நின்று பார்த்து கொண்டு இருந்தாள் வேம்பு என்ன முயன்றும் மனதில் பரவும் நிம்மதியை அவளால் ஒதுக்க முடியவில்லை.


ஆனால் மனமோ நான் தவறான பெண்ணோ? கட்டிய கணவன் இறந்து இன்னும் ஒரு வருடம் கூட முடியவில்லையே?அதற்குள் மறுமணம் அதுவும்..... நான் வேண்டாம் என்று மறுத்த மாமானுடன் இது என்ன வதை.. ஐயோ இது கூடாது தவறு…….


இருவருக்குமே துரோகி ஆகிப்போனேன் என்ன செய்ய.... காலம் முழுமைக்கும் தொடரும் இந்தக் குற்ற உணர்ச்சி என்னையும் சரி மாமாவையும் சரி நிம்மதியா வாழ விடாது.என்னால் அவர் பட்ட அசிங்கம் போதும். இந்த மறுமணத்தால் ஏற்படும் தலை குனிவையும் அவருக்குத் தர விருப்பம் அற்றவளாக அழுது கரைந்தாள்.


பின்பு தீர்க்கமான ஒரு முடிவுடன் சீயானை பார்க்க சென்றாள் அங்கு அவனோ......

***************************

பிச்சி வழியும் கண்ணீரை கோபத்துடன் துடைத்து கொண்டே அம்மியில் மதிய உணவுக்கு மசாலா அரைத்து கொண்டு இருந்தாள்.அவளது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் உரல் அங்குமிங்கும் ஆட்டம் காட்ட அதனை ஓர கண்ணால் கவனித்து கொண்டு இருந்த அவளது தாய் .


“ஏண்டி!...யாரு மேல உள்ள கோபத்தை அதுகிட்ட காட்டுற நீ உருட்டற உருட்டுல உன் காலுல தான் அடி படப் போகுது பார் முட்டா சிறுக்கி”


ஏற்கனவே முத்துவின் பேச்சில் கோபத்தில் இருந்தவளை முத்து திட்டுவது போலவே தாயும் அதே வார்த்தை சொல்லி திட்ட சிலிர்த்து எழுந்தவள் “ஆமா நான் முட்டா சிறுக்கி நீ சீனா அதிபரு எதாவது பேசுன இருக்குற கோபத்துல அம்மிய தூக்கி தலைல போட்டுருவேன் போம்மா அதாண்டா” அவரை காந்தியவள் மீண்டும் தனது வேலையைத் தொடர்ந்தாள்.


அவள் அம்மி கல்லை தூக்கி கொண்டு வர நெஞ்சில் கை வைத்து அதிர்ந்தவர் “அடியாத்தி ராட்சசி செஞ்சாலும் செய்வடி நீ பிச்சி அப்பாரே இங்க வாங்க இந்தப் புள்ள என்ன கொள்ளப் பாக்குது”


இருவர் பேசுவதையும் கேட்டு சிரித்துக் கொண்டே உள்ள வந்த பிச்சியின் தந்தை “என்னடி புள்ளைக்குச் சின்னம்மா வேணும் போல அதான்”


“என்னது சின்னம்மாவா!........ நான் என்ன சொல்லுறேன் நீங்க என்ன உளறீங்க”


தந்தையின் பேச்சில் பிச்சி கோபம் மறைந்து சிரித்து விட்டாள் “எதுக்குடி சிரிக்கறவ” கணவனது பேச்சும் மகளின் சிரிப்பும் எரிச்சலை கொடுக்க அவர்களை முறைத்தவரே


“அம்மா அப்பாக்கு இன்னொரு பொஞ்சாதி வேணுமா அதுனால உன் மேல தாராளமா அம்மிய போட சொல்லுறாரு அது எப்படிப்பா ஒரே வார்த்தையில் அழகா சொல்லிப்புட்டீங்க”


“அடி கழுத அப்பனுக்கும் மவளுக்கும் ஆக்கி போடுற திமிரு இப்படியெல்லாம் பேச வைக்குது யோவ் பாவி மனுஷா இரவைக்கு வா...............” மேல பேச போனவர் வாய்யை பதறி போய் அடைத்தார் மருது.


“புள்ளய வச்சுக்கிட்டு என்ன பேச்சு பேசுற” கண்ணில் கண்ணீர் பெறுக “போயா அதாண்டா என்ன தொடாத” சிறு பிள்ளை போல் முறுக்கிய அன்னையையும்,அவரை கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்யும் தந்தையும் பார்த்த பிச்சிக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் மறுபுறம் ஏக்கமாக இருந்தது.



