அத்தியாயம் - 13 சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

Advertisement

Yaazhini madhumitha

Well-Known Member
அத்தியாயம்-13

சிறுமுகை வந்தவுடன் மதுவைக்
கார்த்திக் எழுப்பி விட்டான். உடம்பை
வளைத்து எழுந்தவள் கண்ணை
முழித்துத் தலையைச் சொறிய
கார்த்திக் அதைக் கண்டு சிரித்தான்.

"என்ன சிரிப்பு?" என்று அவன் எதற்கு
சிரித்தான் எனத் தெரியாமல்
உதட்டைச் சுழித்து மதுக் கேட்டாள்.

"அது ஒன்றுமில்லை மது. இப்ப
தலையச் சொறிஞ்சல... அதே மாதிரி
இந்தக் கண்ணாடியில் பார்த்துப்
பண்ணேன்" என்று அவள் சீட்டின்
மேல் இருந்த கண்ணாடியை கீழே
இழுத்து விட்டான்.

அவன் சொல்லியவுடன் மீண்டும் ஒரு
முறை அதை செய்தவள் "ஏன் இதுலே
என்ன இருக்கு?" என்று தூக்கத்தைத்
தாங்கியக் கண்களுடையே கேட்டாள்.

அவள் கேட்டவுடன் இன்னும்
சிரித்தவன் "இல்ல மது நீ அந்த மாதிரி
முழித்துத் தலையைச் சொறிந்தது
சிரிப்பாக இருந்தது. அதுவும்
இல்லாமல் நேற்றுப் புதுசாக வாங்கிய
உன் ப்ரண்டைப் போலவே இருந்தாய்..
அதான் நீ கேட்டவுடன் இன்னொரு
தடவைப் பார்க்க வேண்டும் என்று
நினைத்து, அப்படி செய்து பார்
என்றேன். நீயும் செய்து விட்டாய்" என
மதுவிடம் சொல்லச் சொல்ல அடக்க
மாட்டாமல் சிரித்துவிட்டான்.

"இருக்கட்டும் இருக்கட்டும் பார்த்துக்
கொள்கிறேன்" என்று பொய்க்கோபம்
காட்டி வெளியே தலையைச்
திருப்பினாள்.

கீழ்வானம் குங்குமமாய்ச் சிவந்து
இருக்க.. சுற்றுப்புறத்தின் பசுமை
அழகும், வீசிய குளிர்ந்த காற்றும்
மதுவை ஈர்த்தது. மதுவும் அவளுக்குப்
பின் கார் வின்டோவில் தெரிந்த
சிவந்த வானத்தையும் ஒன்றாகக்
கண்டவன் கொஞ்சம் கொஞ்சமாக
தன்னை இழக்கத் தொடங்க
ஆரம்பித்தான் கார்த்திக்.

பின் இருவரும் சிறுமுகை வீட்டை
அடைந்தனர். துரைசாமி-பார்வதி
(கார்த்திக்குடைய தாத்தா பாட்டி)
அவர்களை வரவேற்க வாசலிலேயே
நின்று இருந்தனர். முன்னால் வீடும்
பின்னால் தென்னந்தோப்புமாக அந்த
இடம் வெகு அழகாக இருந்து மதுவை
நன்கு ஈர்த்தது. இருவரும் இறங்கி
வந்து ஒன்றாக பெரியவர்கள் காலில்
விழுந்து ஆசி வாங்க கார்த்திக்கின்
தாத்தா பாட்டி பூரித்துத் தான்
போயினர். பின்னர் இருவரையும்
உள்ளே அழைத்துச் செல்லக்
கார்த்திக்கும் மதுவும் உடையை
மாற்றிவிட்டு ஹாலிற்கு வந்தனர். மது
வெளியே வர தாத்தா பாட்டியிடம்
பிறந்த நாள் வாழ்த்துகளைப்
பெற்று அமர்ந்தாள்.


"எப்படிமா பார்த்திக்குறான் பையன்?
குறும்புலாம் ஓவரா இருக்குமே?"
என்று மதுவிடம் பேச்சுக் கொடுத்துப்
பேரனை வம்பு இழுத்தார் பெரியவர்.

"ஆமாம் தாத்தா" என்று மது சிரிக்க,
கார்த்திக் ஒரு கையால் வாயைப்
பொத்தி "அடிப்பாவி" என்றான்
மனைவியைப் பார்த்து. "இவட்ட என்ன
பண்ணோம்ன்னு தாத்தா கிட்ட
ஆமான்னு சொல்றா" என்று
எண்ணியவனைத் தாத்தாவின் குரல்
கலைத்தது.


"இல்லைனு சொன்னாதான் நான்
ஆச்சரியப் பட வேண்டும் பேரனே"
என்று பேரனை வம்பிழுத்தார்
துரைசாமி.

"தாத்தா இது நல்லதிற்கு இல்லை.
அப்புறம் அத பாட்டிகிட்ட
சொல்லிருவேன்" என்று கார்த்திக்
தன் தாத்தாவை பொய்யாக
மிரட்டினான். ஏதோ பேரனிற்கும்
தாத்தாவிற்கும் உள்ள பரம ரகசியம்
போல..

அதற்குள் அங்கு வந்தப் பார்வதி
"என்ன என்னை விட்டுட்டு எல்லாரும்
பேசிட்டு இருக்கீங்க?" என்றபடி மது
அருகில் வந்து அமர்ந்தார்.

"அது ஒன்றுமில்லை.. சும்மாதான்"
என்று துரைசாமி சமாளிக்க கார்த்திக்
கேலியாகத் தன் தாத்தாவைப் பார்த்து
'அந்த பயம் இருக்கட்டும்' என்பது
போலச் சிரித்தான்.

"ஓ சரி சரி... மது.. கார்த்திக் சின்ன
வயதில் செய்தது எல்லாம் உனக்குத்
தெரியுமா?" என்று கேட்க மது உதட்டை
மடக்கி சிரித்தாள். துரைசாமியோ
தற்போது கார்த்திக்கைக் கேலியாகப்
பார்த்து சிரித்தார். அவனிற்கு ஐயோ
பாட்டி என்று இருந்தது.

"சொல்லுங்க பாட்டி" என்று மது
பாட்டியிடம் கேட்டு கார்த்திக்கை
வெறுப்பேற்றினாள்.

