E3 Nee Enbathu Yaathenil

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam

ஊருக்கு வந்தவுடன் கண்ணனுக்கு பார்வையெல்லாம் பக்கத்து தோப்பு வீட்டிற்கு போகின்றது பார்தீர்களா,பிள்ளைப்பாசம் அப்படி பார்க்கச்செயகின்றது,கட்டிய மனைவி வேண்டாம் ஆனால் தன் பிள்ளை வேணும்,அந்த இருட்டிலும் தன்குழந்தையை வரிவடிவமாகவேனும் பார்க்கவேண்டுமென்று இரத்தபாசம் தூண்டுகின்றது,நான் நினைக்கிறேன் கண்ணன் முதன்முறையாக சுந்தரி பற்றி இப்போதுதான் நல்லவிதமாக நினைக்கின்றார் , அதற்கு விமலா அவர்களின் தற்கொலை முயற்ச்சியும் சுந்தரி அவரை காப்பாற்றியதும்தான் காரணம்,சுந்தரி எவ்வளவு தைரியமாக தோட்டக்கிணற்றுக்குள் குதித்து காப்பாற்றியிருக்கின்றார் கெட்டிக்காரிதான்,எப்பவுமே கைநழுவிப்பபோனது பொருளானாலும் சரி உறவானாலும் சரி அதன் மதிப்பே தனிதான்,இனிமேல்தான் சுந்தரியின் பழக்கவழக்கம் பண்பு உயரம் இவைகளை பார்த்துப் பார்த்து கண்ணன் ஏங்கப்போகின்றார்.

நன்றி
Aravin22
 

Sundaramuma

Well-Known Member
Hi mam

ஊருக்கு வந்தவுடன் கண்ணனுக்கு பார்வையெல்லாம் பக்கத்து தோப்பு வீட்டிற்கு போகின்றது பார்தீர்களா,பிள்ளைப்பாசம் அப்படி பார்க்கச்செயகின்றது,கட்டிய மனைவி வேண்டாம் ஆனால் தன் பிள்ளை வேணும்,அந்த இருட்டிலும் தன்குழந்தையை வரிவடிவமாகவேனும் பார்க்கவேண்டுமென்று இரத்தபாசம் தூண்டுகின்றது,நான் நினைக்கிறேன் கண்ணன் முதன்முறையாக சுந்தரி பற்றி இப்போதுதான் நல்லவிதமாக நினைக்கின்றார் , அதற்கு விமலா அவர்களின் தற்கொலை முயற்ச்சியும் சுந்தரி அவரை காப்பாற்றியதும்தான் காரணம்,சுந்தரி எவ்வளவு தைரியமாக தோட்டக்கிணற்றுக்குள் குதித்து காப்பாற்றியிருக்கின்றார் கெட்டிக்காரிதான்,எப்பவுமே கைநழுவிப்பபோனது பொருளானாலும் சரி உறவானாலும் சரி அதன் மதிப்பே தனிதான்,இனிமேல்தான் சுந்தரியின் பழக்கவழக்கம் பண்பு உயரம் இவைகளை பார்த்துப் பார்த்து கண்ணன் ஏங்கப்போகின்றார்.

நன்றி
Aravin22
எப்பவுமே கைநழுவிப்பபோனது பொருளானாலும் சரி உறவானாலும் சரி அதன் மதிப்பே தனிதான்,இனிமேல்தான் சுந்தரியின் பழக்கவழக்கம் பண்பு உயரம் இவைகளை பார்த்துப் பார்த்து கண்ணன் ஏங்கப்போகின்றார்.
Super Aravin22:):):)
 

rathippria

Well-Known Member
:)
கண்ணன் நான்
ஆம் கண்ணன் நான்
மாய கண்ணன் இல்லை நான்
மானிட கண்ணன்... துரை கண்ணன் நான்
ஆசை எனக்கும் உண்டு
என் இணை எனக்கு இணையாய்
இருத்தல் வேண்டுமென எண்ணுதல் இயல்பு
படிக்கும் வயதில் தலையாட்டி
பிடிக்காத அடமெல்லாம் பிடித்து பின்
வேண்டாத எண்ணமெல்லாம் கொண்டு
சந்தித்தேன் திருமணத்தை
நிந்தித்தேன் அவளை

