Advertisement

அத்தியாயம் 18
சென்னையை வந்தடைய முன் ஷரப் வாளை மீட்டெடுக்க சைதன்யனை கடத்துவது என முடிவு செய்து அவனை கடத்துமாறு கட்டளையிட்டிருந்தான்.
சைதன்யனை கடத்தி விட்டதாக தகவல் வரவே சென்னையை வந்தடைந்தவன் சைதன்யனை அடைத்து வைத்திருந்த இடத்துக்கு வந்தடைந்தவனை கடத்தியவர்களின் தலைவன்
“சார் நீங்க சொன்ன மாதிரியே சைதன்யன் சௌதாகர தூக்கிட்டோம் ஆனா” என்றிலுக்க நடையை நிறுத்தி அவன் பக்கம் திரும்பி அவனை பார்த்தான். அவன் பார்வையில் வறண்ட தொண்டையை எச்சில் விழுங்கி ஈரப்படுத்தியவன் “கடத்தும் போது கூடவே அவரோட மனைவியும் இருந்ததால் அவங்க இவர கடத்த விடாம போராடியதுல” என்று நிறுத்த அவனை கண்கள் கூர்மனையாக்கிப் பார்க்க அவனின் புலியின் பார்வை ஒத்த கூர்பார்வையை எதிர்பார்வை பார்க்க முடியாமல் பேச்சு வராமல் தலைவன் திண்டாடினான்.
அவன் பக்கத்திலிருந்தவன் “நான் தான் சார் அந்த பொண்ணு தலையிலேயே கட்டயால அடிச்சேன். அந்த பொண்ணு மயங்கிருச்சு. இந்நேரம் போய் சேர்ந்திருக்குமோ என்னவோ” என இளித்தவாறே பெருமையாக கூற அவனை “பளார்” என அறைந்தான் ஷரப்.
தலைவனே எப்படி சொல்வதென்று திண்டாடும் போது தான் முந்திக்கொண்டு தற்பெருமை பாட கன்னத்தில் அறைவாங்கியவனுக்கு பேரிடியாக “அவங்க கண்ணு திறக்குற வரைக்கும் இவனுக்கு சோறு தண்ணி கிடையாது அவங்களுக்கு ஏதாவது ஆச்சு இவன் உசுரோட இருக்கக் கூடாது” என கர்ஜனை குரலில் ஹிந்தியில் கூறியவன் தனது பி.ஏ வ்ருஷத்தை அழைத்து ஏதோ பேச மீராவை அடித்தவன் கடத்தப்பட்டான். அவனுடன் வந்த சில பேர் அடித்தவனை தூக்கிச்செல்ல தலைவன் செய்வதறியாது நின்றுவிட்டான்.
பெண்களை மதிக்காது அடிமையாக நடத்துபவன் ஷரப் ஒரு பெண்ணின் மீது வைத்த காதலால் சற்ரேனும் பெண்களை மதிக்கவும் உயிருள்ள ஜீவனாகவும் ஏற்றிருந்தான். அதனால் தான் என்னவோ சைதன்யன் உயிரை வைத்திருக்கும் மீராவை கடத்தாமல் ஒரு  ஜென்டில்மேனாக மேன் டு மேன் பிரச்சினையை பார்த்துக் கொள்ளலாம் என  சைதன்யனை கடத்தச்சொன்னது. மீராவை கடத்தியிருந்தால் சுலபமாக சைதன்யன் வாளை அவனிடம் கொண்டு சேர்த்து விடுவான் என அறிந்திருந்தும் சரவணன் மூலம் வாளை பெற சைதன்யனை கடத்தினான்.
