“ஏன்டா யாழி வெளியே நிற்கிற…?” என்றவர் வேகமாக கதவை தட்ட, மனுஷ் திறக்கவே இல்லை.
தொடர்ந்து தட்டிக் கொண்டே இருக்க அதில் எரிச்சல் அடைந்தவன்,” வாட் அகெய்ன் ?”என்று திறந்தான்.
“மோனே எந்தா இது? அவள் எத்தர நேரம் இங்கே நிற்பாள் எதுக்கு நிற்கிறா?” என்று குடைய
அவனோ,” ஸ்ஸ்ஸ் நத்திங் அம்மே!, ஞான் வெள்ளம் எடுக்கான் போகுக்காரியன்னு . பக்ஷே மறந்து போயி லாக் செஞ்ஞு அம்மே.(தண்ணி எடுத்து வரப் போனா, நான் தான் மறந்துட்டு லாக் பண்ணிட்டேன்) நீங்க போங்க மா “என்றவன்
“நீ வா !”என்று தன்னோடு இழுத்து வந்து அமர வைத்தான்.
“மோனே! அதிராவில எழணும்.ரெடியா இருங்க ராவிலே (காலையில் )நிங்ஙளுடைய விவாஹம்” என்று விட்டு போய் விட்டார் பத்மாவதி .
‘ப்ப்ச், இவளை அதற்குள் இங்கிருந்து அனுப்பி விட வேண்டும் ‘என்று எண்ணியவன் கதவை சாத்தி விட்டு அவளையேப் பார்த்தான்.
‘எப்படி இங்கிருந்து விரட்டுவது?’ என யோசித்திருக்க, மெட்டில்டா அழைத்தாள்.
“இந்த பிசாசு வேற !”என்று முணுமுணுத்துக் கொண்டவன் அழைப்பை ஏற்றான். இல்லை என்றால் பைத்தியம் மீடியாவில் எதையாவது உளறி வைக்கும் தேவை இல்லாத பிரச்சினை அது என்று யோசித்து தான் ஏற்றான்.
“ஹாய் டியர்…கல்யாணம் ஆகிடுச்சாமே ஸோ சேட் , யாரந்த அதிர்ஷ்டக்கட்டை . நிஜமாகவே ஆகிடுச்சா இல்லை எனக்கு பயந்து உன் அண்ணன் எதுவும் பண்ணானா…?” என்றாள் எள்ளலாக.
“சோ சேட் மெட்டில்டா, உன் ஹப்பி கூட ஹனிமூன் போயும் என்னை உன்னால் மறக்க முடியலை போல, அதான் அடிக்கடி எனக்கு கூப்பிடுற…யூ க்நோ வாட் நீ இப்படி பண்ணினா இவனும் விட்டுட்டு ஓடிடப் போறான்… அன்ட் உனக்கு பயந்து நாங்க எதுவும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை ,அது போல என் மனைவியை உனக்கு அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை.” என்று இணைப்பைத் துண்டித்தான்.
அதற்குள் ,”அம்மா !”என்று சத்தம் கேட்டது. பதறியவன் கைபேசியைப் போட்டு விட்டு பாத்ரூம் உள்ளே ஓட, அங்கே யாழினி மயங்கி கிடந்தாள் அரைகுறை ஆடையுடன்.
‘ஹீட்டரை ஈரக்கையுடன் தொட்டிருப்பாள்’என்று உணர்ந்தவன் வேகமாக அவளைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தான்.
மூச்சே இல்லை அவளுக்கு. மயங்கி கிடந்தவளுக்கு முதல் உதவி செய்ய முற்பட தயக்கம் வந்து ஒட்டி கொண்டது.
‘மூச்சு கொடுத்தால் எழுந்து விடுவாள், ஆனால் எப்படி?’ என்று நினைத்தவன்,’ ஆபத்திற்கு பாவமில்லை’என சமாதானம் சொல்லிக் கொண்டு அவளின் இதழில் தன் உதட்டைப் பொருத்தினான்.
மூச்சு வந்து விட எழுந்தமர்ந்தவள், சப்பென்று வைத்தாள் அவன் கன்னத்தில்.
