பிரிவு : அறத்துப்பால், இயல் : துறவறவியல், அதிகாரம் : 29. கள்ளாமை, குறள் எண்: 282 & 286.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 282:- உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.

பொருள் :- குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே; அதனால் பி்றன் பொருளை அவன் அறியாத வகையால், `வஞ்சித்துக் கொள்வோம்’ என்று எண்ணாதிருக்க வேண்டும்.

அடுத்தவர் பொருளை அவருக்குத் தெரியாமல் திருடுவோம் என்று மனத்தால் நினைப்பதும் தீமையானது.
 

Sasideera

Well-Known Member
குறள் 286:- அளவின்கண் நின்றுஒழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.

பொருள் :- களவு செய்து பிறர்பொருள் கொள்ளுதலின் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.

உயிர்களை நேசிக்கும் ஆசை இல்லாதவரே அடுத்தவர் பொருளைத் திருடும் பேராசை உடையவர் ஆவர்.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-
தனக்கு உரிமையில்லாத மற்றவர் உடைமைகளை அவரறியாமல் கைக்கொள்ளவோ, வஞ்சித்து எடுத்துக் கொள்ளவோ, எண்ணாதிருத்தலும் அங்ஙனம் செய்யாதிருத்தலும் கள்ளாமை ஆகும். பொருள் ஈட்டுவதற்காக மறைந்தொழுகல் செய்யலாகாது என்பதைக் கள்ளாமை அதிகாரம் சொல்கிறது.
சிறிதேயானாலும் களவாடக்கூடாது; களவுசெய்ய வேண்டும் என்று எண்ணுதலும் தீமையே; களவால் செல்வம் பெருகுவது போன்று தோன்றினாலும் அது அழிந்தே தீரும்; கண்டுபிடிக்கப்பட்டால் மிகுந்த துன்பத்தைத் தரும்; களவு செய்வார் அன்பில்லாதவராகவே இருப்பர்; அவர் வரம்புமீறிய வாழ்வு நடத்துவர்; இருள் அறிவு கொண்டவர்; களவின் சுவை கண்டவர் திரும்பவும் மாறுதல் கடினம்; மற்ற நல்ல தொழில்களைப் பயிலாதவர் நேரற்ற செயல்களையே புரிவர். ஆனால் கள்ளார் வானுலகமும் செல்லமுடியும். இவை இத்தொகுப்பில் உள்ள பாடல்கள் கூறும் செய்திகள்.
கள்ளாமையை ஒருவகை அறமாகவே கருதுகிறார் வள்ளுவர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top