Advertisement

வேடந்தாங்கல்
(ஒருக்கூட்டுப் பறவைகள்)
நெடும்தொடர்
சிறகு 3

போர்ட் பிளேயர் சென்று சேர்ந்த வசந்த்-ம் அவன் நண்பர்களும் சொகுசு விடுதியை அடைந்து தங்களை தயார் செய்து கொண்ட பின்னர் தாங்கள் சந்திக்க வந்த நபரை காண புறப்பட்டனர்.

செல்லும் வழியில் எழிலரசன் கடந்த இருபத்துநான்கு மணி நேரத்தில் சேகரித்த விபரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்தான்.

வசந்த் நாம பார்க்கப் போறவர் கிட்டத்தட்ட நாற்பது வருசத்துக்கு முன்னாடி அந்தமான் வந்தவர். சின்னதா ஒரு டிபன் கடை ஆரம்பிச்சு இன்னைக்கு இந்தியாவில் 20 ஹோட்டல்களுக்கு அதிபதியா மாறி இருக்கிறவர். இங்க இருக்கற எல்லா தரப்பட்ட மக்களுக்கும் நல்லா அறிமுகமானவர். 3 தலைமுறை பார்த்தவர். அவரோட குடும்ப உறுப்பினர்கள் எல்லாருமே பெரிய பதவில இருக்கறாங்க என்று கூறினான்.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த மேகி இதயம் தனக்குள்ளே அந்த மனிதர் குறித்து ஏராளமான எதிர்பார்ப்பையும், அவரைக்குறித்து மேலும் அறியும் ஆர்வத்திலும் துடித்தது.

முமைனா மனம் அந்த மனிதரையும் வசந்தின் மனதில் உருவாக்கிய கதாபாத்திரத்தையும் குறித்து ஒப்பீடு செய்து கொண்டிருந்தது.

கனியோ… எப்படி பட்ட வகையில் அந்த மனிதரின் அனுபவங்களை தனது கேமிராவில் படம்பிடிக்கலாம் என்று திட்டமிட்டு கொண்டிருந்தான். ஆனால் வசந்த் மனமோ எதை குறித்தும் பதட்டம் அடையாமலும், குழப்பிக் கொள்ளாமலும் தெளிந்த நீரோடையாக இருந்தது.

அவர்கள் சென்ற கார் மவுலானா ஆசாத் சாலையில் திரும்பி சிலநிமிட பயணத்தில் ஒரு சரிவான ஆனால் விசாலமான சாலையில் பயணிக்கத் தொடங்க….. அதன் பின்னணியில் போர்ட் பிளேயர் துறைமுகமும், அதன் பின்புலத்தில் அற்புதமான நீலக்கடலும் நீண்டு அற்புதமாக காட்சி தந்தன.

“வேடந்தாங்கல்” என்று பெயரிடப்பட்ட மிகப்பெரிய கேட்டின் முன் கார் நிற்க, வெளியில் நின்றுகொண்டிருந்த செக்கியூரிட்டி காரின் அருகில் வந்து குனிந்து விபரம் கேட்டான். எழிலரசன் தங்களின் விபரம் தெரிவிக்க தலை அசைத்து அதை ஆமோதித்தவன் உள்ளே சென்றதும் காரை பார்க் செய்யும் இடம் குறித்து விளக்கிய பின் கேட்டை திறந்து காரை உள்ளே அனுமதித்தான்…..

கேட்டிற்க்குள் கார் சென்றவுடனேயே கண்களில் விரிந்த அந்த காட்சிகளை, கனி தனது கேமிராவில் பதிவுசெய்ய தொடங்கினான்….

கார் செவ்வனே அமைக்கப்பட்ட ஒடுத்தளத்தில் பயணிக்க இருபுறமும் பசுமையாக வளர்ந்து அளவாக வெட்டி பஞ்சனை போல அமைந்திருந்த புல்வெளியும் அதனை ஒட்டி வளர்க்கப்பட்டிருந்த பூச்செடிகளும், பூத்து குலுங்கும் ரோஜாக்களும், அவற்றின் நடுவே போடப்பட்டு இருந்த சலவைக்கல் இருக்கைகளும் காட்சியில் தெரிய, சில நிமிட நேரத்தில் மிகப்பெரிய இரண்டு தள மாளிகை கண்ணில் விரிந்தது…..

வாவ்….. என்று முமைனாவும் மேகியும் ஒரே நேரத்தில் வியந்து வாய்பிளக்க… கார் டிரைவர் காரை குறிப்பிட்ட இடத்தில் பார்க் செய்து நிறுத்தினார்.
காரில் இருந்து அனைவரும் இறங்கி அந்த மாளிகையையும் அதன் எழில் தோற்றத்தையும் கண்டு வியந்து வண்ணம் நிற்க, கனி தன் கேமிரா வழியே காட்சிகளை படமாக்கியப்படி மற்ற நால்வரையும் கவர் செய்தபோது…. வாங்க வாங்க வெல் கம் டூ அந்தமான்…. என்ற ஒரு பெண்ணின் குரல் வந்த திசை நோக்கி அனைவரும் திரும்ப அவர்களை நோக்கி 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி கைகூப்பியபடி நடந்து வந்து கொண்டிருந்தார்…..

