Wednesday, June 25, 2025

Nimmi Novels

Nimmi Novels
68 POSTS 0 COMMENTS

கொத்தும் கிளி – 28

0
அத்தியாயம் : 28 “இரண்டும் ஒரே டிசைன்தான். அன்னைக்கே ஒன்னா வாங்கிட்டுதான் உன்கிட்ட விளையாட்டு காட்டினாரா மாப்பிள்ள” மறுநாள் தாய் கேட்டபோதுதான் தன் கையில் இப்படி ஒரு வஸ்து இருப்பதையே உணர்ந்தாள் அம்மு எழிலரசி. ‘காலைலர்ந்து என்னவோ...

கொத்தும் கிளி – 27.2

0
“ஏன்டா மகனே! உன்னை நம்பினதுக்கு எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கப் பார்த்தியா?” கண்ணை கசக்கி கசக்கி வெங்காயம் வெட்டிக் கொண்டிருந்தான் கார்த்தி. “ஒழுங்கா என் தங்கச்சிக்கிட்ட சாப்டுட்டு இருந்தேன். தனியா சமைக்கிறேன்னு…” என்றதும்...

கொத்தும் கிளி – 27.1

0
அத்தியாயம் : 27 காலை எழுந்தது முதல் தன்மாமனின் முகத்தையுங்கூட பார்க்காமல் சுற்றி வந்தாள் எழிலரசி. ‘என்னை விட்டுப் போவேன் என்று எப்படி சொல்லலாம்?’ கோபத்துடனேச் சுற்றி வந்தவளால் ஒரு மணிநேரங்கூட தாக்குப் பிடிக்க...

கொத்தும் கிளி – 26.2

0
கதவைத் தட்டியும் சத்தமே இல்லாமல் போக, மூடியிருந்த கதவையும், அவனையும் மாறி மாறிப் பார்த்தவளுக்கு பதற்றம் கூடியது. கதவை ஓங்கித் தட்டி, “மாமா, கதவைத் திறங்க! வெளிப்பக்கம் பூட்டிக்கிச்சி” என்றாள். கதவைப் பூட்டியதே அவள் மாமன்தானே!...

கொத்தும் கிளி – 26

0
அத்தியாயம் : 26 “மிரு குட்டி, அன்னைக்கு கேன்டீன்ல வச்சி படிச்சிட்டு இருந்தியே, அந்த புக்கோட பெயர் என்ன?”  செழியன் பணியின் நிமித்தம் காலையிலயே கிளம்பியிருக்க,  கார்த்தியும் ஊரிலிருந்து வந்த அசதியில் உறங்கிக் கொண்டிருந்தான். மனைவியுடனும்,...

கொத்தும் கிளி – 25

0
அத்தியாயம்: 25 அவர்களுக்குள் பெரிதாய் எந்த மாற்றமும் இன்றி நாட்கள் கடந்தன. ஆனால் வழக்கின் அடி ஆழம்வரை தோண்ட ஆரம்பித்திருந்தான் வெற்றி. “வெற்றி சார பார்க்கணும்!” என்றது ஒரு கரகரத்தக் குரல். வாரணம் ஆயிரம் படத்தில் வரும் வயதான...

கொத்தும் கிளி – 24

0
அத்தியாயம்: 24 மறுநாள் விடியலில் கண்விழித்த அம்மு, எழுந்தவள் வெற்றியின் காலில் தான் தலைவைத்திருப்பதுக் கண்டு அதிர, “ஷ்ஷப்பா…காலே மரத்துப்போச்சிடி எரும!” என்றவன் காலைப்பிடித்துக் கொண்டு எழுந்தான். இது எப்படி? என்றவள் யோசித்துத் தெளியும்முன், “குண்டம்மா...

கொத்தும் கிளி 23.2

0
அவள் கெஞ்சியும் ஆறவில்லை அவன் மனம். சிறுவயது முதல் புரிந்த தவத்தை கொச்சைப் படுத்துவாளா? அவள் மீதான என் காதல் எதன் மீதுன்னு நான் புரிய வைக்க வேணாம்! “நீ தான சொன்ன எடுத்துக்கன்னு”...

கொத்தும் கிளி – 23.1

0
அத்தியாயம்: 23 கட்டிலில் சில கோப்புகளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் வெற்றி. அம்முவின் கோபத்தை அறிந்து, அவளாக புரிந்தும் கொள்ளும்போது புரிந்துகொள்ளட்டும் என தன் வேலைகளில் மூழ்கி இருக்க, கதவைத் திறக்கும் ஒலியில் நிமிர்ந்தவனின் பார்வை...

கொத்தும் கிளி – 22

0
அத்தியாயம்: 22 ஒரு வழியாகத் திருமணம் நல்லபடியாக முடிந்திருந்தது. அதில் முதல் ஆளாக நிம்மதியான பெருமூச்சை இழுத்து விட்டவள் அம்முதான். தாலி கட்டும் கடைசிநொடிவரை உள்ளுக்குள் அலை அலையாய் பயம் ஊடுருவிக் கொண்டுதான் இருந்தது. தந்தையும், கணவனும்...

