அத்தியாயம் - 14

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
களவு கொண்டானடி தில்லையிலே!

களவு - 14

மடந்தையாக வந்தவள் அரிவையை நோக்கி அடி எடுத்து வைத்தாள்,சிவகாம சுந்தரி.

படித்து முடித்து அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு கிட்ட, அதனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

இந்த இடைப்பட்ட காலத்தில், அதாவது பள்ளிப் பருவத்தை முடித்து மேற்கொண்டு படித்துக் கொண்டு இருக்கும் காலத்தில், சிவகாமி வாழ்க்கைப் பாடத்தையும் கற்க ஆரம்பித்து விட்டாள். அதில் நாச்சியின் பங்கு எத்தகையது என்பதனை, வார்த்தையால் சொல்ல முடியாத ஒன்று.

பெரிய நாச்சியின் செயல்களைப் பார்த்தால், என்ன பெண்மணியடா சாமி என்று தான் எண்ணத் தோன்றுகிறது.அந்த அளவிற்கு, சிவகாமியை உருவாக்கி இருந்தார். அந்தக் காலத்தில் ஒரு பெண் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிவதே பெரும் பாடு அல்லவா.படிப்பறிவு கொண்டு செயல் பட்டாலும் பகுத்தறிவு கொண்டு வாழ்க்கையை வாழ கற்றுக் கொடுத்தார், நாச்சி.

என்னதான் படிப்பு இருந்தாலும், குடும்பப் பொறுப்பும் பாரம்பரியமும் முக்கியம் அல்லவா? அதிலும் வலுவாகத் தனது கால் தடத்தைப் பதித்தனர், மாமியாரும் மருமகளும்.

ஆம் படிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், அம்பலத்தானுக்கு அனைத்தும் செய்வது சிவகாமி தான். ஆதி முதல் அந்தம் வரை கணவரின் குணத்தைக் கணித்து இருந்தாள் பெண். அவள் படிக்கத் தவறியது மனதையோ?

அவரோ சிவகாமியின் சேவையில் சற்று தடுமாறினாலும், பிற்பாடு இயல்பாகப் பழகி கொண்டார். ஓர் இரு வார்த்தைகள் மட்டுமே இருவருக்குள்ளும் என்றாலும், அந்த வார்த்தைகள் அனைத்தும் பொது வாகத் தான் இருக்கும்.

இன்னும் முகம் பார்த்துப் பேசவில்லை அம்பலத்தான். அதனை சிவகாமியும் அறிந்து கொள்ளவில்லை என்பதை எங்கு போய்ச் சொல்ல.

நாச்சிக்கு மகனின் ஒதுக்கம், சிவகாமியின் படிப்பையும் வயதையும் கொண்டே என்று எண்ணினார். அவரும் மகனின் மனதை படிக்கச் தவறி விட்டார். அது சரி யானைக்கும் அடி சறுக்கும் அல்லவா!

நாச்சி தனக்கு அடுத்து சிவகாமி என்ற நிலையில், அவருக்குக் குடும்பத்தின் பொறுப்பைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லிக் கொடுத்தார்.முதலில் வீட்டின் உணவுப் பழக்கம், வர செலவு என தொடங்கி நாத்திகளின் கடமையில் சென்று, உற்றார் உறவினரில் முடிந்தது.

அவர்கள் பாரம்பரியமான உணவு வகைகள், அதிலும் அம்பலத்தானுக்குப் பிடித்தவை என்று கற்றுக் கொண்டாள்.அங்காளி பங்காளி என்று நெருங்கிய உறவினர்கள், அவர்களுக்கு நல்லவை அல்லவை செய்யும் முறை. தான் என்ன முறை, அம்பலத்தான் என்ன முறை என்று ஒவ்வொன்றையும் சொல்லிக் கொடுத்தார்.

மாமியும் மருமாளும் கிடைக்கும் நேரம் முழுவதும் இதனைத் தான் பேசுவார்கள்.வீட்டில் உள்ள பொன்னும் பொருளும் நாத்திகளின் கடமைக்கு எவ்வாறு உதவ வேண்டும் என்பதை, மாமியார் சொல்ல கணக்கு மேதை மெச்சிக் கொண்டாள், மாமியாரின் அறிவை.

ஒவ்வொரு பொண்ணுக்கும் சம பங்காக அனைத்தும் பெருக்கப் பட்டது, அதில் சிவகாமியும் அடக்கம்.அவரைப் பொறுத்தவரையில் இவளும் பெறாத பிள்ளை தானே.

அது மட்டுமா, வெளி இடங்களில் சிவகாமியை முன் நிறுத்தி அவர் செயல் பட, அனைவருக்கும் புரிந்து போனது நாச்சியின் நோக்கம்.

இதில் தான் அப்புச்சி புருவம் சுளித்தார். மனதுக்குள் அவருக்கு யோசனையாக இருந்தது. அதனை அவரது மனைவி வாய் விட்டு, கேட்டே விட்டார்.

"என்னங்க அண்ணி பொது இடத்துக்கெல்லாம் அந்தப் புள்ளய கூட்டிட்டு வாறாக. ஆனா அம்பலம் தம்பி உமையாளை கட்டிக்கிடுறேன்னு சொல்லுது. என்ன செய்தி? எனக்கு ஒன்னும் சரியாப்படல, பார்த்துக்கிடுக."

“எனக்கும் யோசனையாத் தான் இருக்கு. அம்பலம், நாளை மக்கா நாள் பரிசம் போட ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்காக போல. நேத்து பொழுதோட கோவிலுக்குப் போனப்ப முத்துவை பார்த்தேன். எனக்குத் தகவல் சொல்லச் சொல்லி இருக்கான்.” என்றதும் அதிர்ந்து விட்டார், அந்தப் பெண்.

“என்ன சொல்லுதீக?”

“ஒன்னும் சொல்லுறதுக்கில்ல. அந்தப் புள்ள கணக்கு டீச்சர் ஆகிடுச்சு. இனி என் வாழ்க்கையைப் பார்க்கணும். தெளிவா சொல்லிப் புட்டாக. நம்ப என்ன செய்ய முடியும்? என் கூடப் பொறந்த பொறப்ப நெனைச்சாதேன் பயந்து வருது. அந்த நடராஜன் மேல பாரத்தைப் போடுவோம். அவன் விட்ட வழி.”

அதன் பின், இரு பெரியவர்களும் மௌனமாகக் கடந்தனர்.

****

இன்றைய விடியல் வழமைக்கு மாறாக, சற்று கடுமையாக இருக்கப் போவதை அறியாமல், தனது காலை நேர வேலைகளை சக்தி மற்றும் உலகம்மையுடன் கேலி பேசி கொண்டும், சிரித்துக் கொண்டும் செய்து இருந்தாள், சிவகாமி.

மூன்று பெண்களும் திருமணம் செய்து போன பின், இவர்களது நட்பு இன்னும் பலம் கொண்டது. ஒரே வயது என்பதால் இயல்பாக இணைந்து கொண்டனர்.

“சிவா சீக்கரம் முடி. அக்காங்க வராக, கடைக்குப் போகணும் துணி எடுக்க.”

“நானும் கேட்கணும் இருந்தேன். என்ன விசேஷம்? மாமி, என்னாண்ட எதுவும் சொல்லலை. ஆனா, உங்க அத்தை,மாமா,சித்தப்பானு எல்லாப் பெரியவாளும் வந்து இருக்காங்க.”

“எனக்கும் தெரியல. அக்கா கிட்ட கேட்டேன், அவுக அண்ணன் தான் கிளம்பி வரச் சொல்லுதுனு சொல்லுறாக.”

