உன் கை வடிக்கும் சிலை நான்
என் கண் பார்க்கும் சித்திரம் நீ!
உன் உயிர் மீட்டும் வீணை நான்
என் உயிர் தீண்டும் சுவாசம் நீ!
உன் வன் குரலின் கானம் நான்
என் மெல் இசையின் நாதம் நீ!
உன் மொழி பேசும் கிள்ளை நான்
என் மடியில் தூங்கும் பிள்ளை நீ!
உன் சுமை தாங்கும் தலைவி நான்
என் துயர் தீர்க்கும் தலைவன் நீ!
உன் மனம் குளிரும் நிலவு நான்
என் உடல் சிலிர்க்கும் தென்றல் நீ!
உன் கைகோர்க்கும் தேவதைநான்
என் கை வணங்கும் தெய்வம் நீ!
உன் வாழ்வின் முழு அங்கம் நான்
என் முழு வாழ்வே நீதான்!!!
என் கண் பார்க்கும் சித்திரம் நீ!
உன் உயிர் மீட்டும் வீணை நான்
என் உயிர் தீண்டும் சுவாசம் நீ!
உன் வன் குரலின் கானம் நான்
என் மெல் இசையின் நாதம் நீ!
உன் மொழி பேசும் கிள்ளை நான்
என் மடியில் தூங்கும் பிள்ளை நீ!
உன் சுமை தாங்கும் தலைவி நான்
என் துயர் தீர்க்கும் தலைவன் நீ!
உன் மனம் குளிரும் நிலவு நான்
என் உடல் சிலிர்க்கும் தென்றல் நீ!
உன் கைகோர்க்கும் தேவதைநான்
என் கை வணங்கும் தெய்வம் நீ!
உன் வாழ்வின் முழு அங்கம் நான்
என் முழு வாழ்வே நீதான்!!!