"அதுவந்தம்மா சின்ன வயதில்
இருந்தே ரொம்பச் சுட்டி இவன். ஒரு
இடத்தில் நிற்க மாட்டான். யாராவது
கூட இருந்தால் விளையாடுவான்.
இல்லை என்றால் பின்னால்
தோப்பிற்குப் போய் வேலை ஆட்களை
வேலை வாங்குகிறேன் என்று
அவர்களை விரட்டிக் கொண்டு
இருப்பான். அவனை ஒருத்தர் இருந்து
கவனித்துக் கொண்டே இருக்க
வேண்டும், இல்லை என்றால் ரகளை
தான். நாங்கள் வேறு பயங்கர
செல்லமா.. எதுவும் சொல்ல மாட்டோம்
இவனை. உன் மாமியார் தான்
இவனை பிடித்து உட்கார
வைப்பதற்குள் படாதபாடு படுவாள்.
அப்புறம் ஸ்கூல் சேர்ந்த பிறகு..."
என்று பாட்டி பேரனை ஓரக் கண்ணால்
பார்க்க கார்த்திக்கோ வேண்டாம்
என்று கண்களால் பாட்டியிடம்
கெஞ்சினான்.

அதைக் கவனித்த மதுவோ, "பாட்டி
பாட்டி ப்ளீஸ் சொல்லுங்க" என்று
கெஞ்சும் குரலில் கேட்டாள்.

"எல்.கே.ஜீ படிக்கும் போது இவன் கூட
படிக்கிற பெண்ணுக்கு கன்னத்தில்
முத்தம் தந்து விட்டான்.. அந்தப் பெண்
கார்த்திக்கைக் கூட்டி வர உன் அத்தை
பள்ளிக்குச் சென்ற போது பையனை
மாட்டி வைத்து விட்டாள். பிறகு
இவனை வீட்டிற்குக் கூட்டி வந்து உன்
அத்தைத் திட்ட.. கோபம் வந்தவன்
இரண்டு நாட்கள் பேசவே இல்லை..
அப்புறம் நாங்கள் இங்கு இருந்து
சென்று சமாதானம் செய்தோம் இந்தப்
பெரிய மனுஷனை" என்று கூற
அனைவரும் சிரித்து விட மது
கார்த்திக்கிடம் திரும்பி ஒற்றைப்
புருவத்தை தூக்கிப் பார்த்தாள்.
கார்த்திக்கோ அவள் பார்ப்பதை
உணர்ந்தும் அவளிடம் தன்
பார்வையைத் திருப்பவில்லை.

பின் நிறைய சேட்டைகளைப் பார்வதி
அம்மாள் அடுக்கினார். எல்லாரும்
சாப்பிட்டு வந்து சிறிது நேரம் பேசினர்.
மதுவிற்கு எவ்வளவு இயல்பாய்
இருக்கிறார்கள்.. பிரியமாகவும்
பழகுகிறார்கள்.. என்று தோன்றி
அவர்களை மிகவும் பிடித்துப் போனது.

"மதுமா நாளை கோவிலுக்கு
செல்லலாம்.. வருவாய்தானே" என
வினவினார் பார்வதி.

"பாட்டி ஞாயிற்றுக்கிழமை காலை
வரை கோவிலுக்கு போக முடியாது..
தலைக்கு தண்ணீர் ஊற்றி
இருக்கிறேன்.." என்று இழுக்க "சரி
விடுடா அடுத்த தடவைப்
பார்த்துக்கலாம்" என்று சாதரணமாக
சொன்னார்.

பாட்டியிடம் அந்த விஷயத்தை
சொல்லிய மது கார்த்திக்கை ஓரக்
கண்ணால் பார்த்தாள்.. அவனோ
ஏதோ புரிந்தவன் போன்று உட்கார்ந்து
இருந்தான். பிறகு எல்லாரும் தூங்க
அவரவர் அறைக்குள் புகுந்து
கொண்டனர்.

பாட்டியிடம் தலையணைகளை வாங்கி
வந்தவன் அதைக் கட்டிலில்
வைத்துவிட்டு மதுவிடம் திரும்பினான்.
அதேநேரம் அவளும் அவன் எடுத்துத்
தந்த பர்த்டே ட்ரெஸை மடித்து
பைக்குள் வைத்துத் திரும்பியவள்
அவன் தன் அருகில் நிற்பதைப்
பார்த்து சற்று திகைத்து பின்னால்
நகர முயன்றவள் சுவற்றில் ஒட்டி
நின்றாள்.

அவள் இருபுறமும் சுவற்றில் கைகளை
ஊன்றி அவளைப் பார்க்க, மதுவோ
அவனது பார்வையை தாங்க
முடியாமல் கீழ் உதட்டைக் கடித்தபடி
தரையைப் பார்த்தாள். அவளது
செய்கை அவனுக்குச் சிரிப்பை
வரவழைக்க, அவளை சீண்ட
வேண்டும் என்று எண்ணியவன்
"என்னை குறும்பு என்று தாத்தா
கேட்டதற்கு ஆமா-ன்னு சொன்னதான
மது. இப்ப கூட அப்படித்தான். ஆனால்
மூன்று நாட்களுக்குப் பிறகு உனக்கே
தெரியும் நான் எவ்வளவு குறும்பு
என்று" என்று அவள் காதின்
அருகில் சென்று இரகசியம்
பேசினான். அவன் காதின் அருகில்
பேசியது மதுவின் காது மடலைச்
சிலிர்க்கச் செய்து முகம் எல்லாம்
சிவந்துவிட்டது.

மதுவிற்கு என்ன பதில் பேசுவது
என்றே தெரியவில்லை. வார்த்தை
வெளியே வராமல் தொண்டையில்
சிக்கியது. இவ்வளவு அருகில் நின்று
அவன் காதில் இரகசியம் பேசியது
வேறு அவளுக்கு உடல் எல்லாம் குறு
குறுத்தது.

"என்ன மது பதிலையே காணோம்.
மூன்று நாட்களுக்குப் பிறகும் நான்
நல்ல பையனாக இருக்க வேண்டுமா?
சேட்டைகளை செய்யலாம் தானே?"
என்று அவளின் சிவந்த முகத்தையும்
காதையும் பார்த்து மேலும் சீண்ட
நினைத்து தாழ்ந்த குரலில்
அழுத்தமாக வினவ மதுவிற்குச்
சிரிப்பு வந்து விட்டது.

"ம்ம்" என்று தரையைப் பார்த்தே
தலையை ஆட்டினாள்.

சட்டென்று நினைவு வர "ஆமா யார
கிஸ் பண்ணிங்க எல்.கே.ஜி படிக்கும்
போது?" என்று கண்களில்
கோபத்தைக் காட்டிக் கேட்டாள். ஏனோ
மதுவிடம் கண்களில் பொறாமை
என்ற ஒன்றைக் கண்டான் கார்த்திக்.

அவளது பொறாமையை ரசித்தவன்
"மது அது சின்னப் பையனா இருக்கும்
போது தெரியாமப் பண்ணியது" என்று
சிரிப்பை அடக்க முயன்றவன் "அதுவும்
இல்லாமல் எனக்குக் கன்னம் அழகாக
இருந்தால் பிடிக்கும் மது" என்று
மதுவின் கன்னங்களை ஒற்றை
விரலால் வருடினான். அந்த வருடலில்
ஒரு நிமிடம் உடல் நடுங்கினாலும்
வெளியே காட்டாதவள் அவனை
முறைத்துத் தள்ளினாள்.