சக்தியின் பதிலில் இரு பெண்களும் யோசனையுடன் வேலைகளைச் செய்தனர்.நாச்சி வீட்டு பெண்கள் உறவினர்கள் என்று மதிய உணவு கலை கட்ட பொழுது சரியாக தான் இருந்தது பெண்களுக்கு

மாலை வேளை நெருங்கும் சமயம், நாச்சியிடம் சென்ற சிவகாமி,

“மாமி, நாளையில இருந்து வேலைக்குப் போகணும். நான் செத்த அப்பா அம்மாவை பார்த்துண்டு வரவா. அவா கிட்டையும் ஆசி வாங்கனும், மாமி.”

“நல்லா போயிட்டுவா பாப்பா. ஆனா, வெரசா வா. எனக்கு என்னமோ மனசே சரியில்லை. இந்த வூட்டு ராசா ஏன் கூட்டத்தைக் கூட்டி வச்சு இருக்காருன்னு புரியல சாமி.”

“எதுவும் முக்கியமான சங்கதியா இருக்கும் மாமி. இல்லன்னா, அவா கூடி இருக்க மாட்டா.”

“சரி பாப்பா. பொழுதோட வா, ஓடு.” என்றதும் சிட்டாகப் பறந்து சென்றது சீட்டுக் குருவி.

அதன் பின் அம்பலத்தான் வீட்டுக்கு ஒவ்வொருவராக வர, அம்பலத்தானும் உள்ளே நுழைந்தார்.

அதற்காகவே காத்துக் கொண்டு இருந்த சிவகாமி, அவரை அழைத்து விஷயத்தைக் கேட்க, அவர் தலையில் இடி விழாத குறை தான்.

*

அங்கேயோ வெகு வருடங்கள் சென்று தனது வீட்டுக்குள் நுழையும் மகளைப் பார்த்து அதிர்ந்து நின்றனர், பெரியவர்கள்.

அவர்களை நோக்கி அம்மா என்று ஓடி வந்தவள், கண்ணம்பாவை கட்டி பிடித்துக் கண்ணீர் விட, அவளது தலையை வாஞ்சையாகத் தடவி விட்டார் ,சுந்தர் பட்டர்.

“எப்படியடி இருக்க. இப்போதான் நோக்கு எங்க ஞாபகம் வந்துச்சா?”

“அப்படி இல்லமா..” என்றவள் தனது தந்தையிடம் சென்று,“அப்பா..” என்று அவரது பாதம் தழுவ,

அவளைத் தடுத்தவர் “நான் உன்னைக் காக்கத் தெரியாத பாவி, ராஜாத்தி.”

“என்ன பேசறேள்? நீங்க கொடுத்த வரம்,இந்த வாழ்க்கை. எதையும் யோசிக்காதேள். உடம்பப் பார்த்துக்கோங்க.”

“நேக்கு என்னடி? உன் ஆம்படையான் பெத்தவளா நெனைச்சு எங்களைப் பார்த்துக்குறான். நாங்க ஷேமமா இருக்கோம்.”

“நேக்கு அது போதும்ப்பா.அவா மனசுலேயும் ரொம்பப் பெரியவா..! சரி அத்த விடுங்கோ. நேக்கு வேளை கிடைச்சு இருக்கு.”

“எங்க சிவகாமி?” தந்தை ஆவலாகக் கேட்க,

தாய் முகம் சுளித்தாள்.

“சிவா, என்ன இது? இப்போ நோக்கு எதுக்கு வேலை? படிப்பை முடிச்சுட்டதானே, இனி குடும்பத்தைப் பார், போதும்.”

“ப்ச், என்ன பேச்சுடி இது? என் பொண்ணு சுயமா நிற்க வேண்டாமா?”

சுந்தர் பட்டர் பேச்சில், எரிச்சல் ஆன கண்ணாம்பா,

“இங்க பாருங்கோ! இது வரை நீங்க பண்ணுதெல்லாம் போதும்! இனி அவளைக் கெடுக்காதேள். அவ வாழ்க்கையை அவ வாழட்டும். அவரும் பாவம் இத்தனை நாள் தோள் கொடுத்துட்டார். இனியும் அவரைச் சிரமம் படுத்தாதே!”

“என்ன பேச்சும்மா? மாமியே வேலைக்குப் போகச் சொல்லிட்டா, தெரியுமா?”

“அவா சொல்லுவா. அவாளுக்குப் பெரிய மனசு. நோக்கு புத்தி வேணாமா?”

இவர்கள் வாக்கு வாதம் உச்சம் தொட, சுந்தர் பட்டர் குரல் உயர்த்தினார்.

“கண்ணு பேசாம இரு. வந்த பிள்ளைக்குச் சாப்பிட கொடுக்காம, அவளை நிக்க வச்சுண்டு கேள்வியா கேட்டு கொல்லு.”

அதற்கும் அவர் எதுவோ சொல்ல வர, வீட்டு வாசலில் இருந்து குரல் கொடுத்தார், சிவநேசன் மனைவி.

“சிவா!... சிவா!...”

“யாரும்மா?” என்று கேட்டு கொண்டே சுந்தர் வாசலை நோக்கி வர

“சிவா எங்க சாமி?”

“உள்ளதாம்மா இருக்கா நீங்க?..”

தனது பெயர் கொண்டு அழைக்கவும், அதுவும் பழகிய குரல் என்றதும் விரைந்து வந்த சிவகாமி, அங்கு இருந்த பெண்ணைக் கண்டதும் “அக்கா, வாங்கோ” என்று அழைக்க

அவரோ பதற்றமாக,“சிவா, நீ வா. ஆச்சி கூப்புடுறாங்க.”

“ஏன், இப்போதான மாமியை பார்த்துட்டு வந்தேன்?” என்றவளை கடிந்து கொண்டார், கண்ணாம்பா.

“அந்தப் பொண்ணு பதறிட்டு பேசுறா. நீ என்ன கேள்வி கேட்டுண்டு இருக்க? ஓடு முதல்ல.” என்றதும், மறுவார்த்தை பேசாமல் இரு பெண்களும் கிளம்பிச் சென்றனர்.

“என்னடி இது? பிள்ளை இப்போதான் வந்தா..”

“ப்ச் நீங்க பேசாம இருங்கோ, அங்க என்னவோ?” என்றவர், அதன் பின் சிவகாமியை பற்றிப் பேச ஆரம்பித்து விட்டார். அவர்களுக்குள் வாக்கு வாதம் சென்றது. கல்யாணம் தொடங்கி, இன்று வரை நடந்தவைகளை எண்ணி.

வெகு வருடங்கள் சென்று வீட்டுக்கு வந்த மகளை, உணவளித்துப் பார்த்துக் கொள்ள முடியவில்லை என்று துடித்துப் போனார்கள், பெற்றவர்கள்.

சிலருக்குப் பிறந்தகம் சாபம் போலும். அதனால் தான் என்னவோ அதனை ஈடு செய்ய, அந்த ஈசன் எண்ணியத்தின் பலன் தான், நாச்சி போலும்.

இரு பெண்களும் வேகமாக வந்து மூச்சு வாங்கி நிற்க, அங்கே கண்ட காட்சியை விசித்திரமாகப் பார்த்துக் கொண்டே கூடத்துக்குள் நுழைந்தாள், சிவகாமி.

பார்வை கண்கள் கலங்கி சிவந்திருந்த நாச்சியின் புறம் சென்றது.

அவளது வருகையில் பெரியவர்களுக்கு ஒரு விதச் சங்கடம் ஏற்பட, அமைதியாக இருந்தார்.உமையாள் பட்டுப் புடைவையில் நிற்க, அம்பலத்தான் பட்டு வெட்டி சட்டையில் இருந்தார்.

மனம் முழுக்க எதோ எதோ என்று அடித்துக் கொள்ள, பொறுமையாக வந்து நாச்சியிடம் நின்று, அவரது கைகளைப் பற்ற, வெடித்து விட்டார், பெண்.

“என்னை மனுச்சுக்கிடு, பாப்பா. நான் உனக்கு நியாயம் செய்யல! நான் பாவி.” என்று அழுதவரை உறவினர்கள் அனைவரும் அதிர்ந்து பார்க்க, அம்பலத்தானும் திடுக்கிட்டார்.

