நான் ஜனிக்காத
சமயம்
நான் இல்லை
என்ற சுமை...
உன் கருவில்
நான்
தடம் பதித்தபோது
என்னை
தாங்கி நின்ற சுமை...
நான் ஜனித்த பின்
என் பொறுப்புகள்
என்ற சுமை.....
என் குழந்தை பருவத்தில்
நெறியான வழிகாட்டுதல்
என்ற சுமை...
என் யௌவன பருவத்தில்
என் கோபதாபங்களை
தாங்கிக்கொள்ளும் சுமை...
என் வாலிபத்திலும்
என் எதிர்காலம்
என்ற
சுமையை உன்னிடம்
திணித்து
காலம் முழுவதும்
எனக்காய்
இத்தனை சுமைகளை
சுகமாய் தாங்கிய
என் அன்னைக்கு
இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...
என் அன்னையின் அரவணைப்பை
ஒரு மகளாய் உணராததை கூட
நான் அன்னையானதும் உணர்ந்தேன்....
அனைத்து அம்மாக்களுக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.....
கைபிடித்து தடம் பதிக்க வைத்தாய்... சொல்கொடுத்து இடம் பிடிக்க செய்தாய்.... அன்பிலே அறிவை வளர்த்தாய்... அயர்ந்த போதும் பசியை போக்கினாய்.... கருவினில் சுமந்து வாழ்வின் வசந்தத்தை கற்றுக் கொடுத்தவள்...... கல்லறையில் உறங்கி இழப்பினை கற்றுக் கொடுத்தாய்....