"இருக்கும் இருக்கும்" என்று அவனது
தோளைக் கையால் குத்தித்
தள்ளிவிட்டு படுக்கையில் ஒரு பக்கம்
சென்று சம்மனம் கால் போட்டு
உட்கார்ந்து அவனை முறைத்தாள்.

அவள் அடித்தவுடன் "அஅ.. என்னடி
அடிக்கற..?" என்றவன் தோளைத்
தேய்த்தபடி கட்டலின் இன்னொரு
பக்கம் வந்து அமர்ந்தவன், அவளை
முறைத்தவனைக் கண்டு கொள்ளாது
"பெரிய கோகுலத்துக் கண்ணன்னு
நினப்பு சுத்தி சுத்தி பொண்ணுங்க..
ஸ்கூல்ல ஒருத்தி காலேஜில் ஒருத்தி"
முணுமுணுத்தவளின் கையைப்
பிடித்துத் தன் புறம் இழுத்தவன்
"என்னதான் கண்ணனுக்கு காதலிகள்
இருந்தாலும் அவர் மணந்து
மனைவியாக ஏற்றுக் கொண்டது
ருக்மணியைத் தான்" என்று கார்த்திக்
சொல்ல அவனின் பார்வையின் வீச்சு
தாங்காமல் மது கண்களைத்
தாழ்த்தினாள்.

ஒரு நிமிடம் முகம் சிவந்தவள்
தலையை வேறுபுறம் திருப்பி "பேச்சு
சாமார்த்தியம் அதிகம்தான்" என்றவள்
"நாளை இருவரும் சீக்கிரம் எழுந்து
கிளம்ப வேண்டும். டைம் ஆச்சு
சீக்கரம் தூங்கலாம்" என்றுப் பேச்சை
மாற்றினாள் பெட் ஷீட்டை கையில்
எடுத்தபடியே.

"பேச்சு சாமர்த்தியம் எனக்கு என்றால்
பேச்சை மாற்றும் சாமர்த்தியம்
உனக்கு மது" என்று அவன்
கேலியாகக் கூற, சிரித்தவள் பதில்
பேசாமல் முதுகைக் காட்டிப்
படுத்துவிட்டாள். அவனும் படுத்துவிட
இருவரும் அவரவர் அருகாமையில்
நிம்மதியாய் உறங்கினர்.

அடுத்த நாள் மதுவும் கார்த்திக்கும்
வழக்கம் போலக் கோவை சென்று
வந்தனர். உடையை மாற்றிக்
கொண்டு மது வெளியில் வர "இந்தா
மது இது உனக்காக வாங்கியது"
என்று துரைசாமி-பார்வதி தம்பதியர்
மதுவிற்கு ஒரு பீச் (peach) கலர்
டிசைனர் சேலையை மதுவிற்குத்
தந்தனர். மது இருவரின் கால்களிலும்
ஆசிகளைப் பெற்று அதை வாங்கிக்
கொண்டாள். பின் இரண்டு நாட்களாக
நன்றாக சென்றன.

சனி அன்று இருவரும் கோவையில்
இருந்து சிறுமுகை கிளம்பும் போது
"100 பீட் ரோட் போங்க..ஒரு ட்ரெஸ்
வாங்க வேண்டும்" என்றாள் மது.

"மேடத்தோட உத்தரவை மீற முடியுமா!"
என்று கேலி செய்து விட்டுக் காரை
100 பீட் ரோட்டில் விட்டுப் போத்திஸில்
நிறுத்தினான்.

இருவரும் உள்ளே செல்லும் பொது
"என்ன வாங்கப் போற மது?" என்று
வினவினான்.

"பாட்டி வாங்கிக் குடுத்த சேலைக்கு
ரெடிமேட் ப்ளவுஸ் அன்ட்
இன்ஸ்ஸகர்ட்" என்று பதில்
அளித்தாள்.

பின் அந்த பீச் நிறத்திற்குப்
பொறுத்தமாக ஒரு கோல்டன் கலர்
ப்ளவுஸ் மற்றும் இன்ஸ்ஸகர்ட்டை
எடுத்தாள் மது. பில் கவுன்டரில்
வந்து மது பணத்தை பையில் இருந்து
எடுக்க, கார்த்திக் அவளை
முறைப்பதைக் கண்டவள் அவனைப்
புரியாமல் பார்த்தாள்.

"பணத்தை உள்ள வெய்" என்றவன்
தன் கார்டை எடுத்து, அங்கு
நின்றிருந்த சேல்ஸ்மேனிடம் தர
அவன் எல்லாம் முடித்து கார்டையும்
பையையும் கார்த்திக்கிடம் தந்தான்.
பின் இருவரும் காரில் செல்ல "மது நீ
தனியா பர்சேஸ் பண்ணப் போறப்ப
எப்படியோ, ஆனா என் கூட
வரும்போது நீ செலவு செய்யக்
கூடாது" என்றுக் கறார்க் குரலில்
மதுவிடம் சொல்ல சரி என்று
தலையை ஆட்டினாள். பிறகு சிறிது
நேர அமைதியின் பின் இருவரும்
ஏதோ பேச ஆரம்பிக்க, அரட்டை அடித்த
படியே வந்தனர். பாட்டியிடம் சென்று
அவரிடம் வாங்கி வந்ததைக்
காண்பித்தாள்.

இருவரும் சமையல் அறையில் இருக்க
"மது இங்கப் பாரு, உன் போன்
அடிக்கிறது" என்று மதுவின்
போனைக் கொண்டு வந்து கார்த்திக்
தந்தான்.

போனை வாங்கிப் பார்த்தவள்,
போனை எடுத்து "ஹே ஸ்வேதா..."
என்றாள்... இல்லை இல்லை குஷியில்
கத்தினாள்.

"டி மது.. உனக்கு ஒரு விஷயம்
தெரியுமா?" என்று எதையோ
சொல்லத் துடிக்கும் ஆர்வத்துடன்
பேசினாள் ஸ்வேதா.

"ஹம்.... என்னடி விஷயம் சொல்லு"
என்றாள் மது யோசித்தபடி.

"அந்த ராஸ்கல்.. அதான் அந்த
ஸ்போகன் க்ளாஸ் எருமை.. அவனைப்
போலீஸ் அரெஸ்ட் செய்து
இருக்கிறார்கள்.. இப்போது தான்
நியூஸில் பார்த்தேன். அதான்
உனக்குக் கூப்பிட்டேன்" என்று
சொல்ல "அப்படியா... இரு
கூப்படுகிறேன்" என்று மது
சொல்லிவிட்டுப் போனைக் கட்
செய்தாள். போனை வைத்தவள்
யோசித்தபடி வெளியே ஹாலிற்கு வர
அந்த நியூஸைத் தான் கார்த்திக்கும்
துரைசாமியும் பார்த்துக் கொண்டு
இருந்தனர். "ஏதோ போதை மருந்து
கடத்தி வைத்து இருந்ததாகக் கைது"
என்று சொல்லிக் கொண்டிருந்தார்
அந்தச் சேனலின் செய்தி வாசிப்பாளர்.