அவர் தாயின் இந்த பேச்சையும் அழுகையை எதிர் பார்க்கவில்லை. வேகமாக எழுந்தவர் “அம்மா..” என்று அழைக்க.

“வேணாம் சாமி, பேசாதீக.” என்றவர் மீண்டும் சிவகாமியை அணைத்துக் கொண்டு அழ,

அவளுக்குத் தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை,

“மாமி, எதுக்கு அழறேள் சொல்லுங்கோ?”

உற்றார் உறவினர்கள் எல்லாம் இருவரது பிணைப்பையும் இயல்பான செயலையும் பார்த்தவர்கள், அதிசயித்து நின்றனர்.

இருக்காதா பின்னே நாச்சியை ஆளுமையான பெண்மணியாகப் பார்த்தவர்கள், முன் நாச்சி உடைந்து அழுதால் அதுவும் மருமாளை தழுவு கொண்டு

உடன்பிறப்பின் அழுகையைக் காணச் சகிக்காத அப்புச்சி,

“சிவா பாப்பா, அம்பலத்தானுக்கும் உமையாளுக்கும் திருமண உறுதி பண்ணுறோம். அதுக்குத் தான், என் அக்கா அழுகுது.” என்று விஷயத்தை உடைக்க, அதிர்ந்து நின்றாள் பெண்

என் கணவனுக்குத் திருமணம் உறுதி. அவளது பார்வை அம்பலத்தானை நேர் கொண்டு பார்க்க, அந்தப் பார்வையில் தடுமாறி நின்றார், மனிதர்.

அவளது கண்ணிலும் கண்ணீர் வழிய,

அம்பலத்தான் "உங்களுக்கு நல்லது தான் பண்ணுறேன். என்ன விடச் சிறுசு நீங்க..” என்று மேல பேசப் போனவரை தடுத்த சிவகாமி,

அங்குள்ள சீர் தட்டுகளைக் கலைத்து தூக்கி போட்டு, தனது கோபம் போகும் வரை உடைத்து வைத்தாள்.

அவளது செய்கையில் அனைவரும் அதிர்ந்து விலகி நின்றனர். நாச்சி கூட அவளைத் தடுக்க வில்லை. அவரது அழுகையும் நிற்கவில்லை.

நாகம்மைக்கு அவரது செயல், அவரது மனதை எடுத்துரைக்க, தனது பெண்ணுக்கு என்ன வழி என்று கதிகலங்கிப் போனார். அது சரி அவர் கவலை அவருக்கு

சிவகாமியைத் தடுக்க யாரும் முன் வராத நிலையில், அம்பலத்தான் சென்று அவளது கைகளை இறுக்கப் பிடித்துத் தடுத்து, தனது அறைக்குள் இழுத்துச் சென்று கதவைடைத்து கொண்டார்.

என்ன செய்வது என்று பெரியவர்கள் நிற்க,

நாச்சி கோபமாக "எனக்குத் தெரியாம என்ன வேலை பண்ணிப்புட்டீக? ஏண்ணே, நீயும் கூட்டா?” என்று தனது தமையனைப் பார்த்துக் கேட்க.

அவருக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை.

அதற்குள் நாகம்மை பேச்சை வளர்க்க, இருவருக்கும் வாக்கு வாதம் சூடு பிடித்தது.

“என்ன மதனி விளையாட்டு பண்ணிக்கிட்டு இருக்கீக என் பொண்ணுக்கு என்ன வழி அதைச் சொல்லுக”

“என்ன கேட்டா ஏற்பாடு பண்ணீக? நானா வாக்கு கொடுத்தேன்?”என்று அவர் எதிர் கேள்வி கேட்க மௌனித்துப் போனார் நாகம்மை என்ன தான் அம்பலத்தான் பேசி இருந்தாலும் பெரியவர் என்ற முறையிலும் தாய் என்ற முறையிலும் நாச்சிக்கு விடயத்தை முறையாகச் சொல்லி இருக்க வேண்டுமோ என்று எண்ணினார்.

எண்ணியதற்கு தற்போது பலன் இல்லையே என்ன செய்ய.

“தப்புதேன் மதனி தம்பி தான் நான் பார்த்துக்கிடுறேனு சொல்லுச்சு”

“அப்போ அவுகளே வந்து உங்க பொண்ணுக்கு வழி சொல்லட்டும் என்ன கிட்ட பேசாதீக” என்றதும் நாச்சியின் பேச்சில் அனைவரும் தலையைக் கவிழ்த்து கொண்டனர்.

அப்புச்சி எதுவோ பேச வர அம்பலத்தான் அறையில் இருந்த பெரும் சத்தம் கேட்க அனைவரும் பதறிக் கொண்டு ஓடினர் நாச்சியும் உறவு முறையில் உள்ள பெண்மணி ஒருவரும் கதவை உடைக்காத குறையாகத் தட்டினர்

“தம்பி பாவம் சின்னப் பொண்ணு எதுவா இருந்தாலும் பேசிக்கிடலாம் கதவை திறங்க”

“சாமி!.... சிவா பாப்பா!... கதவை திற” என்று நாச்சியும் கதற மெதுவாகக் கதவு திறக்க பட அங்கே கண்ட காட்சியில் அனைவரும் ஐயோ!.... என்று ஓடினர்.


 

n.palaniappan

Well-Known Member
களவு கொண்டானடி தில்லையிலே!

களவு - 14

மடந்தையாக வந்தவள் அரிவையை நோக்கி அடி எடுத்து வைத்தாள்,சிவகாம சுந்தரி.

படித்து முடித்து அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு கிட்ட, அதனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

இந்த இடைப்பட்ட காலத்தில், அதாவது பள்ளிப் பருவத்தை முடித்து மேற்கொண்டு படித்துக் கொண்டு இருக்கும் காலத்தில், சிவகாமி வாழ்க்கைப் பாடத்தையும் கற்க ஆரம்பித்து விட்டாள். அதில் நாச்சியின் பங்கு எத்தகையது என்பதனை, வார்த்தையால் சொல்ல முடியாத ஒன்று.

பெரிய நாச்சியின் செயல்களைப் பார்த்தால், என்ன பெண்மணியடா சாமி என்று தான் எண்ணத் தோன்றுகிறது.அந்த அளவிற்கு, சிவகாமியை உருவாக்கி இருந்தார். அந்தக் காலத்தில் ஒரு பெண் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிவதே பெரும் பாடு அல்லவா.படிப்பறிவு கொண்டு செயல் பட்டாலும் பகுத்தறிவு கொண்டு வாழ்க்கையை வாழ கற்றுக் கொடுத்தார், நாச்சி.

என்னதான் படிப்பு இருந்தாலும், குடும்பப் பொறுப்பும் பாரம்பரியமும் முக்கியம் அல்லவா? அதிலும் வலுவாகத் தனது கால் தடத்தைப் பதித்தனர், மாமியாரும் மருமகளும்.

ஆம் படிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், அம்பலத்தானுக்கு அனைத்தும் செய்வது சிவகாமி தான். ஆதி முதல் அந்தம் வரை கணவரின் குணத்தைக் கணித்து இருந்தாள் பெண். அவள் படிக்கத் தவறியது மனதையோ?

அவரோ சிவகாமியின் சேவையில் சற்று தடுமாறினாலும், பிற்பாடு இயல்பாகப் பழகி கொண்டார். ஓர் இரு வார்த்தைகள் மட்டுமே இருவருக்குள்ளும் என்றாலும், அந்த வார்த்தைகள் அனைத்தும் பொது வாகத் தான் இருக்கும்.

இன்னும் முகம் பார்த்துப் பேசவில்லை அம்பலத்தான். அதனை சிவகாமியும் அறிந்து கொள்ளவில்லை என்பதை எங்கு போய்ச் சொல்ல.

