Viral Theendidu Uyirae
தீண்டல் – 7
“ம்மா கிளம்பியாச்சா? இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்படியே கிளம்பிட்டு இருப்பீங்க?...” வசீ கீழே வந்து தாயின் அறை வாசலில் நின்று கத்தினான்.
“உங்கம்மா கிட்சன்ல இருக்கா. இங்க வந்து எதுக்கு சத்தம் போடற?...” சட்டையின் பட்டன்களை போட்டுக்கொண்டே குகன் வெளியே வர,
“இந்நேரம் கிட்சன்ல என்ன பன்றாங்க? சூர்யா வேற போன் மேல...
தீண்டல் – 6
சிறிது நேரம் கோவிலிலேயே நின்று அங்குமிங்கும் சுற்றி வந்தான் வசீகரன். தன்னுடைய கேமராவினால் சில இடங்களை புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்க,
“ஏன்டா புதுசா பார்க்கிற மாதிரி ரசிச்சு ரசிச்சு எடுத்திட்டிருக்க? இங்க முன்னபின்ன வந்ததில்லையா நீ? ரொம்ப பன்றடா...” சூர்யா அலுத்துக்கொள்ள,
“எத்தனை முறை வந்தாலும் சில விஷயங்கள் புதுசா தான் தெரியும். போன தடவை...
தீண்டல் – 4 (2)
இதை பார்த்துக்கொண்டிருந்த வசீகரனுமே ஒருகணம் ஸ்தம்பித்து போனான். ஒரு நொடியும் யோசிக்கவில்லை. சூர்யாவை அழைத்து அவனின் காரை எடுக்க சொன்னவன் மொபைலை பார்த்துக்கொண்டே முன்னிருக்கையில் அமர்ந்துகொண்டான்.
பதறிப்போய் கூசி நின்ற தந்தை, தாயின் நிலை எப்படி இருக்குமென்று அவனால் வரையருக்கவே முடியவில்லை.
“வேகமா போடா...” என கோபத்தில் வார்த்தையை கடித்து துப்ப இங்கே...
தீண்டல் – 4
நல்லவிதமாய் ரிசப்ஷன் நடந்து முடிய சொன்னது போல முனீஸ்வரன் சந்தியா சந்நிதியை அங்கே இரண்டுநாட்கள் இருக்க வைத்தார். சந்தோஷமாய் தலையாட்டியவர்களுக்கு அவர் கொடுத்த அதிர்ச்சி அவரும் சேர்ந்து அங்கே தங்கிவிட்டது தான்.
ரிசப்ஷன் கிளம்பிக்கொண்டிருக்கும் பொழுதே சந்தியாவின் மாதாந்திர பிரச்சனை வந்துவிட என்ன செய்வதென தெரியாமல் பதறிவிட்டார் பார்கவி.
“இது ஒரு பிரச்சனையா?...
தீண்டல் – 3(2)
“கண்ணை என்ன பின்னாடியா வச்சிருக்க? ஆளு வளர்ந்த அளவுக்கு அறிவிருக்கா? உன்னை யாரு இங்க வர சொன்னது?...” என்று புகழ் டைனிங் ஹாலின் கடைசி பகுதியில் வைத்து கத்திக்கொண்டிருந்தான்.
அது மண்டபத்தின் சமையலறையின் நுழைவு இடமாகவும் கை கழுவும் இடமாகவும் சாப்பாட்டு அறையின் கடைசியிலும் இருந்தது. பெரும்பாலானோர் உண்டு முடித்துவிட்டபடியால் அந்தளவுக்கு கூட்டம்...
தீண்டல் – 3(1)
அம்பிகா போட்டோ எடுப்பது என்னவோ மணமக்களை எடுப்பதை போலதான் இருந்தது. ஆனால் அவருக்கு தெரியுமல்லவா ஏன் எதற்கென்று.
“பெரியம்மா எப்படியிருக்கீங்க?...” என்ற குரலில் மொபைலை உள்ளே வைத்துக்கொண்டிருந்தவர் திரும்பி பார்க்க அங்கே அபிராமி தன் கணவனுடன் நின்றாள்.
“நீ அபியில்ல...”
“நான் அபிராமி தான். வேற யாரும் இல்லை...” என அவளும் சிரித்தபடி சொல்ல,
“ஹேய்...
தீண்டல் – 2
சாக்லேட் கிரியேஷன்ஸ். சென்னையில் வளர்ந்து வரும் விளம்பர நிறுவனம். அவனளவில் தன் நண்பர்கள் ரவி, சூர்யா இருவருடன் இணைந்து வசீகரன் தன் சொந்த முயற்சியில் ஆரம்பித்தது.
தந்தை குகன் சென்னையில் அழைப்பிதழ்கள் அச்சடிக்கும் அலுவலகம் ஒன்றை பெரிதளவில் நடத்தி வருகிறார். GAV டிஸைன்ஸ். அவர்களே புது புது வடிவமைப்பில் உருவாக்கி தருகின்றனர். திருமணம்,...