மதுவின் பார்வையை உணர்ந்த
கார்த்திக் எழுந்து "தாத்தா நாங்கள்
பின்னால் தோப்பு வரை போய்விட்டு
வருகிறோம்.." என்று தாத்தாவிடம்
சொல்லிவிட்டு மதுவை அழைத்தான்.
மதுவும் பாட்டியிடம் சொல்லிவிட்டு
அவனுடன் புறப்பட்டாள்.

தோப்பினுள் சிறிது நேரம் நடந்த பின்
"நீங்கள் தானே?" என்று மது
வினவினாள்.

"ஆமாம்" என்றான் ஒற்றை
வார்த்தையாக. அவனின் குரலில்
ஆத்திரமும் கோபமும் இருந்தது.

"ஏன்... அவனுக்கும் ஏதாவது குடும்பம்
என்று இருக்குமே" என்றபடி நடந்து
தன் மனதில் தோன்றியதைக்
கேட்டாள்.

இரண்டடி வைத்தவள் கார்த்திக்
அங்கேயே நிற்பதைப் பார்த்து "என்ன...
நின்னுட்டீங்க?" என்று கேட்டாள்.

அவன் விழிகளோ கோபமாக மதுவை
நோக்கியது, "அதுக்கு-ன்னு உன்னை
அப்படிப் பண்ணியவனைச் சும்மா விட
சொல்றியா... அப்படி பண்ணினா
நான் ஆம்பிளையே இல்லை..
உன்னை மட்டும் இல்லை... உனக்கு
முன்னால் பின்னால் என்று பலப்
பெண்கள்.. நினைத்துப் பார்
அவர்களும் உன்னை மாதிரி தான்
தவித்திருப்பார்கள்... அவனை நான்
உயிரோடு விட்டுவிட்டு வந்தேன்
என்றால் இதான் காரணம். செத்தால்
அந்த ஒரு நிமிடம் தான் வலி
அவனிற்கு.. ஆனால் நீ அனுபவித்த
வலி.. சென்னையில் யாருக்கும்
தெரியாமல் லண்டன் போகும் முன்
ஸைக்காலஜிஸ்ட் கிட்டப் போனாய்
தானே.. எவ்வளவு மன அழுத்தத்தில்
இருந்திருப்பாய்.. அதான் அவன் பல
வருடம் வெளியவே நடமாட முடியாத
படி செய்து விட்டேன்.." என்றவன்
"அதுவும் இல்லாமல் அந்த நாயிற்கு
குடும்பம் எல்லாம் ஒன்றும் இல்லை..
தனியாகத்தான் இருந்திருக்கிறான்.
அப்படி இருந்திருந்தாலும் நான்
கவலைப்படப் போவது இல்லை..
அவனவன் செய்யும் தப்பிற்கு
அனுபவிக்க வேண்டியது தான்..
அதான் அரவிந்திடம் சொல்லி
வேலையை முடித்து விட்டேன் "
என்று சொல்லி முடித்தான்.

ஏனோ மதுவிற்கு சற்றுப்
பெருமையாகவும் கர்வமாகவும்
இருந்தது. அவன் அருகில் சென்று
அவன் கையைப் பிடித்துக் கட்டிக்
கொண்டவள் "நான் ஸைக்காலஜிஸ்ட்
கிட்ட போனது உங்களுக்கு எப்படித்
தெரியும்" என்று அவன் தோளில்
தலை சாய்த்தபடி வினவினாள்.

"நீ ட்ரீட்மெண்ட் எடுத்த டாக்டர் வேறு
யாரும் இல்லை.. நம் மாயாவுடைய
உறவுக்காரர் தான்..கல்யாணத்திற்கு
ரிஷப்ஷன் அன்று வந்தவர்.. என்னிடம்
இரவு தனியாக வந்து சொல்லி விட்டுப்
போனார்.. உன்னை நன்றாகப்
பார்த்துக் கொள்ளச் சொல்லியும்
கேட்டுக் கொண்டார்.." என்று
கூறினான்.

"ரொம்ப நல்ல அங்கிள் அவர்... அவரு
ட்ரீட்மெண்ட் முடிஞ்சு தான் லண்டனே
கிளம்பினேன்" என்று கூறினாள் மது..

பிறகு இருவரும் பேசிக் கொண்டே வர
கிணறு வந்தது.. உள்ளே எட்டிப்
பார்க்க உள்ளே பௌர்ணமி நிலவின்
ஒளி தண்ணீரில் விழுந்து மிதந்து
மிகவும் அழகாகத் தெரிந்தது. சிறிது
நேரம் நின்று அதை ரசித்தவள் பின்
கார்த்திக்கிடம் திரும்ப அவனோ
அங்கு இருந்த ஒரு கயிற்றுக் கட்டிலில்
உட்கார்ந்திருந்தான். அவன் அருகில்
சென்று நின்றபடியே பேசிக் கொண்டு
இருந்தாள். உட்காரச் சொல்லியும்
உட்காராமல் நின்று கொண்டே
வலவலத்துக் கொண்டு இருந்தவளை
கண் இமைக்காமல் பாரத்துக்
கொண்டிருந்தான்.

திடீரென மதுவின் அருகில் இருந்து
'உர்ர்ர்ர்' என சத்தம் வந்தது. என்ன
என்று திரும்பிப் பார்த்த மது நடுங்கி
விட்டாள். ஒரு பெரிய நாய் ஒன்று
நிற்பதைக் கண்டவள் 'ஏங்க அதைப்
போகச் சொல்லுங்க ப்ளீஸ்" என்று
கார்த்திக்கிடம் தன் இரு கைகளாலும்
காதைப் பொத்தியபடி கண்களை மூடி
பயந்தக் குரலில் சொன்னாள்.

"அது எதுவும் பண்ணாது மது.." என்று
சொல்லியும் மது அப்படியே இருக்க...
நாயை விரட்டி விட்டான்.

"மது நாய் போயிருச்சு.. கண்ணைத்
திற.. அன்ட் நீ இப்போது எழுந்தால்
தான் நான் எழ முடியும்" என்றான்
கார்த்திக்.. அப்போது தான் பயத்தில்
அவன் மடியிலேயே உட்கார்ந்து
விட்டதை உணர்ந்தாள் மது.
டக்கென்று எழுந்தவள் போலாம் என்று
எங்கோ பார்த்துச் சொல்லக்
கார்த்திக்கிற்கு சிரிப்பு வந்தது..
கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கியவன்..
அவளைக் கூட்டிக் கொண்டு வீட்டை
நோக்கி நடந்தான்..

அடுத்த நாள் காலை சேலையைக் கட்டி
வந்து பார்வதி அம்மா முன் நின்றாள்
மது.

