படம் பார்த்து கவிதை சொல் - 2

Advertisement

Suvitha

Well-Known Member
சித்திரை மாதம்
கத்திரி வெயிலில்
நித்திரையின்றி தவிக்கின்றோம்...
அந்த வானம் சாட்சியாக
நிலவு சாட்சியாக
இந்த பூமிக்கு நீயும் வந்துவிடு...
மழையே ...ஓ...மழையே...
 

Kavyajaya

Well-Known Member
நிலாக் காதலியும் மழைக் காதலியும் ஒன்றாக பூமிக் காதலனிடம் வர:love::love:

இருவரில் யாரு அழகு என்ற வழக்கமான இருவரின் கேள்விக்கு பதில் தெரியாமல் பூமி திக்கித் திணறo_Oo_O

நிலவோ பதில் இல்லையென்பதால் தேய்ந்தது :cry:... மழையோ கோபத்தில் பதில் கூறும் வரைக்கும் வரமாட்டேன் என்றது. :mad:

பூமி என்ன பதில் கூறி சமாளித்திருக்கும் இருவரையும் :unsure:;)
 

Itsmeappu

Member
வானெங்கும் நீலம்
பால்நிலாக் கோலம்..
வீதியுலா அவள் வருகையில்
பூச்சிதரலாய் நட்சத்திரம்
பன்னீர் தெளிக்க தோழியவள்?
இதோ வந்தாளே மாரியிவள்..
வந்து தந்தாளே..
அக மகிழ்ச்சி
புற குளிர்ச்சி...
 

malar02

Well-Known Member
முழு நிலவில் மழை

உன் சாரல்களை போட்டு

மறைத்துவிட்டாய்

அதன் அழகை

ஆனால் உன் அழகை

அது வெளிச்சம் போட்டு

காட்டிவிட்டதே

வைரத்தை இறைத்து போல்

வர்ணஜாலங்கள் காட்டுகிறதே



வருணனும் சந்திரனும் கைகுலுக்க வந்தார்களா

என்னை பார் என் அழகை பார் என்று

இரவுடன் போட்டியிட வந்தார்களா

அதன் வண்ணத்தை மாற ஒருவன்

அதன் நிசப்தத்தை தடுக்க ஒருவன்



கோபக்கார கணவனின்

கோப பார்வையில்

வாடி சுருண்டு கிடக்கும் தோழியை

கண்டு ஆறுதல் அளிக்க வந்த

தோழர்களாய் ..............
 

Sainandhu

Well-Known Member
காரிருள்....
கார்மேகம்...
பின்னனி....
வெண்ணிலா....
கனத்த மழை...
முன்னனியில்...
வந்த மாயம் ...
என்ன...,
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
மழை கந்தர்வன்தான்...
நிலவில் நேசமாய்...
பூமியில் வாசமாய்...
எங்கு... எப்போது...
பொழிவான்... நிரைவான்..
மழை கந்தர்வன்தான்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top