Viral Theendidu Uyirae
“என்னம்மா இந்த நேரம் வந்திருக்காங்க அப்பா? தறிக்கு போனா நேரா கடைக்கு தான போவாங்க?...” சந்நிதி மெதுவாய் கேட்க,
“சும்மா, கொஞ்சம் அலுப்பா இருக்குன்னு வந்தாங்களாம்...” சமாளிப்பாக சொல்ல,
“உங்ககிட்ட விளக்கமா சொல்லிட்டாங்களாக்கும்? நம்பிட்டேன்ம்மா...” என்று கேலி பேச,
“அப்படித்தான் இருக்கும். நான் சொல்றேன்ல...” என்று பார்கவியும் புன்னகைத்தார்.
மனதிற்குள் பார்க்கும் இடம் நல்ல இடமாக சந்நிதியை நல்லவிதமாக பார்த்துக்கொள்பவனாக...
தீண்டல் – 19
ஒரு வருடம் ஆகிவிட்டது சந்நிதி சென்னையிலிருந்து வந்து. அதன் பின்னர் அங்கு செல்வதையே தவிர்த்துவிட்டாள். ராதா எத்தனை சொல்லியும், அழைத்தும் ஏதாவது காரணங்களை சொல்லி மறுத்துவிடுவாள்.
அங்கு ரேவதியின் குழந்தை பிறப்பு முடிந்து மூன்று மாதங்கள் வரை மட்டுமே இருந்தாள். ரேவதியை பாண்டிச்சேரிக்கு அழைத்து சென்ற பின் கையோடு காஞ்சிபுரம் கிளம்பிவிட்டாள் சந்நிதி...
“இன்னும் கொஞ்சம் கொண்டுவரட்டுமா அத்தான்?...” என்ற ராதாவிடம் மறுத்துவிட்டார்.
“சரி நான் கிளம்பறேன். இப்ப போனா தான் வேலையாகும்...” என்று எழுந்துகொள்ள,
“ஒருநிமிஷம் அத்தான்...” என உள்ளே ஓடிய ராதா பெரிய டிபன்கேரியரில் பார்கவிக்கு சாப்பாட்டை கட்டி தர அவரை முறைத்தார் முனீஸ்வரன்.
“அவங்க ஒத்தையில தானா சமைச்சு என்னத்தை சாப்பிட போறாங்க அத்தான். இது எல்லாமே நானும்...
தீண்டல் – 18
ரேவதியின் மாமியாரை மட்டும் எதிர்பார்த்திருக்க உடன் அம்பிகாவும் வந்ததும் முதலில் சந்தோஷித்தாலும் அப்போதுதான் முனீஸ்வரனின் வருகையும் ஞாபகத்திற்கு வந்தது.
ஐயோவென பரவிய உணர்வை அனைவருமே வெளிக்காட்டிக்கொள்ளாமல் அடக்கிகொண்டனர்.
சந்நிதிக்கு தான் இன்னமும் படபடப்பாக போனது. அம்பிகாவை பார்த்ததும் எங்கோ பார்த்த எண்ணம் தான். சட்டென புத்தியில் ஒட்டவில்லை அவரின் முகம். பார்த்து மாதங்களை கடந்துவிட்டதால்...
தீண்டல் – 17
“வசீ?...” என்று குகன் வரும் வரை வசீகரன் அந்த அறையிலேயே தான் அமர்ந்திருந்தான். சந்நிதி கிளம்பும் பொழுது கூட எழுந்து செல்லாமல் அங்கிருந்தே அவள் செல்வதை கவனித்துக்கொண்டு தான் இருந்தான்.
அவளிடம் பேசி முடித்ததும் தன் மனதினை சொல்லிவிட்ட நிம்மதியை விட இனி அவள் என்ன செய்துவைக்க போகிறாளோ என்கிற படபடப்பு...
தீண்டல் – 16
“வாட்?...” சந்நிதி அவன் சொல்ல வருவது என்னவென புரியாமல் பார்க்க,
“இதுவரை உனக்கும் எனக்குமா இருந்த இந்த கண்ணாமூச்சி விளையாட்டு இன்னையோட முடிஞ்சதுன்னு சொல்றேன்...” என்ற வசீகரன் சுற்றிலும் பார்வையை சுழலவிட்டவன் அவளின் கையை பற்றி கூட்டிக்கொண்டு தனதறைக்குள் சென்றான்.
“கையை விடுங்க, விட போறீங்களா இல்லையா? என் பர்மிஷன் இல்லாம என்னை...
“என்ன சித்தப்பா இங்க தனியா வந்து உட்கார்ந்துட்டீங்க?...” என மெதுவாக கேட்க,
“அதான் மாப்பிள்ளைன்ற பேர்ல ஒருத்தன கொண்டுவந்து என்னை தலைகுனிய வச்சுட்டீங்களே?...” என்று மற்றவர்களை குற்றம் சாட்ட,
“என்ன சித்தப்பா இது? உங்களுக்கு பிடிச்சதால தான இந்த சம்பந்தமே நடந்துச்சு...”