"ரொம்ப அழகா இருக்க மதுக்குட்டி"
என்று மதவின் முகத்தை தன்
இருகைகளாலும் வழித்துச்
சொடுக்கிட்டார் பார்வதி.

"அடடே உனக்குச் சேலை பிரமாதமாக
இருக்கிறதுமா" என்றபடி அங்கு வந்து
நின்றார் துரைசாமி.

சண்டே எப்பவும் கார்த்திக் ஏழு
மணிக்கு மேல் தான் எழுந்திருப்பான்.
காப்பியைக் குடித்தவள் மணியைப்
பார்த்து கார்த்திக் எழுந்திருப்பான்
என்று ஒரு கப் காப்பியை எடுத்துக்
கொண்டு ரூமிற்கு சென்றாள்.
ஆனால் அவன் உறங்கிக்
கொண்டிருந்ததைக் கண்டவள்
போய் அவனை எழுப்ப, எழுந்து
சென்று பல்துலக்கி முகத்தைக்
கழுவிக் கொண்டு வந்தவனிடம்
"காஃபி ஆறிவிட்டது. கீழேயே
வாங்க...வேற போட்டுத் தரேன்"
என்றபடி மேஜையில் இருந்த
காஃபியை எடுத்தாள். என்ன "ம்ம்"
என்று கூட பதிலில்லை என்று
திரும்பி அவனைப் பார்த்தாள்.

கார்த்திக்கைத் திரும்பிப் பார்த்த மது
அவனது பார்வையின்
வித்தியாசத்தை உணர்ந்தவள்
அப்படியே அவனைப் பார்த்தபடி
நின்றாள். அவனும் அதே நேரம்
"கல்யாணத்தின் போதும் சேலை தான்
கட்டி இருந்தாள். அப்போது அழகாகத்
தெரிந்தாலும் இப்படி ஒரு உணர்வு
தன்னிடம் இல்லையே.." இன்று அவள்
சேலை கட்டிய நேர்த்தியும் அந்த பீச்
நிறத்தையும் மீறி வெளியே தெரிந்த
இடையையும் கண்டு சொக்கித்தான்
போனான். மேலும் நெற்றியில் அவள்
வைத்திருத்த குங்குமமும், கழுத்தில்
அவன் அணிவித்திருந்த தாலி
மின்னுவதையும் கண்டவனுக்கு இவள்
தன் மனைவி என்ற உரிமையும்
கர்வமும் ஒன்று சேர்ந்தது.

அவள் காதலை
காதலிப்பதை விட
அவளின் காதலில்
கரைந்து
அவள் காதலிலே
தொலைந்து
போக ஏங்கியது அவன் மனம்.

அதே பார்வையோடு அவன் அருகில்
வர மது கையில் வைத்து இருந்த
காஃபி கப்பை பார்த்தபடி சிலையாய்
நின்றாள். "இன்னைக்கு வீட்டிற்கு
போகலாம் மது. இதற்கு மேல்
என்னால் முடியாது" என்றவன்
"எனக்கு காஃபி வேணாம் மது. டிபன்
எடுத்து வைங்க" என்று பையில்
இருந்த ட்ரெஸை எடுத்துக் கொண்டு
குளியல் அறைக்குள் புகுந்தான்.

மது கீழே வர அவளது முகம்
சிவந்திருந்ததையும் காஃபி கப்
அப்படியே திரும்பி வந்ததையும்
கவனித்த பார்வதி அம்மாள் ஏதோ
புரிய மௌனமாகச் சிரித்துவிட்டு
டிபனை எடுத்து டைனிங் டேபிளில்
வைத்தார்.

கீழே கார்த்திக் வர எல்லாரும் சாப்பிட
அமர்ந்தனர். சாப்பிட்டு விட்டு பாட்டிக்கு
உதவி செய்தபடி இருந்தாள் மது.
ஞாயிறு என்பதால் கார்த்திக்கிற்கு
பிடிக்கும் என்று அசைவம் வகையாக
சமைத்து அசத்தினார் பார்வதி.
எல்லாம் சமைத்து வைத்து விட்டு
இருவரும் ஹாலில் வந்து அமர்ந்தனர்.
கார்த்திக்கும் தாத்தாவும்
தோட்டத்திற்கு ஒரு வேலையாக
சென்றிருந்தனர்.
 

Yaazhini madhumitha

Well-Known Member
"குழந்தை பெற்றுக் கொள்வதை
தள்ளிப் போட்டு வைத்திருக்கிறீர்களா
மதுமா?" என மதுவை பார்த்துக்
கேட்டார் பார்வதி.

"இல்லையே பாட்டி" என்று
அமைதியாகச் சொன்னாள் மது.

"இல்லை என்றாள் சந்தோஷம் தான்.
ஆனால் அப்படி ஏதும் இருந்தால்
வேண்டாம் கண்ணு.. நிலாவும் இப்படி
செய்து தான் ஒரு வருடம்
தள்ளிப்போட்டாள். ஆனால்
எங்களுக்கு தான் கொள்ளுப் பேரன்
பேத்திகளைப் பார்க்க ஆசை. அவளும்
இப்போது எங்கள் ஆசையை
நிறைவேற்றி விட்டாள். கார்த்திக்கும்
கல்யாணத்திற்கு பிடி கொடுக்காமல்
இருந்தான். நாங்கள் இங்கு வந்தால்
கல்யாணப் பேச்சை எடுப்போம் என்று
வருவதையே தவிர்த்தான்.
கார்த்திக்கை நீ ஆசைப்பட்டு
மணந்ததாக உன் அத்தை சொன்னாள்.
அவன் உன்னிடம் ஆசையாக
இருக்கிறான் தானே?" என்று கேட்டார்.

காலையில் அவன் பேசியது நினைவு
வர தன் உடம்பில் உள்ள ரோமங்கள்
சிலிர்ப்பதை உணர்ந்தாள் மது. "அவர்
என்னிடம் மிகவும் பிரியமாக உள்ளார்
பாட்டி" என்றாள் மனதில் எழுந்த
சந்தோஷத்துடன்.

"கொஞ்சம் கோவக்காரன் தானம்மா..
பிடிவாதக்காரனும் கூட" என்று பாட்டி
சொல்ல "ஆமாம் பிடிவாதக்காரன்
தான்..அதான் தெரியுமே" என்று
மனதினுள் நினைத்து சிரிக்க பாட்டி
தொடர்ந்தார்.

"பொய் சொன்னால் சுத்தமாகப்
பிடிக்காது. ஆனால் அவனுக்குப்
பிடித்து விட்டால் மிகவும் அன்பாக
இருப்பான். அவன் ஏதாவது
சொன்னால் கூட கொஞ்சம்
அனுசரித்துப் போய்க்க தங்கம்" என்று
மதுவின் கைகளைப் பிடித்துப்
பேசினார் பார்வதி.

