"ஊர் முன்
உன்னோடு
ஊர்வலம் செல்கையில்
காண்பவர்
கண்ணெல்லாம்
காந்தம் போல நம் மீது"
"நெரிசல் நிறைந்த
சாலையில் கூட
உன்னோடு செல்வது
நிறைவான பயணம் எனக்கு"
"காலம் முழுதும்
உன் கரம் கோர்த்து
காற்று வீசும் சாலையிலும்
மழை வீசும் மாலையிலும்
மண் வாசம் அதனோடு
இளந்தென்றல் தீண்ட
தேர் மேல் பவனியாய்
ஊர்வலம் செல்வோமே
எனது உயிரே"
"என் மிதிவண்டியே
என் உடன் வருவாயா?
உன்னோடு உல்லாசமாய்
உலகம் சுற்றிடத்தான்
எனது உயிரே"
உன்னோடு
ஊர்வலம் செல்கையில்
காண்பவர்
கண்ணெல்லாம்
காந்தம் போல நம் மீது"
"நெரிசல் நிறைந்த
சாலையில் கூட
உன்னோடு செல்வது
நிறைவான பயணம் எனக்கு"
"காலம் முழுதும்
உன் கரம் கோர்த்து
காற்று வீசும் சாலையிலும்
மழை வீசும் மாலையிலும்
மண் வாசம் அதனோடு
இளந்தென்றல் தீண்ட
தேர் மேல் பவனியாய்
ஊர்வலம் செல்வோமே
எனது உயிரே"
"என் மிதிவண்டியே
என் உடன் வருவாயா?
உன்னோடு உல்லாசமாய்
உலகம் சுற்றிடத்தான்
எனது உயிரே"