 “எவ்வளவு நேரமாக மயக்கத்துல இருக்கான்” சைதன்யனின் மேல் வைத்த பார்வைவை அகற்றாது அவனை அங்குலம் அங்குலமாய் அளந்தவாறே கேட்க
ஒரு கதிரையில் பின்னால் கை கட்டப்பட்டவாறு சைதன்யன் இடது பக்கமாக சாய்ந்தவாறே கழுத்து தொங்கி மயங்கிய நிலையில் இருக்க வலது பக்க நெற்றி அடி பட்டதால் வீங்கி புடைத்திருந்தது. கன்னத்தில் இரத்தம் வழிந்தது அவன் அணிந்திருந்த வெள்ளை சட்டையிலும் தெறித்திருக்க வலது காலை நீட்டியவாறும் இடது கால் மடிந்த நிலையிலும் வேர்வையில் குளித்து காணப்பட்டான்.
“கடத்தும் போது மயக்க மருந்து கொடுத்தது தான் சார் இன்னும் எந்திரிக்கல” கதவின் உள்ளே புகும் போதே சைதன்யன் இருந்ததால் இன்னொரு முனகல் சத்தம் கேட்கவே இடது பக்கமாக திரும்ப அங்கே இன்னொருவன் கட்டப்பட்ட நிலையில் கீழே விழுந்து கிடந்தான். அவனின் முகம் சரியாக தெரியவில்லை நெற்றி சுருக்கி யோசனையாக கடத்தல்காரனை பார்க்க
 “இவர கடத்தும் போது பின்னாடியே பாலோவ் பண்ணி கிட்டு வந்திருக்கான் அவரோட பாடிகார்டா இருக்கும்னு சந்தேகமா இருந்ததால பசங்க தூக்கிட்டு வந்துட்டானுங்க” பவ்வியமாக சொல்ல கீழே கிடந்தவனை பார்த்து கேலிப்புன்னகையை உதிர்த்தான் ஷரப்.
“வ்ருஷாத் இவன போட்டோ அண்ட் வீடியோ எடுத்து அவன் அப்பனுக்கு அனுப்பு எந்த டிமாண்டும் இல்லாம ஜஸ்ட் அனுப்பு” என அவனுடைய பி.ஏவை ஏவினான். ஷரப் கண் காட்டினாலே செய்து முடிப்பவன் வாயால சொன்னால் தாமதிப்பானா? உடனே காரியத்தில் இறங்கினான்.
லேசாக மயக்கம் தெளியும் போது சைதன்யனுக்கு நடந்தவைகள் படமாக நியாபகத்தில் வந்தது.
அன்று மலர்ந்த மலர் போல் குளித்து விட்டு வந்த குழந்தை உண்டாகி இருந்ததால் இன்னும் பிரகாசமாக ஜொலித்த மீராவை கண்டு விசிலடித்தவன் “ரௌடி பேபி ரெண்டு நாளா நீ என்ன கண்டுகிறதே இல்ல மீ பாவம் டி” என அணைக்க வர
பட்டென்று அவன் கையில் அடித்தவள் “மீயூம் பாவம்” என சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு “பாப்பாவும் பாவம் ஏதாவது ஆச்சுன்னா” என்று முகம் சுருங்க அதை கூட தாங்க முடியாமல்
“ஏய் கியூட்டிபய் நம்ம வீட்டுல ஒரு திருட்டு பூன புகுந்திருச்சு டி” என பேச்சை மாற்றினான்.
“பூனையா” அதிசயமாய் கேட்டாள் மீரா. இந்த பத்து வீட்டுக்கும் இருக்கும் காவலாளிகள் இரவும் சுத்திக்கு கொண்டே இருப்பதால் பூனை எப்படி வரும். என்ற புரியாத பார்வை வேறு பார்த்தாள்.
“பூனை தான் டி திருட்டு பூனை. பிரிஜில் உள்ள எல்லாத்தையும் காலி பண்ணி இருக்கு” என சிரிக்காமல் சொல்ல
தன்னை தான் திருட்டு பூனையென்று சொல்கிறான் என புரிந்துக் கொண்டவள் அசடு வழிந்தவளாக “என்ன செய்ய சையு எந்த நேரமும் பசிக்குதே உங்க பாப்பா பண்ணுற வேல” என்று அப்பாவியாய் முகத்தை வைத்து கொண்டு கூற அவன் அடுத்து சொன்னதை கேட்டு திருதிருவென முழிக்க ஆரம்பித்தாள்.