பிறகு கார்த்திக்கும் தாத்தாவும் வர
எல்லாரும் சாப்பிட்டனர்.. பின் பார்வதி
அம்மாள் இரண்டு நாளாக செய்த
பலகாரத்தை எல்லாம் மகள் வீட்டிற்கு
குடுக்க எடுத்து பாத்திரங்களில்
அனைத்தையும் அடுக்கினார். ஒரு
பக்கம் துரைசாமியும்
தோட்டத்திலிருந்து கொண்டு வந்த
காய்கறிகளை அடுக்கினார். பின்னர்
ஐந்தரை மணி அளவில் இருவரும்
கிளம்ப பார்வதி அம்மாள் மதுவின்
காதில் கிசுகிசக்க... பதிலுக்கு மதுவும்
காதில் ஏதோ பேச.. மதுவை
கட்டியணைத்து முத்தமிட்டார்
பார்வதி.

கார் சிறு தூரம் சென்றபின், "என்ன
மது பாட்டியும் நீயும் ஏதோ ரகசியம்
பேசிட்டு இருந்தீங்க?" என்று கேட்டான்.

அவன் கேட்பான் என்று மது
எதிர்பார்த்தது தான். "வந்து பாட்டிக்கு
கொள்ளுப் பேரனையோ
பேத்தியையோ பார்க்க ஆசையாம்
சீக்கிரம் நல்ல செய்தி சொல்ல
வேண்டும் என்று சொன்னார்கள்" என
நேரே ரோட்டைப் பார்த்தபடி
கண்களால் சிரித்து சொன்னாள்.

"அதற்கு நீ ஏதோ சொன்னது போல
இருந்ததே மது" என்று விடாமல்
ஸ்டியரிங்கில் விரல்களை தட்டியபடிக்
கேட்டான்.

விடமாட்டான் என்று நினைத்தவள்
"அ...அது இரண்டு மாதங்களில்
கண்டிப்பாக நல்ல செய்தி சொல்லி
விடுவேன் என்று சொன்னேன்" கார்
கதவு வழியாக வெளியேப் பார்த்தபடி
சொல்லி முடித்தாள்.

"ஏன் மது அப்படிச் சொன்ன?" என்று
கார்த்திக் கேட்க திடுக்கிட்டு மது
அவனைத் திரும்பிப் பார்க்க "ஒரே
மாதத்தில் என்று சொல்லி இருக்க
வேண்டியது தானே" என்று கூறிக்
கண்ணடித்தான்.

மதுவிற்கு என்ன செய்வது என்று
தெரியவில்லை. அவனைப்
பார்க்காமல் நேராக ரோட்டின் மேலே
கண்களை வைத்தபடி வந்தாள்.
இருவரும் பொள்ளாச்சி அடைவதற்கு
முன்பே நன்கு மழைப் பெய்ய
ஆரம்பித்து விட்டது. போன் வர
எடுத்துப் பார்த்தவள் "அத்தை தான்"
என்று கேள்வியாய் நோக்கிய
கார்த்திக்கிடம் கூறிவிட்டு போனை
அட்டென்ட் செய்து காதில் வைத்தாள்.

"............. ஸ்பேர் கீ இருக்கு மது..
நாளைக்கு காலையில் நாங்கள்
வருவதற்காக நீ சீக்கிரம் எழ
வேண்டாம்" - ஜானகி அம்மாள்.

"சரி அத்தை" என்று சொன்னவளின்
கண்களில் சிரிப்பும் உதட்டில் ஒரு வித
படபடப்பும் இருந்தது. பெண்ணுக்கே
உரிய வெட்கமும் பதட்டமும் மதுவிற்கு
எழுந்தது.

போனை வைத்தவள் "அத்தையும்
மாமாவும் எங்க வீட்டில் தான்
இருக்காங்கலாம். பொள்ளாச்சில
மழை ரொம்பவே அதிகமாக இருக்காம்.
அதுனால இன்னிக்கு நைட் அங்க
இருந்துட்டு வரதா சொன்னாங்க"
என்று ஓரக்கண்ணால் பார்த்தவாரே
கூறி முடித்து தண்ணீர் பாட்டிலை
எடுத்து தண்ணீரை குடித்தாள்.

"எல்லாமே சாதகமாயாக நடக்கிறதே
மது" என்று கூறி ஸ்டியரிங்கை இறுகப்
பற்றிபடி புன்னகையுடன் மதுவைப்
பார்க்க மதுவிற்கு குடித்த தண்ணீர்
வெளியேறி வந்துவிடும் போல
இருந்தது. மதுவிற்குப் புரிந்து விட்டது..
"இன்னிக்கு இவன் ஒரு முடிவுல தான்
இருக்கான்" என்று நினைத்தவளுக்கு
இதயம் தாறுமாறாகத் துடித்தது. பின்
ஏழரை மணி அளவில் வீட்டை அடைய
மழை பேயாகப் பெய்து கொண்டு
இருந்தது.

காரை ஷெட்டில் நிறுத்தி விட்டு
உள்ளே பைகளைத் தூக்கி வந்த
போதே பாதி நனைந்து விட்டனர்.
பின்னர் சென்று தாத்தா-பாட்டி
கொடுத்ததை எடுத்து வந்தவர்கள்
முழுதாக நனைந்து விட்டனர்.
எல்லாவற்றையும் உள்ளே எடுத்து
வந்த பிறகு, கார்த்திக் மாடிக்கு
சென்று ஏதாவது நனைகிறதா என்று
பார்த்து விட்டு கதவைகளை எல்லாம்
பூட்டிவிட்டு அறைக்குள் நுழைந்தான்.

அறைக்குள் நுழைந்தவன் மதுவைப்
பார்த்து அப்படியே நின்று விட்டான்.
ட்ரெஸிங் டேபிளின் முன்னால் நின்று
தலை முடியை முன்னால் போட்டு
தலையைத் தட்டிக் கொண்டு
இருந்தாள். சேலை வேறு முழுதாக
நனைந்து அவளது அங்கங்களின்
செழுமையைக் காட்ட கார்த்திக்கின்
கால்கள் தானாக அவளிடம் சென்றன.
ஏற்கனவே காலையில் இருந்து
மந்திரித்து விட்ட கோழி மாதிரி தான்
இருந்தான். இப்போது சொல்லவா
வேண்டும்

அவன் கால் அடிச் சத்தத்தை
உணர்ந்தவள் "டவல் வைத்திருக்கேன்
பாருங்க...எடுத்து தலையை துடைங்க..
இ....... " என்று சொல்லிக் கொண்டே
போனவள் அவன் பின்னால் இருந்து
அணைக்க அப்படியே நின்று விட்டாள்.
அவளை அணைத்தவன் மூச்சு விடக்
கூட மறந்து நின்றிருந்தவளின்
பின்னங்கழுத்தில் முகம் புதைக்க மது
கண்களை மூடி நின்றாள்.