கொத்தும் கிளி – 21

0
அத்தியாயம்: 21 இனி தனிமையை பழகிக்கணும் என்று விரக்தியாய் கார்த்தி சொல்லவும் வெற்றியின்‌ மனம் கனத்தது. கார்த்தியும் சொல்லவேண்டும் என்று நினைக்கவில்லை. எண்ணங்களின் அலைகளில் வார்த்தைகள் தானாய் கோர்த்துக் கொண்டன. உண்மைதானே! இதே வருத்தம் அவனது எழிலரசிக்கும்...

கொத்தும் கிளி – 20

0
அத்தியாயம் : 20 அம்முவும், திவ்யபாரதியும் கடையைவிட்டு இறங்கி வந்தபோது செழியன் வெற்றியை காய்ந்து கொண்டிருந்தான். ‘நல்லா வாங்கட்டும். இவன் மட்டும் நடுவுல போகாம, என்னையே சைட் அடிச்சிட்டு இருந்திருந்தா அந்த விருமாண்டி சந்தானம் என்கிட்ட...

கொத்தும் கிளி – 19

0
அத்தியாயம் : 19 அம்முவும், திவ்யபாரதியும் கடைக்குச் சென்று அரைமணி நேரத்திற்கெல்லாம், வெற்றியும் செழியனும் அந்த பிரபல ஜவுளி கடைக்குள் நுழைந்தனர். புடவையை விரித்துப் பார்த்திருந்த திவ்யபாரதி வெற்றியைக் கண்டதும், “வாங்க தம்பி” என்றழைக்க, பதிலாக...

கொத்தும் கிளி – 18

0
அத்தியாயம் : 18 “வாவ்… வாவ்..வாவ்!  வாட் எ ப்ரோப்போஸல்” அடக்கமாட்டாமல் சிரித்தான் வெற்றி. அவன் எதிரே கடுப்புடன் நின்றிருந்தாள் எழிலரசி. “பாரேன்! இத்துனூண்டு வயசுல பத்திரம் காட்டினதுல இருந்து இங்க சுமந்துட்டு இருக்கேன். எனக்கு கூட இப்படி...

கொத்தும் கிளி – 17

0
அத்தியாயம் : 17 விலங்குகளுக்கான மருத்துவமனையில் துருவனை கையில் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் அம்மு. மருத்துவரை சந்திக்க நீண்டதொரு வரிசை அமர்ந்திருந்தது. அவளுடையது பத்தாவது டோக்கன். “உன்னைத் தனியா சந்திக்க எவ்வளவு பாடு படுறது?” வெகு அருகில்...

கொத்தும் கிளி – 16

0
அத்தியாயம் : 16 வெற்றிதான்‌ மறுபக்கம் அழைத்துக் கொண்டிருந்தான். ‘அதுக்குள்ள எந்த புல்லுருவி போட்டுக்குடுத்துச்சின்னு தெரியலையே’ என்று எண்ணியபடி சுற்றிலும் மாணவர்களை  பார்வையால் வலம் வந்தவள் அலைபேசியை எடுக்கவில்லை. எங்கே ஏடாகூடமாக பேசி, கோபித்துக்கொண்டு திருமணத்தை நிறுத்தி...

கொத்தும் கிளி -15

0
அத்தியாயம் : 15 கன்னங்கள் நனைந்துகொண்டே இருந்தது. துடைத்துவிட்டு ஒத்தைக் கையால் ஸ்டீரியங்கைப் பிடித்தாள் எழிலரசி. ஒருமனம் விளையாடுகிறான் என்று வெற்றிக்காக வாதாடிக் கொண்டிருந்தது. விளையாட்டென்றாலும் ஒரு எல்லை இல்லையா என்ன?  அவனைப்பற்றி உனக்குத் தெரியாதா? சிறுவயதில்...

கொத்தும் கிளி – 14

0
அத்தியாயம் : 14 அறைக்குத் திரும்பிய எழிலரசி, உடல் தூக்கி தூக்கிப்போட, அனத்திக் கொண்டு படுத்திருந்த தங்கையைக் கண்டு அதிர்ந்துதான் போனாள்.  ‘அம்மாட்ட படுக்கப் போறேன்னுட்டு இவ இங்க என்ன பண்றா?’யோசனையுடன் உடலைத் தொட்டுப் பார்க்க...

கொத்தும் கிளி – 13.2

0
“ட்ரஸ் மாத்திட்டு வாடி! சாப்பிடலாம்” தன்னவன் நினைவுகளுடன் ஜீப்பிலிருந்து இறங்கி வீட்டுக்குள் நுழைந்தவளை சாப்பிட அழைத்தாள் தாய் திவ்யபாரதி. திரும்பியும் பாராமல், “எனக்குப் பசி இல்லமா” என்று அறையில் நுழைந்து கொண்டாள். மகளின் முகம் எதையோ...

கொத்தும் கிளி – 13.1

0
அத்தியாயம் : 13 அவளது வெற்றியா அவளிடம் கோபப்பட்டது! எழிலரசியால் நம்பமுடியவில்லை. மெல்லியப் புன்னகை இழையோட கண்ணெடுக்காமல் அவன் தன்னை இரசிக்கும் கணங்களை அவனுடன் சேர்த்து அவளும் இரசித்திருக்கிறாள்.  அவனின் அந்தச் சிரிக்கும் கண்கள், அவன் பேசாத...
error: Content is protected !!