சத்தம் செய்யாமல் நகர்ந்து சென்றவள் நினைவில் மீண்டும் மன்னவன் எண்ணமே “அலட்டி கொஞ்சம் அசந்து இருந்தா கொத்திகிட்டு போயிருப்பா” வஞ்சனை இல்லாமல் வசை பாடிய படியே கடந்த காலத்திற்கு சென்றாள்.


முத்துவும் அதை தான் எண்ணி கொண்டு இருந்தான் எண்ணியவன் முகத்தில் புன்னகை.சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு அரசு மேல் நிலை பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய இளம் பெண்ணுக்கு தங்க வீடு எடுத்துத் தருமாறு பஞ்சாயத்தில் இருந்து உத்தரவு.அதன்படி மோனா என்ற பெண்ணிற்கு முத்துவின் வீட்டின் அருகில் ஒரு வீடு பிடித்துக் கொடுத்தனர்.


ஓர் நாள் ஊருக்கு உள் செல்லும் பேருந்தை அந்த ஆசிரியை தவற விட அங்கு வந்த முத்து அவருக்கு உதவ அன்றில் இருந்து டீச்சருக்கு முத்துவின் மீது ஒரு கண்.நாளடைவில் அது ஈர்ப்பாக மாற முத்துவிடம் தனது விருப்பத்தைச் சொல்ல தக்க தருணம் பார்த்திருந்த பெண்ணுக்கு அந்நாள் வெகு விரைவில் கிட்டியது அப்பெண்ணின் சாபம் தான் போலும்.


அன்று......


"ஐத்த"


“வா பிச்சி”



“எங்க உங்க மவன சீயான் மாமா கூடியரா சொல்லுச்சு”


“அவன் மொட்டை மாடில அந்த டீச்சர் பொண்ணுகூட பேசிகிட்டு இருக்கான் போய்ப் பார் ஆத்தா” வாஞ்சையாக கன்னம் கிள்ளியவரை சிரித்தவரே கடந்து மாடிக்கு சென்றவள் பார்த்தது அறையில் தனது காதலை சொல்லி கொண்டு இருந்த ஆசிரியரை தான் “முத்து உங்கள எனக்கு ரொம்பப் பிடித்து இருக்கு நல்ல பாத்துக்கிறிங்க,சிரிப்பா பேசுறீங்க, படிக்காட்டியும் நல்ல பழக்க வழக்கம் இருக்கு ,நீங்க ஓகேன அப்பாவை வந்து பேச சொல்லுறேன்”


அதற்கு முத்துப் பதில் சொல்லும் முன்னே அங்கே பாய்ந்திருந்தால் பிச்சி “அடிங்க என்ன தைரியமடி உனக்கு ஊருல வேற யாரும் கிடைக்கலையா”


அவள் போட்ட சத்தத்தில் பயந்த அந்தப் பெண் முத்துவின் பின் மறைய இன்னும் கோபம் வந்தது பிச்சிக்கு “ஏய்! என்ன அங்கன பதுங்குற வெளில வாடி முத்துவை நடுவில் வைத்துக் கொண்டு அந்தப் பெணின் முடியை பற்ற முயற்சித்துக் கொண்டு இருந்தாள் பிச்சி.


பிச்சியின் அதிரடியை எதிர் பார்க்காத முத்து அந்தப் பெண்ணைக் காக்க எண்ணி பிச்சியின் இடையில் கை கொடுத்து தன்னோடு இறுக்க அனைத்து அவளது கைகளைப் பற்றி இருந்தான்.அதில் அவள் உறைந்து நிற்க அவனோ “டீச்சர் நீங்க ஓடிடுங்க இந்த அடங்காபிடாரி அடிச்சிர போறா” அவன் சொல்லவும் துண்டை காணோம் துணியைக் காணோமென்று ஓடியது பெண் (அன்று ஓடியது தான் எங்குச் சென்றது என்று தெரியவில்லை)


அவன் அங்குப் பேசிக்கொண்டு இருக்கப் பிச்சி முத்துவை தான் காதலாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.


அதை உணராமல் “அடியேய்! ரவுடி பாவம் அந்தப் பொண்ணு என்ன அழகா கண்ணாலம் பண்ணிக்கக் கேட்டுச்சு கெடுத்துட்டியே வெள்ள போந்தா கோழி மாதிரி இருந்தா எல்லாம் போச்சு” போலியாக அவன் வருந்துவதை உண்மையென நம்பி அவனை உதறி தள்ளி விட்டு சென்று விட்டாள் அன்றில் இருந்து அவனிடம் இன்னும் மல்லுக்கட்ட ஆரம்பித்து விட்டாள்.