“அந்த பூனை அடுப்பு பத்த வச்சி சமைச்சி சாப்பிடுது டி” சிரிக்க வேறு செய்தான்.
அவன் சொல்லி முடிக்கையில் குட்டு உடைந்ததை நினைத்து முழித்தவள் “சாரி சையு உங்க கிட்ட இருந்து உண்மைய வரவழைக்க எனக்கு சமைக்க தெரியாதுன்னு பொய் சொன்னேன்” என்றாள் சோகமாக.
“உனக்கு உண்மை தெரிஞ்சி ஏதாவது ஆகிடுமோனு தான் மறைச்சேன் பொய் சொல்லணும்னு எண்ணம் எல்லாம் இல்ல என்ன தனஞ்சயனா மத்தினதே நீதான்” என்று அன்று ஆபீசில் நடந்ததை சொல்ல தனக்கு பழையதெல்லாம் மறந்ததால் வந்த வினையென்று கவலையடைந்தாள்.
அவளின் சுருங்கிய முகத்தை கண்டு முத்தமிட்டவாறே “ஆனாலும் சந்துருவும் சௌமியாவும் கதை திரைகதை வசம் எழுதி எல்லாருக்கும் படத்த ஓட்டிட்டாங்க” என்று சத்தமாக சிரிக்க
அவனின் சிரிப்பில் மயங்கி “சையு லோங் டிரைவ் போலாமா?”
“போலாம் போலாம் அதுக்கு முன் அம்மணி என்னெல்லாம் தெரியாதுன்னு என் கிட்ட மறச்சீங்கன்னு கொஞ்சம் சொல்றீங்களா?” நெற்றியில் முட்டியவாறே கேக்க
“ஏதோ யு டியூப் புண்ணியத்துல சாப்பாடு சாப்டுற மாதிரி இருந்துச்சு நீங்க சமைச்சிட்டு குளிக்க போனதும் சமையல் நல்லா இருக்கானு பாத்து போதா குறைய சரி பண்ணிடுறேன். துணியும் அப்படிதான் நீங்க துவச்சத நா காய போடுறேன். ஆபீஸ் போக லேட் ஆச்சுன்னு உங்கள அனுப்பிட்டு திரும்ப துவைச்சு கதையெல்லாம் நிறையவே இருக்கு” உதட்டை சுளித்து சொல்ல உதட்டை சுண்டி விட்டவாறே ஜீப்பின் சாவியை கையில் எடுத்தவன் கண்ணாலேயே போய் கிட்டு பேசலாம் என சொல்லியவாறே மீராவை தூக்கிக் கொண்டு வெளியே சென்றான்.
மறுக்காமல் அவன் கைகளில் தஞ்சமடைந்தவள் இவன் கழுத்தில் மாலையாக கைகோர்த்தவாறு பேசிக் கொண்டே வந்தாள் 
அவளை வண்டியில் இருத்தி சீட் பெல்ட்டையும் போட்டு விட்டவன் வண்டியை கிளப்பியவாறே “அன்னக்கி உங்க கைய சுட்டு கிட்டீங்கல்ல அதுக்கப்போறம் தான் உங்களுக்கு தெரியாமலேயே எல்லா வேலையையம் பாத்தேன். ஆனாலும் உங்க வாயிலிருந்து உண்மைய வரவைக்க முடியலையே” என்று பொய்யாய் பெருமூச்சு விட
 “உனக்கு எல்லாமே நியாபகம் வந்திருச்சு என்று சொல்லி நேரடியா கேட்டிருந்தாலே சொல்லி இருப்பேன்” என சைதன்யன் சிரிக்க அவனை முறைத்தாள் மீரா.
இவர்கள் வீட்டிலிருந்து புறப்பட்டு வந்ததிலிருந்து வண்டியை முன்னும் பின்னும் தொடரும் நான்கு வண்டிகளை கவனிக்கத் தவறினான் சைதன்யன். வாகனங்கள் அதிகமில்லாத பாதையில் பயணிக்கும் போது சைதன்யனின் வண்டியை மறைத்து நின்றது ஒரு வேன்.
சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினான் சைதன்யன் என்ன ஏதென்று அவன் இறங்குவதற்கு முன் உருட்டு கட்டைகளுடன் சில பேர் இறங்க மற்ற வண்டிகளும் வந்து நிறுத்தி இருந்தன.
பிரேக் போட்ட வேகத்தில் மீரா வயிற்றை பிடித்திருக்க சைதன்யனின் இடது கையும் அவளை மறித்து தாங்கியது. சீட் பெல்ட் போட்டிருந்த படியால் அவள் முன்னாடி அதிகமாக வராமல் சைதன்யனின் கையில் தாங்கி நிற்க சைதன்யன் கோபமாக வண்டியிலிருந்து தாவி இறங்கினான்.
மற்ற வேன்களிலிருந்தும் பல பேர் இறங்க ஜீப்பில் வந்ததை நினைத்து நொந்து கொண்டான் சைதன்யன் “ஸ்ரீ நீ கீழ இறங்காதே” அவன் சொல்லி முடிக்கும் முன் மீரா சீட் பெல்ட்டை கழட்டி இறங்கி இருந்தாள்.
பின்னாடி இன்னும் இரண்டு வண்டியும் பக்க வாட்டில் ஒரு வண்டியுமாக நான்கு வண்டிகள் இருக்க எல்லா வண்டிகளிலிருந்தும் அடியாட்கள் போல் சில பேர் உருட்டுக்கட்டைகளுடன் இருப்பதை கண்டு மீரா பதை பதைத்தவாறே சைதன்யனிடம் செல்ல முற்படும் போது ஒருவன் அவனின் தலையில் அடித்தான்.
வலது நெற்றியில் காயம்பட்டு இரத்தம் பொல பொலவென கொட்ட மீரா “சையு” என கத்தியவாறே முன்னாடி பாய்ந்தாள். அவளை ஒருவன் இழுத்து பிடிக்க சைதன்யனுக்கு மயக்க மருந்தை முகத்துக்கு ஒருவன் தெளிக்க முற்பட அதை தடுத்தவன்
“அவளை விடுங்கடா” என கத்த மீண்டும் அவனை அடிக்க பின்னாலிருந்து ஒருவான் பாய மீரா அவளின் கையை பிடித்திருந்தவனின் கையை கடித்து விட்டு சைதன்யனிடம் பாய முதுகில் அடி வாங்கினாள்.
அவள் குறுக்கால வந்ததால் கோவ முற்றவன் கட்டையால் அவளின் தலையில் பலமாக அடித்தான். சைதன்யன் அவள் புறம் திரும்பியவுடன் மயக்கமருந்தை தெளித்து இருந்தான் ஒருவன். மயங்கியவாறே மீரா கீழே சரிவதை கண்டான்.
மெதுவாக கண்ணை திறந்தவனுக்கு தலை வின் வின் என்று வலித்தது. அவன் முன்னாடி ஒருவன் கன்னக்குழி  விழ புன்னகையுடன் அமர்ந்திருப்பதை பார்த்தவன் அசைய முடியாதவாறு கைகள் கட்டப் பட்டிருக்க “ஹலோ ப்ரோ ஐம் ஷரப். ஷரப் சௌதாகர் நைஸ் டு மீட் யு” என்றான் ஷரப்.
“எங்கடா என் ஸ்ரீ” சைதன்யன் பலம் கொண்ட மட்டும் விடுபட முற்சித்தவாறே கர்ஜித்தான்.
முன்னாடி அமர்ந்திருப்பவனின் வலியை கிஞ்சத்துக்கும் கண்டுகொள்ளாது “சு சு சு பொண்டாட்டி மேல அவ்வளவு பாச…..ம்” என்றான் ஷரப்.