“அதான் நான் பண்ணின பெரிய தப்பு. போலீஸ்க்காரன் ரொம்ப வாய்சவடால் விடுவான்னு தெரிஞ்சும் புத்தி மழுங்கி...
தீண்டல் – 15
முனீஸ்வரன் எப்படி உள்ளே வந்தார்? அடுத்த நிகழ்வுகள் எப்படி நடந்தேறின? என்றெல்லாம் ஒன்றுமே புரியவில்லை. ஆனால் அனைத்தும் சிறப்பாகவே நடந்தது.
“அப்பா முகமே சரியில்லையே...” என சந்தியா புகழிடம் கேட்க,
“என்னைக்கு தான் அவர் முகம் சரியா இருந்திருக்கு?...” என்றதும் அவளின் முறைப்பில்,
“சரி விடு, ஏதாவது டென்ஷன்ல இருப்பார். வசீகரன் வந்துட்டு போன டென்ஷனா...
தீண்டல் – 14(2)
“இதெல்லாம் தப்பு, அப்பா பாவம்...” அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த சந்நிதி அவனிடம் பேச்சை ஆரம்பிக்க திரும்பி பார்த்தவன்,
“ஓஹ், நீ இங்க தான் இருக்கியா? கவனிக்கலை...” என்றான் சாதாரணம் போல.
“பொய் சொல்றீங்க, நீங்க என்னை பார்த்துட்டே வந்ததை நானும் பார்த்தேன். ஏமாத்தாதீங்க...” சந்நிதி இறைஞ்சுதலாய் பேச,
“உன்னுடன் சேர்த்து என்னையே நான் ஏமாற்றிகொண்டிருக்கிறேன் பெண்ணே” என...
தீண்டல் – 14(1)
ரவி வந்து வசீகரனை அவனின் இல்லத்தில் விட்டுவிட்டு மறுநாள் காலை வந்து அழைத்துக்கொள்வதாக சொல்லி நான்கு திட்டுக்களையும் வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டான்.
வசீகரன் வந்ததுமே அவனை உடை மாற்ற கூட விடாமல் உண்டுவிட்டு செல்லும்படி சொல்லி இரவு உணவை எடுத்துவைத்த அம்பிகா வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருக்க குகன் மகனை பார்ப்பதும் மனைவியை...
தீண்டல் – 13
நாகர்கோவில் சிறைச்சாலை
“ஸார் ஸார் இனிமே இந்த தப்பை பண்ணமாட்டேன் ஸார். சத்தியமா பண்ணமாட்டேன். விட்டுடுங்க. ஐயோ..... வலிக்குதே,,, ஸார் ஸார்..” என அவன் அலற அலற கொஞ்சமும் இரக்கமின்றி அவனை நீண்ட மர கம்பால் வெளுத்துக்கொண்டிருந்தான் விஷ்வேஷ்வரன்.
“வலி வலி உனக்கு மட்டும் தானாடா வலி? தேர்ட் ரேட் நாயே, செஞ்சுட்டு வந்தது...
வெள்ளிகிழமை முனீஸ்வரனின் வீடே பரபரப்பாய் இருக்க நீதிமாணிக்கம் ஹாலில் அமர்ந்திருந்தார். உடன் புவனேஷ்வரன். புகழ் இங்குமங்கும் நடந்துகொண்டும் தங்கைகளுக்கு என்னவேண்டும் என்று பார்த்துக்கொண்டும் இருக்க பெண்கள் வருபவர்களுக்கு பலகாரம் தயார்செய்ததை எடுத்துவைத்துக்கொண்டிருந்தனர்.
முனீஸ்வரன் இன்று வரை நீதிமாணிக்கத்திடம் சகஜமாய் பேசுவதில்லை. எதுவாவது சொல்லவேண்டும் என்றால் சொல்வது அதையும் புகழை வைத்து சொல்வது இப்படித்தான் சென்றுகொண்டிருந்தது.
வீட்டிற்கு வந்தால்...
தீண்டல் – 13 (2)
வெள்ளிகிழமை முனீஸ்வரனின் வீடே பரபரப்பாய் இருக்க நீதிமாணிக்கம் ஹாலில் அமர்ந்திருந்தார். உடன் புவனேஷ்வரன். புகழ் இங்குமங்கும் நடந்துகொண்டும் தங்கைகளுக்கு என்னவேண்டும் என்று பார்த்துக்கொண்டும் இருக்க பெண்கள் வருபவர்களுக்கு பலகாரம் தயார்செய்ததை எடுத்துவைத்துக்கொண்டிருந்தனர்.
முனீஸ்வரன் இன்று வரை நீதிமாணிக்கத்திடம் சகஜமாய் பேசுவதில்லை. எதுவாவது சொல்லவேண்டும் என்றால் சொல்வது அதையும் புகழை வைத்து சொல்வது...
