மனுஷ் விரைந்து கிளம்பி இருந்தான் சென்னைக்கு.  

மயக்கும் மாயவிழியாள் மன்னவனின் வரவிற்காக காத்திருந்தாள் பயத்தோடு

‘வந்தால் அலற விடுவானா…?  இல்லை பதற விடுவானா எது செய்தாலும் நமக்கு அம்னிஷியா அம்னிஷியா தான்.அவன் மூஞ்சியை கனவுல கூட பார்த்ததா நினைப்பு வரக் கூடாது அந்த அளவுக்கு இருக்கணும் ஆக்டிங்’ தனக்குத் தானே பேசிக் கொண்டாள். 

மனுஷ் அதிரடியாக உள்ளே நுழைந்தான். யாழிக்கு பயத்தில் தொண்டை கவ்விக் கொண்டது.  

‘நீ இன்னும் சாகலையா?’ என்றது அவன் பார்வை. 

‘படுபாவி பயலே ஏன் டா உனக்கு இந்த ஆசை?’ என்றது பதிலுக்கு அவள் பார்வை. 

விழிகள் இவ்வாறு பேசிக் கொள்ள, உதடுகளோ வேறு பேசியது.  மேல்பூச்சு வார்த்தைகள் இந்த இதழ்களுக்கு தான் சொந்தம் போலும்.  வெகு சில நேரங்களில் மட்டுமே மனதார உரைக்கின்றன. இதோ இவர்கள் மட்டும் என்ன விதி விலக்கா… என்ன செய்ய காத்திருக்கிறானோ காதல் இயக்குநன். 

“ஓஓஓ மை ஸ்வீட் ஹார்ட்!, ஏன் இப்படி பயந்து நடுங்குற…  உன் தீரனை மறந்துட்டியா… சோ சேட் ஹனி… “அவளைத் தொடப் போக பதறி விலகினாள் யாழி. 

‘அப்படி போடு… மீன்குட்டி மாதிரி துள்ளி விலகுறா இவ எனிக்கு பார்யாளாம் … நோக்காம் பெண்குட்டி, இந்த செகண்ட் வெளியே அனுப்புறேன் உன்னை’ என்று சபதமிட்டு கொண்டான் மனதில். 

“கொஞ்சம் என் கூட வெளியே வர்றியா ஹனி…?!” குழைவான குரலில் கேட்க,’ நம்பாத யாழி ஃப்ராடு பண்றான் ‘என மனதோடு பேசிக் கொண்டாள். 

“ம்ம்ம் சரி!” பச்சைப்பிள்ளை கணக்காய் தலையாட்டினாள். 

அவளது கரம் பற்றி இழுத்து வந்து வெளியே விட மனுஷின் அம்மா பயந்து ஓடி வந்தார்.

“ஹேய் மோனே எந்தா இது விஷமம்…?பாவம் மோளுக்குட்டி “என பதறி பிடித்தார் யாழினியை. 

“அம்மே! ஈ பெண்குட்டியானு…” எனும் போதே யாழி நடிப்பைத் துவங்கி விட்டாள்.

“அத்தம்மா எனக்கு பழசு மறந்திடுச்சாம், வினித் அண்ணா சொன்னார்.அதான் இவர் பத்தின எதுவும் தெரியலை. இவர் தாலி எங்கேனு கேட்டு திட்டுறாரு” என்றாள். 

“அடியேய் சாவித்திரி…  எந்தா ஒரு நடிப்பு.. சவுத் இந்தியன் சினிமா தாங்குமா நிங்ஙளுடைய அபிநயத்தை”என ஆவெனப் பார்த்தான் அவளை. 

“அவ்வளவு தான் விஷயமா, ஞான் பயந்நு போயி.. மோனே ஆக்ஸிடன்ட் ஆன இடத்தில் மிஸ் ஆகிடுச்சோ என்னவோ? “

“அம்மே அதல்லா… ?”

“ப்ப்ச் மதி (போதும்) புத்திரா !,அவளுக்கான பாதுகாப்பை தந்திருந்தா இந்த மாதிரி ஆகி இருக்குமா…  நீ செஞ்ச தப்பு தான் இவ்வளவு தூரம் அவளை கஷ்டப்படுத்திடுச்சு” என்றார். 

“கடைசியில் பழி என் மீதா?” என்று வாயை மூடிக் கொண்டான் மனுஸ்யபுத்திரன். 

பாதி மலையாளமும் தமிழும் கலந்து அவன் வாழ்வைப் போலவே உறவாடியது. 

“இப்ப என்னம்மா பிரச்சினை தாலி தானே நம்ம பூஜை ரூமில் வைத்து நாளையே கட்டச் சொல்லுங்க,அவங்க மேரேஜை நீங்களும் பார்த்த மாதிரி இருக்கும்.”என்று மகிழன் யோசனை கூறினான். 

அவனை தீயென முறைத்த மனுஷ், “எதுவும் தேவை இல்லை ஏதோ அவளை பாதுகாக்க தாலி கட்டி இருப்பேன், இப்போது அந்த தாலியே இல்லை இனி எதற்கு அவள் ஏதாவது ஆசிரமத்திற்கு அனுப்பி விடலாம்” என்றான் விட்டேறியாக. 