(ரைட்டு இந்தா ஆரம்பிச்சுட்டாங்க இல்ல இனி களை கட்டும் ஆட்டம்)
**********
ரிஃபாஷா இன்னும் ஆலப்புழாவில் தான் இருந்தாள். சர்ஷிமன் கழுகாய் வட்டமிட்டான் அவளை.
புதுப்படத்திற்கு ஒரு இயக்குநர் கதை சொல்ல வந்திருப்பதாக ரிஃபாஷாவின் அம்மாவிடம் கூறி அவளையும் அழைத்து வரும்படி கூறினான்.
“இந்த தடவை அந்த கிளி எனக்கு தான்” என்று பகல்கனவு காணத் துவங்க, அவளோ வர மறுத்துக் கொண்டிருந்தாள்.
அவளது அன்னையோ,”நீ வந்து தான் ஆகற ,அடுத்த படமும் உனக்கு அந்த தெலுங்கு நடிகன் கூட தான். அப்ப தான் அடுத்த லெவலுக்கு நீ போக முடியும் “என்றார் கண்கள் மின்ன.
“போதும்மா, இதோட நிறுத்திக்கங்க வேணுங்கிற அளவு படம் நடிச்சு சம்பாதிச்சு கொடுத்துட்டேன், இதுக்கு மேலாவது என் வாழ்க்கையை வாழ விடுங்க” என்றாள் எரிச்சலாக
“வாழு உன்னை யார் வாழ வேண்டாம் னு சொன்னது? ஆனா அந்த தெலுங்கு நடிகன் உன் மேல ஆசை வச்சிருக்கான் அவனை வளைச்சு போட்டு அவனோட வாழ்க்கையை தொடங்கு” என்றார் அசட்டையாக
“அவன் வல்லளவு தெரியாம பேசாதீங்க…வர்ற ஒரு பொண்ணு விடாம கட்டிலுக்கு இழுத்துட்டு போயிருக்கான், அவன் வலையில் சிக்காதது நான் மட்டும் தான் எனக்கு இது பிடிக்கலை விட்டுடுங்க”,’ஐ லவ் மனுஷ்’ என்று தன் தாய்க்கு கேட்காதவாறு முனகினாள்.
“சரி விடுடி இந்த படத்தை மட்டும் ஓகே பண்ணு, அதுக்கப்புறம் அவன் வழிக்கே போக வேணாம் “என்றார் நைச்சியமாக.
“ப்ம்ச் உன்னோடு தொல்லைமா… ஏற்கனவே உடம்பெல்லாம் வலிக்குது… ஏன் தான் இப்படி பண்றியோ ?!”என சலித்தபடி சர்ஷிமனை சந்திக்க ஒப்புக் கொண்டாள்.
அங்கே சர்ஷிமன் தனது அறையை அலங்கரிக்கும் படி கூறியவன் ரிஃபாஷாவின் வரவிற்காக காத்திருந்தான்.
சர்ஷிமன் ரிஃபாஷாவின் வரவிற்காக காத்திருந்தான். அவனது எதிர்பார்ப்பை வீணாக்காமல் வந்து சேர்ந்தாள் அவள்.
சர்ஷிமனுக்கு உற்சாகம் மடை திறந்த வெள்ளமாய் பொங்கியது.
“ஹேய் பேபி! ஐ கான்ட் பிலிவ் இட் “என்றதும்,”டைரக்டர் எங்கே டிஸ்கஸ் ஸ்டார்ட் பண்ணியாச்சா?” என்றாள் நேரடியாக.
“ஓ மை காட் !வந்ததும் ஏன் அவசரம் பேபி…கம் இன்சைட்” என்றவன் அவளது தோளில் கை போடப் போக, அவள் பார்த்த பார்வையில் தன்னால் பின் சென்றான்.
“இங்க உட்காரலாமா?” தோட்டத்து ஊஞ்சலை கை காட்டினாள் ரிஃபாஷா.
“யா ஸ்யூர் பேபி !”என்றவன் மகிழ்வாய் முன்னே செல்ல, பின் தொடர்ந்து சென்றாள் ரிஃபா.