வேண்டாம் என்றான பின்பு
கடுகும் மலை ஆகுமல்லவா
அதே தான் இங்கும்
கடுகு ஆனது மலை
உயிர் பிரிந்தது உடலை
எனக்கு அவள் உயிரல்ல
என்னுயிர் அவளுள்

சீமைக்கு சென்று வந்த என்னை
சீமை கருவேல மரம் என்றாய்
சீமை கருவேல மரம் நஞ்சாமே
நஞ்சு நான் சரி
நஞ்சினால் வந்த பிஞ்சினை
மட்டும் ஏற்பது ஏன்
அபராஜிதன் ஆமே அவன்
உலகை வெல்லும் கடவுளாம்
கண்ணனையும் வெல்லுவானோ
என் மனதையும் வெல்லுவானோ
காத்திருக்கிறேன் தோற்க
Ennidam varthai ye illai unnai paarata darlu....good job keep writing more and more;)
 

rathippria

Well-Known Member
என்ன பரபரப்பு..
என்ன விறுவிறுப்பு..

ஐபில் sjmல தான சொன்னீங்க..
இதுலயே சம்மயா பின்னிட்டீங்க போங்க...

பட்டை தீட்டாத வைரம்
தங்கத்தில் பொருந்துமா..
தீட்டும் போது சேதாரம்
தங்கத்துக்கு அதிகமா...

காத்திருக்கிறோம் உங்கள் ப்ளாரல்(floral) கலெக்ஷனை கான...
heyy ennama eluthiringa ellarom...so nice darlu...nalu variyil nalum chumma nacchunu irruku;)
 

fathima.ar

Well-Known Member
பெரியவர்கள் தன் ஆசையால்
எடுக்கபட்ட முடிவும் மறுப்பும்..
விளையாடி சென்றது
இளையவர்களின் வாழ்வில்...

கட்டாய திருமணத்திற்கு
உடன்படும் ஆண்..
நான்கு நாட்களில்
கட்டுபாடுகள் நீங்கி விடுமா??

கண்டவுடன் ஏற்படும் ஈர்ப்பு..
புற அழகால்..
பழகினால்தான் அறிய முடியும்
அக அழகை..

மதியின்றி செய்த செயல்கள்
விதியாகி போனது...
ஞானம் வந்தபின் முடியுமா
இழந்தவைகளை மீட்க..
 

Adhirith

Well-Known Member
Hi Friends,

Herecomes the 3rd episode

EPISODE 3


:)

Hi. Malli....
ஒரு ஸ்மைலியோட ஒரு பதிவு....
முதல் முறையாக.....
So happy....

பட்டை தீட்டப் படாத வைரத்தின்
வைர நெஞ்சம் வைராக்கியம்
உடையதாக இருக்குமா?????


ஈரப் புடவையில் நடக்க முடியாமல்
தடுமாறும் விமலா அம்மாவுக்கு
ஈரத்தை பிழிந்து ,உதவி செய்யும்
சுந்தரி தான் எனக்கு அழகாக தெரிகிறாள்...
ஒரு ஒரு சின்ன விஷயத்துக்கும்
நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம்....
I hope I understand the
working of your mind veryyyyyyyy well..
Am I??????...:cool:


கண்ணனின் அப்பா ஒரு யதார்த்தவாதியாக
தான் எனக்கு தெரிகிறார்....


எந்த நேரத்திலும் பணி நீக்கத்திற்கு
வாய்புள்ள IT துறையில் வேலை பார்க்கும்
தன் மகனுக்கு அப்படி ஒரு நிலை வந்தால்,
அவனுடைய financial securityஐ
மனதில் கொண்டு சொத்துப் பற்றி பேசுவதில்
எந்த தவறும் இல்லை என்று தான்
தோன்றுகிறது....


கண்ணனின் சாயல் சின்ன கண்ணனிடம்...
காணும் சுந்தரியின் மனநிலை அறிய
ஆவலுடன் காத்திருக்கிறேன்
அடுத்தப் பதிவிற்கு.....

இந்த பதிவு,as usual,மேஜிக்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top