வசந்த்-ம் மற்ற அனைவரும் அந்த பெண்மணிக்கு வணக்கம் செய்தனர்.. வாங்க எல்லோரும் எப்படி இருக்கீங்க? எப்போ போர்ட் பிளேயர் வந்தீங்க… பிரயாணம் எல்லாம் நல்லா இருந்ததா என்று அடுக்கடுக்காக அந்த பெண்மணி நலம் விசாரிக்க ஐவரும் பதில் கூற திக்கு முக்காடினர்….

மேகி ஒருவாறு சமளித்துக்கொண்டு பதில் கூறினாள்… தங்களின் பிரயாணம் குறித்தும், தாங்கள் வந்த நோக்கம் குறித்தும் விளக்கிய மேகி… அனைவரையும் அவரிடம் அறிமுகம் செய்து வைத்தாள். அந்த பெண்ணிடம் நெருங்கிய சிநேகம் பாராட்டி உரிமையாக “ஆண்டி நீங்கள் ….” என்று இழுத்து நிறுத்தினாள்…

ஓ…. சாரி மேகி… என்னை பத்தி சொல்ல மறந்துட்டேன்… நான் ரூபா… இந்த ஒட்டுமொத்த வீட்டையும் ஹோட்டல் நிர்வாகத்தையும் இப்போதைக்கு நான் தான் பார்த்துக் கொள்கின்றேன். ஜெகந்நாதன் என்னுடைய தாத்தா என்று கூறினாள்…

தாத்தா கொஞ்சம் உடல்நலம் இல்லாமல் ஆன பிறகு நான் தான் இந்த பொறுப்புகள் எல்லாத்தையும் பார்த்துக்கறேன்… அப்சல் எனக்கு உங்களுடைய வரவையும் உங்களுடைய முயற்சிக்கு உதவவும் சொன்னார் என்று கூறினார்…

ஆண்டி ஒரு சின்ன டவுட்… என்று கூறிய மேகி… நீங்க இவ்வளவு அழகா எப்படி தமிழ் பேசறீங்க என்று ஆச்சரியமாக கேட்டாள்….
அதற்கு வாய்விட்டு சிரித்த ரூத்… மேகி எங்களுடைய பூர்வீகம் கன்னியாகுமரி மாவட்டத்தில இருக்கற வெட்டூர்ணிமடம் தான். இங்க வந்து 30 வருஷம் ஆகுது. பிறந்தது வளர்ந்தது எல்லாம் அங்கதான் என்று கூறிய ரூபா குறித்து சில வார்த்தைகள்…..

5.7 அங்குல உயரத்தில், நீண்ட சுருள் கூந்தலுடன், முட்டை வடிவ முகத்தில், நீண்ட நாசியும், சிவந்த இதழும், இளம்பெண்களுக்கு சவால்விடும் அளவிற்கு சிறிதும் குறையாத உடல் அமைப்பும் உடையவள். அவளின் வயது தான் அதிகமாக உள்ளதே ஒழிய அவளின் தோற்றத்திற்கும் சுறுசுறுப்பிற்கும் இன்னும் வயது இருபதில்தான் உள்ளது….

இதை முமைனா நேரடியாகவே கேட்டு விட்டாள்….

ஆண்டி உங்கள் வயதிருக்கும் உங்கள் தோற்றத்திற்கும் சம்மந்தமே இல்லை… நீங்கள் ரொம்ப அழகாக இருக்கின்றீர்கள்….. என்று முமைனா சொல்ல…. சிரித்துக்கொண்டே ரூபா கூறிய வார்த்தைகள் அவர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

என்னை பார்த்ததற்கே இப்படி நீ கூறுகின்றாயே…. என் தாத்தாவை பார்த்தால் அவரை என்னவென்று கூறுவாய் முமைனா…. ??!!!!என்ற ரூபா…. அனைவரையும் அந்த பெரிய மாளிகைக்குள் வரவேற்று அழைத்துச் சென்றாள்…..

இளமையோடு தோன்றும் இந்த மாளிகைக்கு சொந்தக்காரர்கள்…. இவ்வளவு வசதியோடு வாழும் இந்த குடும்பத்து உறுப்பினர்கள்…. வசந்தின் கதாபாத்திரத்திற்கும் இவர்களுக்குமான சம்மந்தம்…..
அடுத்த படைப்பில்…..

சிறகுகள் இன்னும் விரியும்

Advertisement