நாச்சிக்கு மகனின் ஒதுக்கம், சிவகாமியின் படிப்பையும் வயதையும் கொண்டே என்று எண்ணினார். அவரும் மகனின் மனதை படிக்கச் தவறி விட்டார். அது சரி யானைக்கும் அடி சறுக்கும் அல்லவா!

நாச்சி தனக்கு அடுத்து சிவகாமி என்ற நிலையில், அவருக்குக் குடும்பத்தின் பொறுப்பைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லிக் கொடுத்தார்.முதலில் வீட்டின் உணவுப் பழக்கம், வர செலவு என தொடங்கி நாத்திகளின் கடமையில் சென்று, உற்றார் உறவினரில் முடிந்தது.

அவர்கள் பாரம்பரியமான உணவு வகைகள், அதிலும் அம்பலத்தானுக்குப் பிடித்தவை என்று கற்றுக் கொண்டாள்.அங்காளி பங்காளி என்று நெருங்கிய உறவினர்கள், அவர்களுக்கு நல்லவை அல்லவை செய்யும் முறை. தான் என்ன முறை, அம்பலத்தான் என்ன முறை என்று ஒவ்வொன்றையும் சொல்லிக் கொடுத்தார்.

மாமியும் மருமாளும் கிடைக்கும் நேரம் முழுவதும் இதனைத் தான் பேசுவார்கள்.வீட்டில் உள்ள பொன்னும் பொருளும் நாத்திகளின் கடமைக்கு எவ்வாறு உதவ வேண்டும் என்பதை, மாமியார் சொல்ல கணக்கு மேதை மெச்சிக் கொண்டாள், மாமியாரின் அறிவை.

ஒவ்வொரு பொண்ணுக்கும் சம பங்காக அனைத்தும் பெருக்கப் பட்டது, அதில் சிவகாமியும் அடக்கம்.அவரைப் பொறுத்தவரையில் இவளும் பெறாத பிள்ளை தானே.

அது மட்டுமா, வெளி இடங்களில் சிவகாமியை முன் நிறுத்தி அவர் செயல் பட, அனைவருக்கும் புரிந்து போனது நாச்சியின் நோக்கம்.

இதில் தான் அப்புச்சி புருவம் சுளித்தார். மனதுக்குள் அவருக்கு யோசனையாக இருந்தது. அதனை அவரது மனைவி வாய் விட்டு, கேட்டே விட்டார்.

"என்னங்க அண்ணி பொது இடத்துக்கெல்லாம் அந்தப் புள்ளய கூட்டிட்டு வாறாக. ஆனா அம்பலம் தம்பி உமையாளை கட்டிக்கிடுறேன்னு சொல்லுது. என்ன செய்தி? எனக்கு ஒன்னும் சரியாப்படல, பார்த்துக்கிடுக."

“எனக்கும் யோசனையாத் தான் இருக்கு. அம்பலம், நாளை மக்கா நாள் பரிசம் போட ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்காக போல. நேத்து பொழுதோட கோவிலுக்குப் போனப்ப முத்துவை பார்த்தேன். எனக்குத் தகவல் சொல்லச் சொல்லி இருக்கான்.” என்றதும் அதிர்ந்து விட்டார், அந்தப் பெண்.

“என்ன சொல்லுதீக?”

“ஒன்னும் சொல்லுறதுக்கில்ல. அந்தப் புள்ள கணக்கு டீச்சர் ஆகிடுச்சு. இனி என் வாழ்க்கையைப் பார்க்கணும். தெளிவா சொல்லிப் புட்டாக. நம்ப என்ன செய்ய முடியும்? என் கூடப் பொறந்த பொறப்ப நெனைச்சாதேன் பயந்து வருது. அந்த நடராஜன் மேல பாரத்தைப் போடுவோம். அவன் விட்ட வழி.”

அதன் பின், இரு பெரியவர்களும் மௌனமாகக் கடந்தனர்.


****

இன்றைய விடியல் வழமைக்கு மாறாக, சற்று கடுமையாக இருக்கப் போவதை அறியாமல், தனது காலை நேர வேலைகளை சக்தி மற்றும் உலகம்மையுடன் கேலி பேசி கொண்டும், சிரித்துக் கொண்டும் செய்து இருந்தாள், சிவகாமி.

மூன்று பெண்களும் திருமணம் செய்து போன பின், இவர்களது நட்பு இன்னும் பலம் கொண்டது. ஒரே வயது என்பதால் இயல்பாக இணைந்து கொண்டனர்.

“சிவா சீக்கரம் முடி. அக்காங்க வராக, கடைக்குப் போகணும் துணி எடுக்க.”

“நானும் கேட்கணும் இருந்தேன். என்ன விசேஷம்? மாமி, என்னாண்ட எதுவும் சொல்லலை. ஆனா, உங்க அத்தை,மாமா,சித்தப்பானு எல்லாப் பெரியவாளும் வந்து இருக்காங்க.”

“எனக்கும் தெரியல. அக்கா கிட்ட கேட்டேன், அவுக அண்ணன் தான் கிளம்பி வரச் சொல்லுதுனு சொல்லுறாக.”

சக்தியின் பதிலில் இரு பெண்களும் யோசனையுடன் வேலைகளைச் செய்தனர்.நாச்சி வீட்டு பெண்கள் உறவினர்கள் என்று மதிய உணவு கலை கட்ட பொழுது சரியாக தான் இருந்தது பெண்களுக்கு

மாலை வேளை நெருங்கும் சமயம், நாச்சியிடம் சென்ற சிவகாமி,

“மாமி, நாளையில இருந்து வேலைக்குப் போகணும். நான் செத்த அப்பா அம்மாவை பார்த்துண்டு வரவா. அவா கிட்டையும் ஆசி வாங்கனும், மாமி.”

“நல்லா போயிட்டுவா பாப்பா. ஆனா, வெரசா வா. எனக்கு என்னமோ மனசே சரியில்லை. இந்த வூட்டு ராசா ஏன் கூட்டத்தைக் கூட்டி வச்சு இருக்காருன்னு புரியல சாமி.”

“எதுவும் முக்கியமான சங்கதியா இருக்கும் மாமி. இல்லன்னா, அவா கூடி இருக்க மாட்டா.”

“சரி பாப்பா. பொழுதோட வா, ஓடு.” என்றதும் சிட்டாகப் பறந்து சென்றது சீட்டுக் குருவி.

அதன் பின் அம்பலத்தான் வீட்டுக்கு ஒவ்வொருவராக வர, அம்பலத்தானும் உள்ளே நுழைந்தார்.

அதற்காகவே காத்துக் கொண்டு இருந்த சிவகாமி, அவரை அழைத்து விஷயத்தைக் கேட்க, அவர் தலையில் இடி விழாத குறை தான்.


*

அங்கேயோ வெகு வருடங்கள் சென்று தனது வீட்டுக்குள் நுழையும் மகளைப் பார்த்து அதிர்ந்து நின்றனர், பெரியவர்கள்.

அவர்களை நோக்கி அம்மா என்று ஓடி வந்தவள், கண்ணம்பாவை கட்டி பிடித்துக் கண்ணீர் விட, அவளது தலையை வாஞ்சையாகத் தடவி விட்டார் ,சுந்தர் பட்டர்.

“எப்படியடி இருக்க. இப்போதான் நோக்கு எங்க ஞாபகம் வந்துச்சா?”

“அப்படி இல்லமா..” என்றவள் தனது தந்தையிடம் சென்று,“அப்பா..” என்று அவரது பாதம் தழுவ,

அவளைத் தடுத்தவர் “நான் உன்னைக் காக்கத் தெரியாத பாவி, ராஜாத்தி.”

“என்ன பேசறேள்? நீங்க கொடுத்த வரம்,இந்த வாழ்க்கை. எதையும் யோசிக்காதேள். உடம்பப் பார்த்துக்கோங்க.”

“நேக்கு என்னடி? உன் ஆம்படையான் பெத்தவளா நெனைச்சு எங்களைப் பார்த்துக்குறான். நாங்க ஷேமமா இருக்கோம்.”