சௌமியா வீட்டுக்கு ஒரே பெண். தந்தை பக்கவாத நோயினால் பாதிப்படைந்து பல காலமாய் கட்டிலுடன் இருக்க தாய் அவரை கவனித்துக் கொள்கிறார். சேமிப்பில்  இருந்த பணத்தைக் கொண்டு இறுதியாண்டு படிப்பை முடித்துக் கொண்டவள் சந்துருவின் உதவியோடு எஸ்.எஸ். குரூப்பில் இணைந்தாள். இன்று குடும்பத்துக்கு போதியளவு செலவுடன் அவளின் கல்யாணத்துக்கென கொஞ்சம் சேமித்தும் வருகிறாள். அவளை பற்றி நன்கு அறிந்துதான் சந்த்ரு அவளை காதலிக்கவே செய்கிறான்.    
“எங்க இருக்க”
“என்னடி படபட பட்டாசு ஊசிப்போன பட்டாசு மாதிரி மெதுவா பேசுற? நீ பேசுறதே உனக்கு கேக்க மாட்டேங்குது எனக்கு கேக்குமா?” வண்டியில் ஒரு வேலை விஷயமா சென்று கொண்டிருந்த சந்துருவை அழைத்த சௌமியா தனக்கு  கேக்காத குரலில் பேச சந்துரு பேசியதை கேட்டு பல்லை கடித்தாள்.
“நேசமணி சாரும் உங்க அம்மாவும் வீட்டுக்கு வந்திருக்காங்க நீ சீக்கிரம் வா” என அலைபேசியை அனைத்தள்.
“அப்பாவும் அம்மாவும் எதுக்கு மியா வீட்டுக்கு போய் இருக்காங்க?” குழம்பியவாறே அவள் வீட்டுக்கு வண்டியை திருப்பினான்.
“என்னம்மா சந்துரு கிட்ட பேசிட்டியா?” உங்க ரெண்டு பேர் பத்தியும் எனக்கு நல்லாவே தெரியும் என சொல்லாமல் சொன்னார் நேசமணி.
“நீங்க  ரெண்டு பேரும் விரும்புறது எங்களுக்கு ஏற்கனவே தெரியும். தம்பி {சைதன்யன்} கல்யாணம் முடியும்வர அமைதியா  இருக்கும்படி இவர் தான் என்ன கட்டுப்படுத்தி வச்சாரு, அப்பொறம் பொண்ணு படிப்பு முடியட்டும் என்றாரா இல்லனா எப்பவோ வந்திருப்பேன்” என்றார் சந்துருவின் அம்மா கலாவதி.
இங்கே சந்துரு சௌமியாவின் வீட்டை நோக்கி வந்து கொண்டிருக்கும் பொழுது சைதன்யனை தூக்கி வண்டியில் ஏற்றுவதை கண்டு அவ்வண்டியின் பின்னாடி பின் தொடர்ந்து செல்லலானான். மீராவின் துரதிஷ்டம் அவன் மீரா கீழே விழுந்திருந்ததை காணவில்லை.
நான்கு வண்டிகள் என்பதால் சந்துரு பின்தொடர்ந்து வருவதை கண்டு கொண்டவர்கள் அவனது பைக்கையும் மறித்து நிறுத்தி அவனையும் ஏற்றி இருந்தனர்.
சைதன்யனை கட்டி போட்டு இருக்கும் இடத்தில் மயக்கமாக்காமல் அவனை கட்டி கீழே கிடத்தி இருந்தனர் வாயும் கட்டப்பட்டதால் பேச முடியாமல் சைதன்யனை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தான்.
ஷரப் வந்து பேசும் போது சத்தம் காட்டவே சந்துருவை தூக்கி அவனையும் ஒரு கதிரையில் அமர்த்தி வாய்கட்டை அகற்ற உத்தரவிட்டான் ஷரப்.
“என்ன சந்துரு ஆருயிர் நண்பன் கூட ஒன்னா போலாம் என்று பின்னாடி வந்தீங்க போல” சொல்லி சிரித்தவனை
“ஏன்டா பெரிய ஜோக் சொன்னது போல் சிரிக்கிற லூசுப் பயலே அவனை கடத்துன அவங்கப்பா பணம் கொடுப்பாரு என்ன ஏன்டா கடத்துன எங்கப்பா போட்டு தள்ள சொல்வாரே” என முற்பாதியை கெத்தாகவும் பிற்பாதியை அழுகுரலிலும் சொல்ல
“ஐ லைக் யூ தி வேய் யு ஆர் டல்கிங்” மீண்டும் சிரித்தான் ஷரப்.