அவளைத் தன் புறம் திருப்பியவன்
தன் இரு கரங்களால் அவளின்
இடுப்பைச் சுற்றி வளைத்து அவளைத்
தன் அணைப்பிற்குள் நிறுத்தி
அவளது கழுத்தில் தன்
உதடுகளால் வல வர மதுவின் உடல்
அவனது செய்கையில் நெகிழவும்
நடுங்கவும் செய்தன. அவன்
உஷ்ணத்தை உணர்ந்து அவனது
செய்கையிலும் மது கூசிச் சிலிர்த்து
நின்றாள்.

பின் கைகளுக்குள் நிறுத்தியபடியே
மதுவைப் பார்த்து "மது நான் ஒன்று
கேட்கிறேன். பதில் சொல்" எனக்
கேட்டான். "ம்" என்றாள் அவன் சட்டைப்
பட்டனைப் பார்த்தபடியே. "என்னைப்
பார் மது" என்று கார்த்திக் சொல்ல
அவனை நிமிர்ந்து நோக்கி, "என்ன?"
என்று அவனைப் பார்த்தபடி கேட்டாள்
மது. ஆனால் உள்ளே சென்ற குரல்
தான் வெளியே வரவே இல்லை.

"மது இதில் உனக்கு சம்மதம் தானே...
இப்போது இந்த விஷயத்தில் உனக்கு
அருவருப்பு இருக்கா? ஏனென்றால்
உன்னைக் கட்டாயப்படுத்தி உன்னை
நான் ஹர்ட் பண்ண விரும்பல.
என்னவாக இருந்தாலும் சொல்லு"
என்று அவளின் விருப்பத்தைக்
கேட்டான். இருந்தாலும் வேண்டாம்
என்று சொல்லிவிடுவாளோ என்ற
ஐயமும் பதட்டமும் உள்ளுக்குள்
இருந்தது.

"இல்லை" என்றாள் மது அமைதியாக
கார்த்திக்கைப் பார்த்து.

"நிஜமாகவா மது?" என்றவனின்
முகத்தை மது கூர்ந்து பார்க்க அதில்
தெரிந்ந சந்தோஷம், தயக்கம், ஏக்கம்,
தவிப்பு, பாசம், காதல், காமம், ஆசை
என அனைத்தையும் கண்டு மது ஆடித்
தான் போனாள்.

அவளை, அவன் கைகள் இடுப்பைச்
சுற்றி கோர்த்து அணைத்துக்
கொண்டு அவளின் பதிலை
எதிர்ப்பார்க்க, மது தன் ஒரு கையை
அவன் தோளில் வைத்து இன்னொரு
கையை அவன் கன்னத்தில் வைத்து
"எனக்கு எங்க வீட்டில் எல்லார்
கிட்டையும் இருந்த பாதுகாப்ப விட
உங்க கிட்ட இப்போ அதைவிட
அதிகமா ஃபீல் பண்றேன். You're the
best thing ever happened in my life
karthick" என்றாள். அவள் அவன்
கண்களைப் பார்த்துச் சொல்ல
கார்த்திக் விவரிக்க முடியாத
சந்தோஷத்திற்குச் சென்றான்.
அவனைப் பொருத்த வரை அவள் தன்
மேல் பைத்தியமாக இருக்கிறாள்
என்று அவன் அறிந்த உண்மை..
ஆனால் அவள் சம்மதம் இல்லாமல்
உடலளவில் மட்டும் வாழவும் அவன்
விரும்பவில்லை. அப்படி
நினைத்தவனுக்கு அவள் சொன்ன
வார்த்தைகள் காதில் தேனாய்ப்
பாய்ந்தன.

"மது" என்று அவளை கார்த்திக் இறுக
அணைக்க மதுவும் அவனின்
அணைப்பை ஏற்று தானும் அவனை
அணைத்தாள். அவனது அணைப்பில்
உலகம் மறந்து நின்றவள் "ஐ லவ் யூ
மது.. ஐ லவ் யூ ஸோ மச்" என்று
கார்த்திக் கூற மது தான் எட்டு
வருடங்களாக இந்த வார்த்தைகளுக்கு
ஏங்கியது நினைவு வர அவனை
மேலும் இறுக அணைத்தாள்.

"தேங்க்யூ... தேங்க்யூ ஸோ மச்" என்று
மது அவன் நான்கு வருடங்களுக்கு
முன்னால் சொன்னது போலச்
சொல்லிக் கேலி செய்ய, அவளை
விலக்கி நிறுத்தியவன் "ஏய் என்னக்
கிண்டலா" என்று அவள் இடுப்பைக்
கிள்ள மது கூச்சத்தில் நெழிந்தாள்.

அவளை மேலும் அருகில் இழுத்து
தாடையை நிமிர்த்தி அவள் இதழ்
நோக்கி குனிந்தவன், ஒரு நிமிடம்
அப்படியே நின்று அவள் கண்மூடி
நிற்பதைப் பார்த்து குறுஞ்சிரிப்புப்
புரிந்தான். முத்தமிடாமல்
இருந்தவனை கண்களைத் திறந்து
பார்த்த மது அவனது செய்கையைக்
கண்டு முறைத்து "ஐ லவ் யூ
கார்த்திக்" அவனது சட்டைக் காலரை
பிடித்து இழுத்து அவன் இதழ்மேல் தன்
இதழைப் பதித்தாள். சின்னச் சின்னப்
பிழைகளோடு அவள் தந்த முதல்
முத்தம் அவனுக்கு இனிமையாக
இருந்தது.

மறுநொடி அவளை விலக்கி நிறுத்தி
"என் மக்கு மதுவே எதையுமே
ஒழுங்காகச் செய்யத் தெரியாதா"
என்று கேட்டு அடுத்த நொடியே தனது
ஆழ்ந்த முத்தத்தினால் அவளைத்
திண்டாடச் செய்தான்.

இருண்ட வானமும் வெளியே பெய்து
கொண்டிருந்த மழையும் அவர்களின்
காதலையும் காமத்தையும்
ஆசிர்வதிக்க கார்த்திக்கின்
காதலிலும் மோகத்திலும் மதுவின்
நாணமும் கூச்சமும் தோற்று
அன்றைய இரவு இருவருக்கும் மறக்க
முடியாத இரவாய் அமைந்தது. தன்
பெண்மையைக் களவாடியவன்
மார்பின் மீதே சாய்ந்தே
உறங்கியவளை ஆசையும் காதலுமாக
அனைத்திருந்தது அவனது கைகள்.

அடுத்த நாள் காலை எட்டு மணிக்கே
எழுந்தாள் மது. எழுந்தவளின்
கையைப் பற்றி தன் மேலே சாய்த்துக்
கொண்டவன் "என்ன அவசரம் மது.
போகலாம் தூங்கு" என்றான் கார்த்திக்.

"சரியா இருக்கே.. மணி எட்டாச்சு...
எழுந்திருங்க கார்த்திக் " என்று
அவனைத் தூங்க விடாமல் போட்டு
உலுக்கினாள் மது.