“நேக்கு அது போதும்ப்பா.அவா மனசுலேயும் ரொம்பப் பெரியவா..! சரி அத்த விடுங்கோ. நேக்கு வேளை கிடைச்சு இருக்கு.”

“எங்க சிவகாமி?” தந்தை ஆவலாகக் கேட்க,

தாய் முகம் சுளித்தாள்.

“சிவா, என்ன இது? இப்போ நோக்கு எதுக்கு வேலை? படிப்பை முடிச்சுட்டதானே, இனி குடும்பத்தைப் பார், போதும்.”

“ப்ச், என்ன பேச்சுடி இது? என் பொண்ணு சுயமா நிற்க வேண்டாமா?”

சுந்தர் பட்டர் பேச்சில், எரிச்சல் ஆன கண்ணாம்பா,

“இங்க பாருங்கோ! இது வரை நீங்க பண்ணுதெல்லாம் போதும்! இனி அவளைக் கெடுக்காதேள். அவ வாழ்க்கையை அவ வாழட்டும். அவரும் பாவம் இத்தனை நாள் தோள் கொடுத்துட்டார். இனியும் அவரைச் சிரமம் படுத்தாதே!”

“என்ன பேச்சும்மா? மாமியே வேலைக்குப் போகச் சொல்லிட்டா, தெரியுமா?”

“அவா சொல்லுவா. அவாளுக்குப் பெரிய மனசு. நோக்கு புத்தி வேணாமா?”

இவர்கள் வாக்கு வாதம் உச்சம் தொட, சுந்தர் பட்டர் குரல் உயர்த்தினார்.

“கண்ணு பேசாம இரு. வந்த பிள்ளைக்குச் சாப்பிட கொடுக்காம, அவளை நிக்க வச்சுண்டு கேள்வியா கேட்டு கொல்லு.”

அதற்கும் அவர் எதுவோ சொல்ல வர, வீட்டு வாசலில் இருந்து குரல் கொடுத்தார், சிவநேசன் மனைவி.

“சிவா!... சிவா!...”

“யாரும்மா?” என்று கேட்டு கொண்டே சுந்தர் வாசலை நோக்கி வர

“சிவா எங்க சாமி?”

“உள்ளதாம்மா இருக்கா நீங்க?..”

தனது பெயர் கொண்டு அழைக்கவும், அதுவும் பழகிய குரல் என்றதும் விரைந்து வந்த சிவகாமி, அங்கு இருந்த பெண்ணைக் கண்டதும் “அக்கா, வாங்கோ” என்று அழைக்க

அவரோ பதற்றமாக,“சிவா, நீ வா. ஆச்சி கூப்புடுறாங்க.”

“ஏன், இப்போதான மாமியை பார்த்துட்டு வந்தேன்?” என்றவளை கடிந்து கொண்டார், கண்ணாம்பா.

“அந்தப் பொண்ணு பதறிட்டு பேசுறா. நீ என்ன கேள்வி கேட்டுண்டு இருக்க? ஓடு முதல்ல.” என்றதும், மறுவார்த்தை பேசாமல் இரு பெண்களும் கிளம்பிச் சென்றனர்.

“என்னடி இது? பிள்ளை இப்போதான் வந்தா..”

“ப்ச் நீங்க பேசாம இருங்கோ, அங்க என்னவோ?” என்றவர், அதன் பின் சிவகாமியை பற்றிப் பேச ஆரம்பித்து விட்டார். அவர்களுக்குள் வாக்கு வாதம் சென்றது. கல்யாணம் தொடங்கி, இன்று வரை நடந்தவைகளை எண்ணி.

வெகு வருடங்கள் சென்று வீட்டுக்கு வந்த மகளை, உணவளித்துப் பார்த்துக் கொள்ள முடியவில்லை என்று துடித்துப் போனார்கள், பெற்றவர்கள்.

சிலருக்குப் பிறந்தகம் சாபம் போலும். அதனால் தான் என்னவோ அதனை ஈடு செய்ய, அந்த ஈசன் எண்ணியத்தின் பலன் தான், நாச்சி போலும்.

இரு பெண்களும் வேகமாக வந்து மூச்சு வாங்கி நிற்க, அங்கே கண்ட காட்சியை விசித்திரமாகப் பார்த்துக் கொண்டே கூடத்துக்குள் நுழைந்தாள், சிவகாமி.

பார்வை கண்கள் கலங்கி சிவந்திருந்த நாச்சியின் புறம் சென்றது.

அவளது வருகையில் பெரியவர்களுக்கு ஒரு விதச் சங்கடம் ஏற்பட, அமைதியாக இருந்தார்.உமையாள் பட்டுப் புடைவையில் நிற்க, அம்பலத்தான் பட்டு வெட்டி சட்டையில் இருந்தார்.

மனம் முழுக்க எதோ எதோ என்று அடித்துக் கொள்ள, பொறுமையாக வந்து நாச்சியிடம் நின்று, அவரது கைகளைப் பற்ற, வெடித்து விட்டார், பெண்.

“என்னை மனுச்சுக்கிடு, பாப்பா. நான் உனக்கு நியாயம் செய்யல! நான் பாவி.” என்று அழுதவரை உறவினர்கள் அனைவரும் அதிர்ந்து பார்க்க, அம்பலத்தானும் திடுக்கிட்டார்.

அவர் தாயின் இந்த பேச்சையும் அழுகையை எதிர் பார்க்கவில்லை. வேகமாக எழுந்தவர் “அம்மா..” என்று அழைக்க.

“வேணாம் சாமி, பேசாதீக.” என்றவர் மீண்டும் சிவகாமியை அணைத்துக் கொண்டு அழ,

அவளுக்குத் தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை,

“மாமி, எதுக்கு அழறேள் சொல்லுங்கோ?”

உற்றார் உறவினர்கள் எல்லாம் இருவரது பிணைப்பையும் இயல்பான செயலையும் பார்த்தவர்கள், அதிசயித்து நின்றனர்.

இருக்காதா பின்னே நாச்சியை ஆளுமையான பெண்மணியாகப் பார்த்தவர்கள், முன் நாச்சி உடைந்து அழுதால் அதுவும் மருமாளை தழுவு கொண்டு

உடன்பிறப்பின் அழுகையைக் காணச் சகிக்காத அப்புச்சி,

“சிவா பாப்பா, அம்பலத்தானுக்கும் உமையாளுக்கும் திருமண உறுதி பண்ணுறோம். அதுக்குத் தான், என் அக்கா அழுகுது.” என்று விஷயத்தை உடைக்க, அதிர்ந்து நின்றாள் பெண்

என் கணவனுக்குத் திருமணம் உறுதி. அவளது பார்வை அம்பலத்தானை நேர் கொண்டு பார்க்க, அந்தப் பார்வையில் தடுமாறி நின்றார், மனிதர்.

அவளது கண்ணிலும் கண்ணீர் வழிய,

அம்பலத்தான் "உங்களுக்கு நல்லது தான் பண்ணுறேன். என்ன விடச் சிறுசு நீங்க..” என்று மேல பேசப் போனவரை தடுத்த சிவகாமி,

அங்குள்ள சீர் தட்டுகளைக் கலைத்து தூக்கி போட்டு, தனது கோபம் போகும் வரை உடைத்து வைத்தாள்.

அவளது செய்கையில் அனைவரும் அதிர்ந்து விலகி நின்றனர். நாச்சி கூட அவளைத் தடுக்க வில்லை. அவரது அழுகையும் நிற்கவில்லை.

நாகம்மைக்கு அவரது செயல், அவரது மனதை எடுத்துரைக்க, தனது பெண்ணுக்கு என்ன வழி என்று கதிகலங்கிப் போனார். அது சரி அவர் கவலை அவருக்கு

சிவகாமியைத் தடுக்க யாரும் முன் வராத நிலையில், அம்பலத்தான் சென்று அவளது கைகளை இறுக்கப் பிடித்துத் தடுத்து, தனது அறைக்குள் இழுத்துச் சென்று கதவைடைத்து கொண்டார்.