“ம்ம்ம் நான் நேரா விஷயத்துக்கு வரேன் சர்ஷிமன். எனக்கு நல்லாப் புரியுது நீங்க எதுக்காக என் பின்னால் வர்றீங்கனு… இதுவரை நீங்க பார்த்து பழகின ஆக்ட்ரஸ் உங்க மேல மயங்கியோ இல்ல செலிபிரட்டி னு நினைச்சோ அவங்களை உங்களுக்கு கொடுத்து இருப்பாங்க…”எனும் போதே மனுஷின் அழைப்பு சர்ஷிமனுக்கு வந்தது.
“ஒன் மினிட் பேப்ஸ் !”என்றவன் தள்ளி நின்று பேசினான்.
“ஹாய் ஜி சொல்லுங்க… ?”
“வெல் சர்ஷிமன், நான் உங்க டீலிங்கை கேன்சல் பண்ணலாம்’னு இருக்கேன். நீங்க என்ன சொல்றீங்க?” என்று நேரடியாக கேட்க அதிர்ந்து போனான் சர்ஷிமன்.
“சார் வாட் ஹேப்பன்ட்…?” என்று பெரிதாய் அதிர
“டோன்ட் டச் ரிஃபாஷா, அன்டர்ஸ்டாண்ட் அவ மேல உன் மூச்சுக் காத்து கூட படக் கூடாது பட்டுது’னா ஐ வில் கில் யூ… “என்று மிரட்ட
‘இவனுக்கு எப்படி தெரியும்?’ என்று யோசித்தான் சர்ஷிமன்.
“எனக்கெப்படி தெரியும்’னு திங்க் பண்றியா டோன்ட் டூ தட்,ஷீ இஸ் மை ஃப்லிம் ஹீரோயின் ரைட் ,ஒரு நடிகையையாவது விட்டு வைடா, அவ்ளோ ஆசை இருந்தா காசு குடுத்துப் போ இவளைத் தொடாதே…”என்று எச்சரித்தான்.
“நோ சார் ஜஸ்ட் ஒரு ஸ்டோரி கேட்க வரச் சொன்னேன்.யாரோ உங்களுக்கு தப்பா இன்ஃபார்ம் பண்ணி இருக்காங்க “என்றவனை கைபேசி வழியாக முறைத்தான்.
“நோ ப்ராப்ளம் ,ஹீரோயினா அக்ரிமென்ட் போட்டுட்டு அவளை இப்போ அனுப்பி விடு “என்று சொல்ல சரி என்று சம்மதித்தான் சர்ஷிமன் .
சர்ஷிமனுக்கு வடை போச்சே மொமெண்ட் .
ரிஃபாஷா அவன் முகபாவனைகளைக் கண்டு நிம்மதியடைந்தாள்.
“ரிஃபா ப்ரொடியூசர் நாட் கமிங் டுடே ஸோ ஐ வில் கால் யூ சம் அனதர் டே “என்றான் அமைதியாக
“தட்ஸ் ஓகே ஷிமன், ஐ வுட் லீவ் தாங்க் யூ ஃபார் இன்வைட்டிங் மீ” என்று விடை பெற்றுக் கொண்டாள் ரிஃபாஷா.
வெளியே வந்ததும் மனுஷிற்கு அழைத்தாள்.
“தாங்க் யூ மனு நீங்க இல்லைனா நினைச்சே பார்க்க முடியலை”என்றாள் மனதார.
“யூ இடியட் !,அவன் இந்த நினைவோட சுத்தி இருக்கான் அப்படின்னா இதுக்கு முன்னாடி உன் கிட்ட வேறொரு கோணத்தில் பழகி இருப்பான் பேசி இருப்பான் தானே அப்போவே சொல்ல மாட்டியா?”என்று திட்ட
“சாரி மனு மம்மி தான்..”என்று இழுக்க
“ஸீ குழலி!, ரிஃபாஷாங்கிறது நீ சினிமாவுக்கு போட்டு இருக்க வேஷம் ,ஆனா உள்ள இருக்கிறது நெடுங்குழலி மனசிலாயோ… “
“நெனவு இருக்கு மனுஷ் சார் !”என்று நெடுங்குழலியாக பேசினாள்.
