Hi aravin sorry for the delay reply ..Hi mam
நன்றாகப்போய்க்கொண்டிருந்தகதையை அதிவிரைவாய் முடித்துவிட்டீர்களே,சின்னக்கதையாக இருந்தாலும் நன்றாக இருந்தது mam.
நன்றி
Aravin22
Hi da thanks a lot manice storykka..super
மிக்க நன்றி அண்ணா ...சகோதரி உமா மகேஸ்வரி {எ} கோடி உமா அவர்களுக்கு,
தங்களின் குறுநாவல் காதலின் சங்கீதம் பற்றி சில வரிகள் சகோதரி. என் மனதில் பளீச் என்று தோன்றிய எண்ணம், ஏன் இந்த நாவலை இப்படி சட் என்று முடித்துவிட்டர் என்று தோன்றியது சகோதரி. விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து, பின் விரும்பி திருமணப்பந்தத்தை ஏற்றுக்கொள்வது என்ற ஒரு வரி கோல்டன் கரு. இன்றைய பெருபாலும் நாவலின் அடிநாதம் ஆகும் சகோதரி.
சில நாவல்கள் படிக்கும் போது எப்போது முடியும் என்ற எண்ணம் தோன்றும். ஆனால் இந்த நாவல் படிக்கும் போது இன்னும் தொடர்ந்து இருக்கலாமே என்ற எண்ணம் வந்தது சகோதரி.
நல்ல குறுநாவல், சிறுநகைசுவை கூடிய உரையாடல், அதற்குள் சிறு வில்லன், வில்லி, ஒரு காமடியன், ஒரு துணை நாயகி, ஒரு குணசித்திரபாட்டி, அந்த பாட்டிக்கு ஒரு பிளாஷ்பேக், என அதிரடி செய்துள்ளீர்கள்.
நாவலில் வரும் ஹீரோ,ஹீரோயின் முறையே, ப்ரத்யுஷ் – சங்கீதா, தர்மதுரை – தங்கம், மூர்த்தி – லலிதா, ப்ரீத்தி – சரவணன், பேத்தி கீதாஞ்சலி, கெளதம் – ஸ்ருதி, தம்பி ராஜா, மற்றும் பாண்டியம்மா, மாரியம்மா, ராஜதுரை, மருதாயி, மேகலை, மஹிமா, வேலு, குமுதவள்ளி பாட்டி, சாந்தி அக்கா, மாரியப்பன், வித்யா அவர் மகள் ஹரிதா, ரவுடி தாமோதரன் என பலர் வந்தாலும் நினைவில் இருக்கிறர்கள்.
அதேபோல் நிறைய இடங்களில் மனதில் சிரிப்பு வந்துக்கொண்டு இருந்தது சகோதரி. ஹீரோயின் ஹீரோவை அடித்து ஆஸ்பிட்டல் அனுப்பும் போது, தம்பி ராஜா அக்காவை பற்றி பேசும் போது ஹீரோவிம் மைண்ட் வாய்ஸ், ஹீரோயினை பார்க்க ஹீரோ இரவு போகும் போது உடன் வரும் தோழன் கெளதமின் உரையாடல் பொங்கும் சிரிப்பு.என பலஇடங்கள் பிடித்தம் சகோதரி.
சீண்டிக்கொண்டே காதல் செய்வதும், நாம் ஒருவர்மீது ஒருவர் வைக்கும் உண்மை அன்பு நம்மை ஈர்க்கும் சேர்க்கும் என்பது இந்த நாவலின் தன்மை சகோதரி. நன்றி அன்புடன் V.முருகேசன்.