என்ன செய்வது என்று பெரியவர்கள் நிற்க,

நாச்சி கோபமாக "எனக்குத் தெரியாம என்ன வேலை பண்ணிப்புட்டீக? ஏண்ணே, நீயும் கூட்டா?” என்று தனது தமையனைப் பார்த்துக் கேட்க.

அவருக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை.

அதற்குள் நாகம்மை பேச்சை வளர்க்க, இருவருக்கும் வாக்கு வாதம் சூடு பிடித்தது.

“என்ன மதனி விளையாட்டு பண்ணிக்கிட்டு இருக்கீக என் பொண்ணுக்கு என்ன வழி அதைச் சொல்லுக”

“என்ன கேட்டா ஏற்பாடு பண்ணீக? நானா வாக்கு கொடுத்தேன்?”என்று அவர் எதிர் கேள்வி கேட்க மௌனித்துப் போனார் நாகம்மை என்ன தான் அம்பலத்தான் பேசி இருந்தாலும் பெரியவர் என்ற முறையிலும் தாய் என்ற முறையிலும் நாச்சிக்கு விடயத்தை முறையாகச் சொல்லி இருக்க வேண்டுமோ என்று எண்ணினார்.

எண்ணியதற்கு தற்போது பலன் இல்லையே என்ன செய்ய.

“தப்புதேன் மதனி தம்பி தான் நான் பார்த்துக்கிடுறேனு சொல்லுச்சு”

“அப்போ அவுகளே வந்து உங்க பொண்ணுக்கு வழி சொல்லட்டும் என்ன கிட்ட பேசாதீக” என்றதும் நாச்சியின் பேச்சில் அனைவரும் தலையைக் கவிழ்த்து கொண்டனர்.

அப்புச்சி எதுவோ பேச வர அம்பலத்தான் அறையில் இருந்த பெரும் சத்தம் கேட்க அனைவரும் பதறிக் கொண்டு ஓடினர் நாச்சியும் உறவு முறையில் உள்ள பெண்மணி ஒருவரும் கதவை உடைக்காத குறையாகத் தட்டினர்

“தம்பி பாவம் சின்னப் பொண்ணு எதுவா இருந்தாலும் பேசிக்கிடலாம் கதவை திறங்க”

“சாமி!.... சிவா பாப்பா!... கதவை திற” என்று நாச்சியும் கதற மெதுவாகக் கதவு திறக்க பட அங்கே கண்ட காட்சியில் அனைவரும் ஐயோ!.... என்று ஓடினர்.
இங்க புள்ளி வைக்கிறிங்களே
காப்போம்
அடுத்ததுக்கு
 

Nirmala senthilkumar

Well-Known Member
களவு கொண்டானடி தில்லையிலே!

களவு - 14

மடந்தையாக வந்தவள் அரிவையை நோக்கி அடி எடுத்து வைத்தாள்,சிவகாம சுந்தரி.

படித்து முடித்து அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு கிட்ட, அதனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

இந்த இடைப்பட்ட காலத்தில், அதாவது பள்ளிப் பருவத்தை முடித்து மேற்கொண்டு படித்துக் கொண்டு இருக்கும் காலத்தில், சிவகாமி வாழ்க்கைப் பாடத்தையும் கற்க ஆரம்பித்து விட்டாள். அதில் நாச்சியின் பங்கு எத்தகையது என்பதனை, வார்த்தையால் சொல்ல முடியாத ஒன்று.

பெரிய நாச்சியின் செயல்களைப் பார்த்தால், என்ன பெண்மணியடா சாமி என்று தான் எண்ணத் தோன்றுகிறது.அந்த அளவிற்கு, சிவகாமியை உருவாக்கி இருந்தார். அந்தக் காலத்தில் ஒரு பெண் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிவதே பெரும் பாடு அல்லவா.படிப்பறிவு கொண்டு செயல் பட்டாலும் பகுத்தறிவு கொண்டு வாழ்க்கையை வாழ கற்றுக் கொடுத்தார், நாச்சி.

என்னதான் படிப்பு இருந்தாலும், குடும்பப் பொறுப்பும் பாரம்பரியமும் முக்கியம் அல்லவா? அதிலும் வலுவாகத் தனது கால் தடத்தைப் பதித்தனர், மாமியாரும் மருமகளும்.

ஆம் படிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், அம்பலத்தானுக்கு அனைத்தும் செய்வது சிவகாமி தான். ஆதி முதல் அந்தம் வரை கணவரின் குணத்தைக் கணித்து இருந்தாள் பெண். அவள் படிக்கத் தவறியது மனதையோ?

அவரோ சிவகாமியின் சேவையில் சற்று தடுமாறினாலும், பிற்பாடு இயல்பாகப் பழகி கொண்டார். ஓர் இரு வார்த்தைகள் மட்டுமே இருவருக்குள்ளும் என்றாலும், அந்த வார்த்தைகள் அனைத்தும் பொது வாகத் தான் இருக்கும்.

இன்னும் முகம் பார்த்துப் பேசவில்லை அம்பலத்தான். அதனை சிவகாமியும் அறிந்து கொள்ளவில்லை என்பதை எங்கு போய்ச் சொல்ல.

நாச்சிக்கு மகனின் ஒதுக்கம், சிவகாமியின் படிப்பையும் வயதையும் கொண்டே என்று எண்ணினார். அவரும் மகனின் மனதை படிக்கச் தவறி விட்டார். அது சரி யானைக்கும் அடி சறுக்கும் அல்லவா!

நாச்சி தனக்கு அடுத்து சிவகாமி என்ற நிலையில், அவருக்குக் குடும்பத்தின் பொறுப்பைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லிக் கொடுத்தார்.முதலில் வீட்டின் உணவுப் பழக்கம், வர செலவு என தொடங்கி நாத்திகளின் கடமையில் சென்று, உற்றார் உறவினரில் முடிந்தது.

அவர்கள் பாரம்பரியமான உணவு வகைகள், அதிலும் அம்பலத்தானுக்குப் பிடித்தவை என்று கற்றுக் கொண்டாள்.அங்காளி பங்காளி என்று நெருங்கிய உறவினர்கள், அவர்களுக்கு நல்லவை அல்லவை செய்யும் முறை. தான் என்ன முறை, அம்பலத்தான் என்ன முறை என்று ஒவ்வொன்றையும் சொல்லிக் கொடுத்தார்.

மாமியும் மருமாளும் கிடைக்கும் நேரம் முழுவதும் இதனைத் தான் பேசுவார்கள்.வீட்டில் உள்ள பொன்னும் பொருளும் நாத்திகளின் கடமைக்கு எவ்வாறு உதவ வேண்டும் என்பதை, மாமியார் சொல்ல கணக்கு மேதை மெச்சிக் கொண்டாள், மாமியாரின் அறிவை.

ஒவ்வொரு பொண்ணுக்கும் சம பங்காக அனைத்தும் பெருக்கப் பட்டது, அதில் சிவகாமியும் அடக்கம்.அவரைப் பொறுத்தவரையில் இவளும் பெறாத பிள்ளை தானே.

அது மட்டுமா, வெளி இடங்களில் சிவகாமியை முன் நிறுத்தி அவர் செயல் பட, அனைவருக்கும் புரிந்து போனது நாச்சியின் நோக்கம்.

இதில் தான் அப்புச்சி புருவம் சுளித்தார். மனதுக்குள் அவருக்கு யோசனையாக இருந்தது. அதனை அவரது மனைவி வாய் விட்டு, கேட்டே விட்டார்.

"என்னங்க அண்ணி பொது இடத்துக்கெல்லாம் அந்தப் புள்ளய கூட்டிட்டு வாறாக. ஆனா அம்பலம் தம்பி உமையாளை கட்டிக்கிடுறேன்னு சொல்லுது. என்ன செய்தி? எனக்கு ஒன்னும் சரியாப்படல, பார்த்துக்கிடுக."