‘ஸ்ஸ்ஸப்பா ,அவனே ஐடியா கொடுக்கிறான்…எங்கேயாவது கடைக்கோடி இந்தியாவில் விட்டால் தேவலாம்…இந்த நமச்சிவாயத்திடம் இருந்து தப்பிக்க ஒரு வழி கிடைத்து விடும் ‘என்று மனதோடு கணக்கிட்டாள்.  

“என்ன விளையாடுறியா மனுஷ்? அதெல்லாம் ஆகாது..

நிங்ஙளுடை விவாஹம் கழிஞ்ஞூ அத்ரமாத்ரம் (உனக்கு திருமணம் முடிந்து விட்டது அவ்வளவு தான்.) ஏற்கனவே முடிந்த திருமணம் தான் பாழுங்கிணறாய் போனது இதுவாவது நிலைக்கட்டும்…  எவ்வளவு பதவிசான மருமகள் கிடைத்து இருக்கிறாள் இவளை விடுவதா என்னால் முடியாது.”என்று நீட்டி முழக்கி பேசினார் அவனது அன்னை. 

எந்தெங்கிலும் செய்யு பக்ஷே  ப்ரஸ் மீடியா வேண்டா (என்னவேணும் செய்துவிட்டு போங்கள் ,ஆனால் பிரஸ்மீட் மட்டும் வேண்டாம்) அவளுடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது” என்று கூற 

‘அவன் நமசிவாயத்திடம் இருந்து காப்பாற்ற இவ்வாறு கூறி இருக்கிறான்’ என்று யாழி நினைத்திருக்க, மனுஷோ தன் முதல் மனைவி மெட்டில்டாவை நினைத்து அவ்வாறு கூறி இருந்தான்.  

மெட்டில்டா, பண முதலைகள் நிரம்பிய வர்க்கத்தில் இருந்து வந்தவள் தானும் வாழாது தன்னை திருமணம் செய்தவனையும் வாழ விடாத நல்லவள் அவள்…எப்படிதான் அவளின் காதல் எனும் மாயவலையில் வீழ்ந்தான் என்று தெரியாமல் உழன்று கொண்டிருந்தான்.  ஆனால் அவனுக்கு தெரியாத விஷயம் மெட்டில்டா அவனை வீழ்த்தி இருந்தாள் சூழ்ச்சி செய்து. 

மகிழனோ யாழினியைப் பார்த்து,” யாழினி நீ அகத்தே போடா ,ரெஸ்ட் எடு” என்று கூறி அனுப்பி வைத்தான். 

டொம்மென்று பாத்திரம் விழும் சத்தம் கேட்டது. மகிழனுக்கு புரிந்து போனது இது மனைவியின் லீலை என்று. 

‘பொண்டாட்டி கிட்ட பேச நேரம் இல்ல ஆனா யாழி உள்ளே போடாவாம், ச்சே வெட்கங்கெட்ட ஜென்மம் ‘என்று புலம்பினாள். மகிழனின் மனைவி மைத்ரா தேவி. 

“மைத்தி எந்தா மோளே! “என மாமியார் குரல் கேட்டதும்,”தவறி விழுந்துடுச்சுமா, இதோ எடுத்து வச்சுட்டேன்” என்றாள் சாந்தமான குரலில். 

“தவறி விழுந்துடுச்சா? விழ வச்சுட்டியா?”என்று மகிழன் கேட்க 

பதில் வரவில்லை அவளிடமிருந்து. 

“பதில் வந்துட கிந்துடப் போகுது…  அழுத்தக்காரி” என முறைப்புடன் முணுமுணுத்தான் மகிழன். 

**********.

மனுஷ் தன் அறைக்குள் சென்று இருந்தான். 

காலைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள் யாழினி. 

கதவை சாத்தி விட்டு வந்தவன், கைபேசியை தூக்கி அடிக்க ,அதிர்ந்து எழுந்து நின்றாள் யாழி. 

“இப்படி உன்னை உடைக்கத் தோணுது எனக்கு, ஸ்டுப்பிட் எதுக்கு இங்க டிராமா போட்டு உட்கார்ந்து இருக்க… ?மரியாதையா காலையில் கிளம்பி எங்கேயாவது போய்த் தொலை” என்றான் எரிச்சலாக. 

“நான் போக மாட்டேன்!” என்று திமிராக நின்றிருந்தாள். 

“உன்னைப் போய் காப்பாத்தினேன் பாரு, என்னை சொல்லனும்” என்று வெடுக்கென கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து அறைக்கு வெளியே விட்டான். 

“என் கண் முன்னே இருந்த கொன்னுடுவேன் உன்னை” என்று மிரட்ட அவளோ அசராது பார்த்து இருந்தாள். 

நமச்சிவாயத்திடம் சிக்கி சீரழிவதை விட இவனது கோபம் பரவாயில்லை என்றிருந்தது அவளுக்கு .

“ப்ப்ச்!” என்று சலித்தவனோ கதவை அடித்து சாத்தினான்.

.  கதவருகிலேயே சாய்ந்து அமர்ந்து விட்டாள்.  இந்த காட்சி மிகச் சரியாக மனுஷ் அம்மாவின் விழிகளில் பட்டு விட்டது. 

….. தொடரும்