வானத்தை கூரையாக்கினேன்...
மழைத்துளிகளை கோர்த்து எடுத்தேன்...
மின்னலை இழுத்து சங்கிலியாக்கி
ஊஞ்சல் ஒன்று உனக்காக செய்தேன்...
வெண்பஞ்சு மேகங்களை
பொன்னிற மேடையாக்கி
மெத்தை அமைத்து காத்திருக்கிறேன்...
வீதியோடு செல்லும் வெண்ணிலவே
என் வீடு வருவது எப்போது...