“சரி சரி டேக் ரெஸ்ட்… பீ கேர்ஃபுல் ,டேக் கேர் “என்று இணைப்பைத் துண்டிக்க செல்ல ரிஃபா தடுத்தாள்.
“மனு ப்ளீஸ் கன்சிடர் மீ அட் யுவர் லைஃப் பார்ட்னர்”என்க
“ஸ்டுப்பிட் கட் த ஃபோன், டே டிரிம் ல இருக்காத… என்ட விவாஹம். கழிஞ்சு,ஞான் சம்சாரியாக்கும் “என்று கடுப்பாக மொழிந்தான்.
ஓரமாக மூலையில் அமர்ந்திருந்த அகரயாழினிக்கு முகம் வியர்த்தது. இருக்கிற கடுப்பை நம் மீது காட்டுவானோ என்ற பயம் தான்
அவளைக் கண்டு கொள்ளாமல் மல்லாந்து படுத்து விட்டான்.
“நீங்க மலையாளியா…?”என்று திக்கி திணறி கேட்டாள்.
‘இந்த கேள்வி அவசியமா?’ என்பது போல திரும்பி பார்த்தான்.
“இல்ல… பேச்சுல பாதி மலையாளமும் பாதி தமிழும் வருதே,அதான் கேட்டேன்.” என்று இழுத்தாள்.
“தெரிஞ்சதும் என்ன செய்வ …இப்போ சப்புனு ஒண்ணு வச்சியே அது போல அடிப்பியோ…?” என்று கேட்டு வைத்தான் எள்ளலாக
‘போச்சு வாயைக் கொடுத்து வாங்கிக்க போறேன் அச்சோ இப்படி பார்த்து வைக்கிறானே… வொஃய்ப்’னு சொன்னதால அட்வான்டேஜ் எடுத்துப்பானோ…?’ பயந்தாள் யாழி.
அவளது கன்னத்தை இறுக்கி பிடித்தவன்,” இந்த மூஞ்சி கூட ஒரு நாள் நைட் ஃபுல்லா இருந்திருக்கேன்…அப்போ பண்ணாததா இப்ப பண்ண போறேன்…? நீ நடிக்கிறனு நல்லா தெரியுது பட் காரணம் தான் தெரியவில்லை… தெரிஞ்சுது மகளே… இப்படியே அந்த கப்போர்ட்ல பாடியை வச்சு சிமெண்ட் போட்டு பூசிடுவேன் ஒழுங்கா இங்கிருந்து ஓடிப் போயிடு,காலையில் கண் விழிக்கும் போது நீ இருந்த அப்புறம் கப்போர்ட் தான், சிமெண்ட் தான், பார்த்துக்க” என்று மிரட்டி விட்டு போய் உறங்கி விட்டான்.
இருவரும் ஒரு அறையில் உறக்கம் ஆனால் வெவ்வேறான மனநிலையுடன் உறங்கியிருந்தனர்.
***********
நள்ளிரவு பதினொன்றை தொட்டு இருந்தது. மகிழன் சக்ரவர்த்தி தனது மடிக்கணினியில் எதையோ பார்த்து கொண்டிருக்க, அவனது கைபேசி மெதுவாக அழைத்தது.
அழைப்பை துண்டித்தவன் குறுஞ்செய்தி செயலியை திறந்து குறுஞ்செய்தி மூலம் அந்த நபருக்கு பேச ஆரம்பித்து விட்டான்.
கைபேசியின் வெளிச்சத்தில் கண் விழித்த அவனது மனைவி எரிச்சலாக எழுந்து வெளியே சென்று விட்டாள்.
மைத்ராவின் மனமோ உழன்று தவித்தது.
‘கண்டவளுடன் காலம் நேரம் தெரியாமல் பேசுவதற்கு எதற்கு பொண்டாட்டி?, நான்
என்ன குறை வைத்தேன் கட்டிலிலா இல்லை சமையல்கட்டிலா எல்லாவற்றையும் சிறப்பானதாக தானே கொடுத்தேன் இன்னும் என்ன செய்ய வேண்டும் இவனுக்கு? என்ன செய்தால் நான் அவனுக்கு மனைவியாகத் தெரிவேன்’ என்றெல்லாம் மனம் பொருமியது அவளுக்கு.