நடந்ததை எண்ணியவன் ‘ரவுடி பொம்பள எம்புட்டு தைரியம் இருந்தா அப்படி பணியிருப்பா பாவம் அந்த டீச்சர் எங்க போச்சோ என்ன பண்ணுச்சோ’ எண்ணியவன் மருந்துக்கும் வருத்தமில்லை மாறாகச் சிரித்துக் கொண்டான்.


இரவு நேரம் தோப்பு வீட்டில் கால்களை ஆட்டிக்கொண்டு ஒரு கையை இடது புறமாகத் தலையில் வைத்து கொண்டு வலது கையில் போனை வைத்து எதையோ செய்து கொண்டு இருந்தான் சீயான்.


இரவில் அவனும் முத்துவும் இங்கு வந்து உறங்குவது வழமை,இன்று முத்துவின் தாய்க்கு உடல் சீராக இல்லாத காரணத்தால் முத்துவை தன்னுடன் படுக்குமாறு சொல்லவும் சீயான் மட்டும் வந்துவிட்டான் விதியின் கணக்கே தனித் தான் போலும்.


யாரோ வரும் அரவம் கேட்கவும் தலை நிமிர்ந்து பார்த்தவன் அங்கு வேம்புவை காணவும் பதறாமல் மீண்டும் தனது வேலையைத் தொடர்ந்தான் அவனது அலட்சியம் வலிக்கத் தான் செய்தது இருந்தாலும் பேசியாக வேண்டிய நிலை என்பதால் வலியை மறைத்து கொண்டு....”மாமா! ..” என்றழைக்க


ம்..... என்ற வார்த்தை மட்டுமே பதிலாக தந்தான் சண்டியர்.


“மாமா .... நான் உங்ககிட்ட பேசணும்”


“பேசு ...”



“நான் ....எனக்கு.....நீங்க....வேணாம்... திக்கி திணற”


அவள் சொல்ல வருவது புரிய வேகமாக எழுந்து அமர்ந்தவன் “எனக்கும் தான் நீ வேண்டாடி என்ன பண்ண எங்க ஆத்தாக்காக உனைய சகுச்சு வாழ வேண்டியதா இருக்கு”


அவனது பேச்சில் கண்ணீர் பெறுக “அதான் வேண்டாமுன்னு சொல்லுறேன் அப்படி எதுக்கு ஒரு வாழ்க்கை வாழனும். நான் தப்பு பண்ணதுக்குக் கடவுள் எனக்குத் தண்டனை கொடுத்துட்டாரு அதனால”


“அதுனால” அவளைக் கூர்மையாகப் பார்த்து கேட்டவன் கண்களைப் பார்க்க இயலாது வேறு புறம் பார்த்துக் கொண்டே “எனக்கு கல்யாணம் வேண்டாம் நான் எங்கயாவது போறேன்”


“தாராளமா போயிட்டு வா அதுக்கு முன்னாடி” என்றவன் யோசிக்காது அவளை ஒரே தூக்காகத் தூக்கினான் அதில் பயம் கொண்டு அலறியவள் “மாமா என்ன பண்ணுறீங்க இறக்கி விடுங்க மாமா”


மாமா!..... கத்தியவாரே அவனது தோள்களில் அடித்தவளை பொருட்படுத்தாது அந்த ஓட்டு வீட்டுக்குள் நுழைந்தவன் கதவை சாத்தினான்.அங்கு உள்ள அறைக்கு அவளை தூக்கி சென்றவன் அவளைக் கட்டிலில் விட்டு ஒரு சிறு டப்பாவை எடுத்து வாய்க்குள் சரித்துக் கொண்டு அவள் மேல் சரிந்தான்.


அது மட்டுமா தான் உட்கொண்டதை அவளுக்கும் தனது இதழ் மூலம் கிடத்த என்ன நடந்தது என்று உணரும் முன்னே ஆதி முதல் அந்தம் வரை நடந்து முடிந்தது கருக்கலில் பதறி அடித்து வந்த முத்து ஆம்புலன்ஸ் கொண்டு வந்து இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அள்ளி சென்றான்.


அந்ந மயக்கத்திலும் சீயான் புன்னகைக்கக் காண்டான முத்து “திமிரு புடுச்சவனே மனுசனாட நீ…………. நீ எல்லாம் நல்ல வருவடா....... ஒரே ராவுல அம்புட்டையும் முடுச்சிட்டியே பங்காளி…”


இனி சீயான் சீறுவான்…………….
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top