தீண்டல் – 13 (1)
நாகர்கோவில் சிறைச்சாலை
“ஸார் ஸார் இனிமே இந்த தப்பை பண்ணமாட்டேன் ஸார். சத்தியமா பண்ணமாட்டேன். விட்டுடுங்க. ஐயோ..... வலிக்குதே,,, ஸார் ஸார்..” என அவன் அலற அலற கொஞ்சமும் இரக்கமின்றி அவனை நீண்ட மர கம்பால் வெளுத்துக்கொண்டிருந்தான் விஷ்வேஷ்வரன்.
“வலி வலி உனக்கு மட்டும் தானாடா வலி? தேர்ட் ரேட் நாயே,...
தீண்டல் – 12 (2)
“ஹ்ம்ம் அம்மாவை கண்டுபிடிச்சாச்சு...” என தலையாட்ட,
“இத்தனை மெனக்கெடனுமான்னு அப்பா கேட்கார் வசீ...” தன் வாட்டதிற்கான காரணத்தை சொல்ல,
“அப்பாவும் வந்தாரா?...”
“ஹ்ம்ம், உன்கிட்ட நம்ம ப்ரெஸ் பத்தி பேசனும்னு வந்தார். நீ போன்ல புகழ் கூட பேசிட்டு இருக்கறதை பார்த்து கேட்டுட்டு என்கிட்டே இதை சொல்லிட்டு போய்ட்டார்...”
“என்கிட்டயும் தான் இதை கேட்டார். நான்...
தீண்டல் – 12
ஆகிற்று ஒரு மாதம். நாட்கள் எப்படி போனதென்றே தெரியவில்லை. ஆனால் நடந்தவை அனைத்தும் நன்மையாகவே நடந்தது என்று தான் பார்கவி நினைத்துகொண்டார்.
இத்தனை வேதனைகளையும், வலியையும் கொடுத்தது, தன்னுடைய இழப்பு எல்லாம் இந்த சொந்தங்கள் இணைவதற்காகவே என்று அதையும் ஏற்றுகொண்டார் அவர்.
இந்தமட்டிலும் முனீஸ்வரன் மனம் மாறியதே என்ற ஆனந்த கண்ணீர் அவ்வப்போது...
தீண்டல் – 11
புகழ் நீதிமாணிக்கத்துடன் அமர்ந்திருந்தது எத்தனை நேரமென்றே தெரியவில்லை. ஆனால் அவரிடம் அவனோ, அவனிடம் அவரோ எதுவும் பேசவில்லை.
வேறு ஒருவராக இருந்தால் எப்படியோ போ என்று வெறுத்து சென்றுவிடலாம். ஆனால் இத்தனை பேசியும் சந்நிதியின் தவிப்பு நீதிமாணிக்கத்தை கட்டிப்போட்டது.
பெற்றவர்கள் இருந்து எங்களை அநாதையாக விட்டுவிட்டீர்களே என்கிற அந்த வார்த்தை அவரை அங்கிருந்து செல்லவிடவில்லை....
தீண்டல் – 10
இரவு வரை முனீஸ்வரனின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. பாதி இரவுக்கு மேல் நினைவு திரும்பி மீண்டும் மயக்கநிலைக்கு சென்றுவிட்டார். ஆபத்துக்கட்டத்தை தாண்டிவிட்டார் என மருத்துவர் வந்து சொல்லியதும் தான் நிம்மதியானது வசீகரனுக்கு.
பார்கவி இரவில் கண்விழித்து கேட்கவும் சந்தியாவை மெதுவாய் அழைத்துக்கொண்டு சென்று காண்பிக்க வைத்தான் வசீகரன்.
ஆனால் அவர்கள் முன்னிலையில் அவன்...
தீண்டல் – 8
சந்நிதி சென்றபின் அங்கேயே தான் நின்றான் வசீகரன். அவனின் மனதில் இனி அவளை எப்படி அணுகுவது என்கிற யோசனைகளை படமெடுக்க எதுவும் முகத்தில் பிரதிபலிக்கவில்லை.
“என்ன வசீ இப்படியே நிக்கிற?. என்ன சொன்னாங்க தங்கச்சி?...”
“நான் அவ பின்னலா வர கூடாதாம். இம்ப்ரெஸ் பண்ண ட்ரை பண்ண கூடாதாம்...”
“கூடாதுன்னா? என்ன பண்ண போற?...”...
“இப்ப சந்தோஷமா உங்களுக்கு? போங்க...” சந்நிதி பேச,
“உங்கப்பனுக்கு கொஞ்சமாவது அறிவிருந்தா இப்படி வயசுப்பொண்ண பரிகாரம் பண்ணவைக்கிறேன்னு ஊர் ஊரா கூட்டிட்டு சுத்துவாரா? இடியட்...” என்ற வசீகரனின் கத்தலில் முணுக்கென்று கண்ணீர் வந்துவிட்டது சந்தியாவின் விழிகளில் இருந்து.
“எங்கப்பாவை மரியாதை இல்லாம பேசாதீங்க. இது எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான். நீங்க மட்டும் பிரச்சனை பண்ணாம இருந்திருந்தா...