“எனக்கும் யோசனையாத் தான் இருக்கு. அம்பலம், நாளை மக்கா நாள் பரிசம் போட ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்காக போல. நேத்து பொழுதோட கோவிலுக்குப் போனப்ப முத்துவை பார்த்தேன். எனக்குத் தகவல் சொல்லச் சொல்லி இருக்கான்.” என்றதும் அதிர்ந்து விட்டார், அந்தப் பெண்.

“என்ன சொல்லுதீக?”

“ஒன்னும் சொல்லுறதுக்கில்ல. அந்தப் புள்ள கணக்கு டீச்சர் ஆகிடுச்சு. இனி என் வாழ்க்கையைப் பார்க்கணும். தெளிவா சொல்லிப் புட்டாக. நம்ப என்ன செய்ய முடியும்? என் கூடப் பொறந்த பொறப்ப நெனைச்சாதேன் பயந்து வருது. அந்த நடராஜன் மேல பாரத்தைப் போடுவோம். அவன் விட்ட வழி.”

அதன் பின், இரு பெரியவர்களும் மௌனமாகக் கடந்தனர்.


****

இன்றைய விடியல் வழமைக்கு மாறாக, சற்று கடுமையாக இருக்கப் போவதை அறியாமல், தனது காலை நேர வேலைகளை சக்தி மற்றும் உலகம்மையுடன் கேலி பேசி கொண்டும், சிரித்துக் கொண்டும் செய்து இருந்தாள், சிவகாமி.

மூன்று பெண்களும் திருமணம் செய்து போன பின், இவர்களது நட்பு இன்னும் பலம் கொண்டது. ஒரே வயது என்பதால் இயல்பாக இணைந்து கொண்டனர்.

“சிவா சீக்கரம் முடி. அக்காங்க வராக, கடைக்குப் போகணும் துணி எடுக்க.”

“நானும் கேட்கணும் இருந்தேன். என்ன விசேஷம்? மாமி, என்னாண்ட எதுவும் சொல்லலை. ஆனா, உங்க அத்தை,மாமா,சித்தப்பானு எல்லாப் பெரியவாளும் வந்து இருக்காங்க.”

“எனக்கும் தெரியல. அக்கா கிட்ட கேட்டேன், அவுக அண்ணன் தான் கிளம்பி வரச் சொல்லுதுனு சொல்லுறாக.”

சக்தியின் பதிலில் இரு பெண்களும் யோசனையுடன் வேலைகளைச் செய்தனர்.நாச்சி வீட்டு பெண்கள் உறவினர்கள் என்று மதிய உணவு கலை கட்ட பொழுது சரியாக தான் இருந்தது பெண்களுக்கு

மாலை வேளை நெருங்கும் சமயம், நாச்சியிடம் சென்ற சிவகாமி,

“மாமி, நாளையில இருந்து வேலைக்குப் போகணும். நான் செத்த அப்பா அம்மாவை பார்த்துண்டு வரவா. அவா கிட்டையும் ஆசி வாங்கனும், மாமி.”

“நல்லா போயிட்டுவா பாப்பா. ஆனா, வெரசா வா. எனக்கு என்னமோ மனசே சரியில்லை. இந்த வூட்டு ராசா ஏன் கூட்டத்தைக் கூட்டி வச்சு இருக்காருன்னு புரியல சாமி.”

“எதுவும் முக்கியமான சங்கதியா இருக்கும் மாமி. இல்லன்னா, அவா கூடி இருக்க மாட்டா.”

“சரி பாப்பா. பொழுதோட வா, ஓடு.” என்றதும் சிட்டாகப் பறந்து சென்றது சீட்டுக் குருவி.

அதன் பின் அம்பலத்தான் வீட்டுக்கு ஒவ்வொருவராக வர, அம்பலத்தானும் உள்ளே நுழைந்தார்.

அதற்காகவே காத்துக் கொண்டு இருந்த சிவகாமி, அவரை அழைத்து விஷயத்தைக் கேட்க, அவர் தலையில் இடி விழாத குறை தான்.


*

அங்கேயோ வெகு வருடங்கள் சென்று தனது வீட்டுக்குள் நுழையும் மகளைப் பார்த்து அதிர்ந்து நின்றனர், பெரியவர்கள்.

அவர்களை நோக்கி அம்மா என்று ஓடி வந்தவள், கண்ணம்பாவை கட்டி பிடித்துக் கண்ணீர் விட, அவளது தலையை வாஞ்சையாகத் தடவி விட்டார் ,சுந்தர் பட்டர்.

“எப்படியடி இருக்க. இப்போதான் நோக்கு எங்க ஞாபகம் வந்துச்சா?”

“அப்படி இல்லமா..” என்றவள் தனது தந்தையிடம் சென்று,“அப்பா..” என்று அவரது பாதம் தழுவ,

அவளைத் தடுத்தவர் “நான் உன்னைக் காக்கத் தெரியாத பாவி, ராஜாத்தி.”

“என்ன பேசறேள்? நீங்க கொடுத்த வரம்,இந்த வாழ்க்கை. எதையும் யோசிக்காதேள். உடம்பப் பார்த்துக்கோங்க.”

“நேக்கு என்னடி? உன் ஆம்படையான் பெத்தவளா நெனைச்சு எங்களைப் பார்த்துக்குறான். நாங்க ஷேமமா இருக்கோம்.”

“நேக்கு அது போதும்ப்பா.அவா மனசுலேயும் ரொம்பப் பெரியவா..! சரி அத்த விடுங்கோ. நேக்கு வேளை கிடைச்சு இருக்கு.”

“எங்க சிவகாமி?” தந்தை ஆவலாகக் கேட்க,

தாய் முகம் சுளித்தாள்.

“சிவா, என்ன இது? இப்போ நோக்கு எதுக்கு வேலை? படிப்பை முடிச்சுட்டதானே, இனி குடும்பத்தைப் பார், போதும்.”

“ப்ச், என்ன பேச்சுடி இது? என் பொண்ணு சுயமா நிற்க வேண்டாமா?”

சுந்தர் பட்டர் பேச்சில், எரிச்சல் ஆன கண்ணாம்பா,

“இங்க பாருங்கோ! இது வரை நீங்க பண்ணுதெல்லாம் போதும்! இனி அவளைக் கெடுக்காதேள். அவ வாழ்க்கையை அவ வாழட்டும். அவரும் பாவம் இத்தனை நாள் தோள் கொடுத்துட்டார். இனியும் அவரைச் சிரமம் படுத்தாதே!”

“என்ன பேச்சும்மா? மாமியே வேலைக்குப் போகச் சொல்லிட்டா, தெரியுமா?”

“அவா சொல்லுவா. அவாளுக்குப் பெரிய மனசு. நோக்கு புத்தி வேணாமா?”

இவர்கள் வாக்கு வாதம் உச்சம் தொட, சுந்தர் பட்டர் குரல் உயர்த்தினார்.

“கண்ணு பேசாம இரு. வந்த பிள்ளைக்குச் சாப்பிட கொடுக்காம, அவளை நிக்க வச்சுண்டு கேள்வியா கேட்டு கொல்லு.”

அதற்கும் அவர் எதுவோ சொல்ல வர, வீட்டு வாசலில் இருந்து குரல் கொடுத்தார், சிவநேசன் மனைவி.

“சிவா!... சிவா!...”

“யாரும்மா?” என்று கேட்டு கொண்டே சுந்தர் வாசலை நோக்கி வர

“சிவா எங்க சாமி?”

“உள்ளதாம்மா இருக்கா நீங்க?..”

தனது பெயர் கொண்டு அழைக்கவும், அதுவும் பழகிய குரல் என்றதும் விரைந்து வந்த சிவகாமி, அங்கு இருந்த பெண்ணைக் கண்டதும் “அக்கா, வாங்கோ” என்று அழைக்க

அவரோ பதற்றமாக,“சிவா, நீ வா. ஆச்சி கூப்புடுறாங்க.”