"போடி" என்று திரும்பிப் படுத்துக்
கொண்டான் கார்த்திக்.

"போடியா?" என்று அவன் முதுகில்
குத்தியவள் "போடா" என்று விட்டு
அவன் எழுவதற்குள் குளியல்
அறைக்குள் புகுந்து விட்டாள். அவள்
போடா என்றதும் அவன் திரும்ப
அதற்குள் குளியல் அறைக்குள்
ஓடியவளைக் கண்டு சிரித்துவிட்டு
மறுபடியும் தலை அணையில் கண்
மூடிச் சாய்ந்தான். பின் மது குளித்து
வர அவளைச் சீண்டிவிட்டு தானும்
வந்து கிளம்பினான்.

ஒருவாரம் இப்படியே நகர்ந்தன.
இருவரும் அடுத்தவரின்
அருகாமையைச் சொர்க்கமாய்
உணர்ந்தனர். இப்படி இருக்க ஒரு
ஞாயிறு காலை கார்த்திக் எதையோ
தங்கள் அறையில் தேடிக் கொண்டு
இருக்க, அங்கு வந்து மது அவனை
கவனித்தபடி நின்றாள்.

அதைப் பார்த்தவன் "ஏன் மது.. அதான்
தேடிட்டு இருக்கேன்ல என்னன்னு
வந்து கேட்க மாட்டையா?" என்று
மதுவின் மேல் காய்ந்தான்.

"ஓ... அப்படி என்னத்த தேடிட்டு
இருக்கீங்க" என்று வெறுப்பேற்றியபடி
மெதுவாக அருகில் வந்து நின்றாள்
மது.

அவளை நிமிர்ந்துப் பார்த்து
முறைத்தவன் "ராங்கி... திமிரு டி
உனக்கு.. இரு வச்சுக்கர" என்றபடி
மறுபடியும் தேடினான்.

"அட என்ன தேடறீங்க சொல்லுங்க"
என்று கேட்டாள் மது இப்போது
சீரியஸாகவே.

"மொபைல் மது" என்றான்
தேடியபடியே. "இதுக்கு தானா.. என்
மொபைல் இங்க தான இருக்கு.
எடுத்து கால் பண்ண வேண்டியது
தானே" என்று மது சொல்ல, அவளது
மொபைலை வாங்கி கால் செய்ய அது
அவர்களது மெத்தையின் அடியில்
இருந்தது.

மொபைலை எடுத்தவன் "அது எப்படி
இங்கே?" என்று யோசித்தவன் மது
முறைக்க "ஓ நேத்து நைட்... " என்று
நேற்று இருவரின் தனிமையில் போன்
டிஸ்டர்ப் செய்ய அதைத் தூக்கி
எங்கேயோ போட்டவன் இப்போது
அதை நினைத்து சிரித்துக் கொண்டே ,
அவளிடம் அவளது மொபைலைக்
கொடுத்தான்.

ஏதோ நியாபகம் வந்தவனாக "ஏய்
அந்த மொபைலைக் கொடு.. என் பேர
என்னன்னு போட்டு ஸேவ்
பண்ணிருக்க?" என வினவி அவளது
மொபைலைக் கேட்டான்.

"இல்லை.. ஒன்றுமில்லையே" என்று
மொபைலை கைகளால் பின்னால்
மறைத்தாள்.

"ஓகோ... ஏய் நான் பார்த்துட்டேன்
ஏதோ TLன்னு இருந்துச்சு...அப்படினா
என்ன?" என்று அவளைப் பிடித்து
நிறுத்திக் கேட்டான்.

"சரி விடுங்க அப்போ தான்
சொல்லுவேன்" என்று மது சொல்ல
கார்த்திக் அவளை விட்டுவிட்டான்.

"TL ன்னா tubelight... அன்னைக்கு
நான் ப்ரபோஸ் பண்ண அப்புறம்
அப்படி வைத்தது.. தானாக வந்து
ஒருத்தி காதலைச் சொன்னாலும்
புரிந்து கொள்ளாத tube light " என்று
நக்கலாக மது கூற "எது tubelight ஆ?"
என்று மதுவைத் துரத்த மதுவும் அவன்
கைகளுக்குச் சிக்காமல் கீழே
ஓடினாள்.

கடைசியாக ஹாலில் வைத்துப்
பிடித்தவன் அவளை இரு கைகளாலும்
பற்றித் தூக்கிவிட்டான். "அய்யய்யோ
கார்த்திக் யாராது வரப்போறாங்க..
விடுங்க" என்று சிணுங்கினாள்.

"யார் வரப் போறா?.. அம்மாவும்
அப்பாவும் கோயிலுக்கு
போயிருக்காங்க" என்று அவளை
மேலும் இறுக்கி அவளின் காதில்
ஏதோ சொல்ல இருவரும் சிரித்தனர்.

அவர்கள் இருவரும் அப்படியே
சிரித்துக் கொண்டு இருக்க அந்த
நேரம் அம்மா வீட்டிற்கு வந்த நிலா
"அண்ணி" என்று வாயைப் பிளந்து நின்றாள். அண்ணி என்ற நிலாவின்
குரலில் இருவரும் திடுக்கிட கார்த்திக்
மதுவை டக்கென்று இறக்கிவிட்டான்.

"வாங்க மாப்பிள்ளை" என்று
சமாளித்து அரவிந்த் அருகில் சென்று
விட்டான் கார்த்திக்.

தன் அண்ணனின் செய்கையைக்
கண்டு சிரித்தவள் மதுவிடம் திரும்பி
"என்ன அண்ணி இரண்டு பேரும் இந்த
உலகத்திலையே இல்லை போல"
என்று கண் சிமிட்டி அவளைக்
கலாய்த்தாள்.

அசடு வழிந்த மது ஏதோ சொல்ல
வந்து சிரித்துவிட்டு "வா நிலா" என்று
நிலாவையும் அவள் கணவரையும்
வரவேற்று விட்டு சமையல்
அறைக்குள் நுழைந்து விட்டாள். சற்று
நேரத்தில் ஜானகி அம்மாவும்
வேலுமணியும் வந்து சேர வீடே அன்று
கலகலப்பாக இருந்தது. நாட்கள்
வேகமாக நகர்ந்தன.. தன்
வாழ்க்கை இனிமையாக செல்வதை
மது சொர்க்கமாக உணர்ந்தாள்.

ஆனால் அவளது சந்தோஷம் கூடிய
விரைவில் சீர்குலைந்து போகும்
என்பதை மது அப்போது
அறியவில்லை.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
யாழினி மதுமிதா டியர்

என்ன கார்த்திக்கின் அப்பா ப்ரெண்ட் மகள் மாயாவா ஆயாவா அந்த வில்லி வந்து ஏதாவது இடைஞ்சல் பண்ணப் போறாளா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top