“ஏன், இப்போதான மாமியை பார்த்துட்டு வந்தேன்?” என்றவளை கடிந்து கொண்டார், கண்ணாம்பா.

“அந்தப் பொண்ணு பதறிட்டு பேசுறா. நீ என்ன கேள்வி கேட்டுண்டு இருக்க? ஓடு முதல்ல.” என்றதும், மறுவார்த்தை பேசாமல் இரு பெண்களும் கிளம்பிச் சென்றனர்.

“என்னடி இது? பிள்ளை இப்போதான் வந்தா..”

“ப்ச் நீங்க பேசாம இருங்கோ, அங்க என்னவோ?” என்றவர், அதன் பின் சிவகாமியை பற்றிப் பேச ஆரம்பித்து விட்டார். அவர்களுக்குள் வாக்கு வாதம் சென்றது. கல்யாணம் தொடங்கி, இன்று வரை நடந்தவைகளை எண்ணி.

வெகு வருடங்கள் சென்று வீட்டுக்கு வந்த மகளை, உணவளித்துப் பார்த்துக் கொள்ள முடியவில்லை என்று துடித்துப் போனார்கள், பெற்றவர்கள்.

சிலருக்குப் பிறந்தகம் சாபம் போலும். அதனால் தான் என்னவோ அதனை ஈடு செய்ய, அந்த ஈசன் எண்ணியத்தின் பலன் தான், நாச்சி போலும்.

இரு பெண்களும் வேகமாக வந்து மூச்சு வாங்கி நிற்க, அங்கே கண்ட காட்சியை விசித்திரமாகப் பார்த்துக் கொண்டே கூடத்துக்குள் நுழைந்தாள், சிவகாமி.

பார்வை கண்கள் கலங்கி சிவந்திருந்த நாச்சியின் புறம் சென்றது.

அவளது வருகையில் பெரியவர்களுக்கு ஒரு விதச் சங்கடம் ஏற்பட, அமைதியாக இருந்தார்.உமையாள் பட்டுப் புடைவையில் நிற்க, அம்பலத்தான் பட்டு வெட்டி சட்டையில் இருந்தார்.

மனம் முழுக்க எதோ எதோ என்று அடித்துக் கொள்ள, பொறுமையாக வந்து நாச்சியிடம் நின்று, அவரது கைகளைப் பற்ற, வெடித்து விட்டார், பெண்.

“என்னை மனுச்சுக்கிடு, பாப்பா. நான் உனக்கு நியாயம் செய்யல! நான் பாவி.” என்று அழுதவரை உறவினர்கள் அனைவரும் அதிர்ந்து பார்க்க, அம்பலத்தானும் திடுக்கிட்டார்.

அவர் தாயின் இந்த பேச்சையும் அழுகையை எதிர் பார்க்கவில்லை. வேகமாக எழுந்தவர் “அம்மா..” என்று அழைக்க.

“வேணாம் சாமி, பேசாதீக.” என்றவர் மீண்டும் சிவகாமியை அணைத்துக் கொண்டு அழ,

அவளுக்குத் தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை,

“மாமி, எதுக்கு அழறேள் சொல்லுங்கோ?”

உற்றார் உறவினர்கள் எல்லாம் இருவரது பிணைப்பையும் இயல்பான செயலையும் பார்த்தவர்கள், அதிசயித்து நின்றனர்.

இருக்காதா பின்னே நாச்சியை ஆளுமையான பெண்மணியாகப் பார்த்தவர்கள், முன் நாச்சி உடைந்து அழுதால் அதுவும் மருமாளை தழுவு கொண்டு

உடன்பிறப்பின் அழுகையைக் காணச் சகிக்காத அப்புச்சி,

“சிவா பாப்பா, அம்பலத்தானுக்கும் உமையாளுக்கும் திருமண உறுதி பண்ணுறோம். அதுக்குத் தான், என் அக்கா அழுகுது.” என்று விஷயத்தை உடைக்க, அதிர்ந்து நின்றாள் பெண்

என் கணவனுக்குத் திருமணம் உறுதி. அவளது பார்வை அம்பலத்தானை நேர் கொண்டு பார்க்க, அந்தப் பார்வையில் தடுமாறி நின்றார், மனிதர்.

அவளது கண்ணிலும் கண்ணீர் வழிய,

அம்பலத்தான் "உங்களுக்கு நல்லது தான் பண்ணுறேன். என்ன விடச் சிறுசு நீங்க..” என்று மேல பேசப் போனவரை தடுத்த சிவகாமி,

அங்குள்ள சீர் தட்டுகளைக் கலைத்து தூக்கி போட்டு, தனது கோபம் போகும் வரை உடைத்து வைத்தாள்.

அவளது செய்கையில் அனைவரும் அதிர்ந்து விலகி நின்றனர். நாச்சி கூட அவளைத் தடுக்க வில்லை. அவரது அழுகையும் நிற்கவில்லை.

நாகம்மைக்கு அவரது செயல், அவரது மனதை எடுத்துரைக்க, தனது பெண்ணுக்கு என்ன வழி என்று கதிகலங்கிப் போனார். அது சரி அவர் கவலை அவருக்கு

சிவகாமியைத் தடுக்க யாரும் முன் வராத நிலையில், அம்பலத்தான் சென்று அவளது கைகளை இறுக்கப் பிடித்துத் தடுத்து, தனது அறைக்குள் இழுத்துச் சென்று கதவைடைத்து கொண்டார்.

என்ன செய்வது என்று பெரியவர்கள் நிற்க,

நாச்சி கோபமாக "எனக்குத் தெரியாம என்ன வேலை பண்ணிப்புட்டீக? ஏண்ணே, நீயும் கூட்டா?” என்று தனது தமையனைப் பார்த்துக் கேட்க.

அவருக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை.

அதற்குள் நாகம்மை பேச்சை வளர்க்க, இருவருக்கும் வாக்கு வாதம் சூடு பிடித்தது.

“என்ன மதனி விளையாட்டு பண்ணிக்கிட்டு இருக்கீக என் பொண்ணுக்கு என்ன வழி அதைச் சொல்லுக”

“என்ன கேட்டா ஏற்பாடு பண்ணீக? நானா வாக்கு கொடுத்தேன்?”என்று அவர் எதிர் கேள்வி கேட்க மௌனித்துப் போனார் நாகம்மை என்ன தான் அம்பலத்தான் பேசி இருந்தாலும் பெரியவர் என்ற முறையிலும் தாய் என்ற முறையிலும் நாச்சிக்கு விடயத்தை முறையாகச் சொல்லி இருக்க வேண்டுமோ என்று எண்ணினார்.

எண்ணியதற்கு தற்போது பலன் இல்லையே என்ன செய்ய.

“தப்புதேன் மதனி தம்பி தான் நான் பார்த்துக்கிடுறேனு சொல்லுச்சு”

“அப்போ அவுகளே வந்து உங்க பொண்ணுக்கு வழி சொல்லட்டும் என்ன கிட்ட பேசாதீக” என்றதும் நாச்சியின் பேச்சில் அனைவரும் தலையைக் கவிழ்த்து கொண்டனர்.

அப்புச்சி எதுவோ பேச வர அம்பலத்தான் அறையில் இருந்த பெரும் சத்தம் கேட்க அனைவரும் பதறிக் கொண்டு ஓடினர் நாச்சியும் உறவு முறையில் உள்ள பெண்மணி ஒருவரும் கதவை உடைக்காத குறையாகத் தட்டினர்

“தம்பி பாவம் சின்னப் பொண்ணு எதுவா இருந்தாலும் பேசிக்கிடலாம் கதவை திறங்க”

“சாமி!.... சிவா பாப்பா!... கதவை திற” என்று நாச்சியும் கதற மெதுவாகக் கதவு திறக்க பட அங்கே கண்ட காட்சியில் அனைவரும் ஐயோ!.... என்று ஓடினர்.
Nirmala vandhachu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top