“இங்கிலீசு லூசு போல” என தனக்குள் மூணு முணுத்தவன் பாடிகார்ட் என நினைத்து அவனை அடி பின்னியெடுத்திருக்க  வலி தாங்க முடியாமல் கண்களை மூடிக்கொண்டான்.
“ஹலோ ப்ரோ ஐம் ஷரப். ஷரப் சௌதாகர். நைஸ் டு மீட் யு” என்ற ஷரப்பின் குரல் கேட்டு அவனை நன்றாகப் பார்த்த சந்த்ரு சைதன்யன் பக்கம் திரும்பி “டேய் உங்கப்பா இப்படி பண்ணுவாரென்று நம்பலடா உன் அண்ணன் தம்பியென்று எத்தனை பேருடா இப்படி கிளம்பியிருக்காங்க”
சந்துருவின் பேச்சை பொருட் படுத்தாது சைதன்யன் பலம் கொண்டமட்டும் விடுபட முற்சித்தவாறே “எங்கடா என் ஸ்ரீ” என்று கத்தலானான்.
“சு சு சு பொண்டாட்டி மேல அவ்வளவு பாச…..ம்” என்றான்  ஷரப்.
அவன் கண்களில் இருந்த கொலைவெறியும் பலி உணர்ச்சியும் சைதன்யனை உள்ளுக்குள் அச்சத்தை ஏற்படுத்த, மீரா என்ன ஆனா என்ற கவலை வேறு தொற்றிக்கொள்ள அவனிடம் சமாதானமாக பேசத்துவங்கினான்.
சைதன்யனுக்கும் மீராவுக்கு அழைத்து நாளை மறுநாள் நல்ல நாளாக இருப்பதால் வீட்டுக்கு அழைத்து செல்ல வருவதாக கூறவேண்டும் என லட்சுமி அம்மா பல தடவை முயற்சி செய்தும் “நீங்கள் அழைக்கும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்” என கணனி குரல் சொல்ல “லண்டன் எல்லைல இருக்கும் போதே என் பையன் பேசுவான் தொடர்பு எல்லைல இருந்தா பேச மாட்டானா? என கோபமாக போனை கீழே போட
“என்ன லட்சு என்ன ஆச்சு”
“உங்க பையனுக்கு போன போட்டேன் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கானாம் உங்க போன குடுங்க அதுல பேசி பாக்குறேன்”
சரவணன் சிரித்தவாறே “என் போன்ல போட்டா மட்டும் தொடர்பு எல்லைக்குள்ளே வந்துடுவானா? அவரின் போன் குறுந்செய்தி வந்ததாக ஒலி எழுப்ப சைதன்யன்  தான் அனுப்பி இருப்பான் என எண்ணி பிடுங்காத குறையாய் வாங்கிப் பார்த்தவர் மயங்கிச்சரிந்தார்.
அவர் மயங்கிச்சரியவும் ‘லட்சு’ என கத்த வீட்டு வேலையாட்கள் ஓடி வந்தனர். லட்சுமி அம்மா உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். போனில் வந்த குறுச்செய்தியை பார்த்த சரவணன் சார் அதிர்ச்சியில் அமர்ந்தார்.
சந்துரு வராமல் போகவே கல்யாணத்தை பேசிமுடித்த நேசமணி சந்துருவின் மேல் கொலை வெறியில் இருக்க லட்சுமி அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தெரியவர சௌமியாவையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு புறப்பட்டார் நேசமணியும் கலாவதியும் வந்து சேர, மீரா குடும்பமும் வந்து சேர்ந்தனர்.
அங்கே சென்றவர்களுக்கு பேரதிர்ச்சியாக சைதன்யன் கடத்தப்பட்டது தெரியவர கடத்தியவனிடமிருந்து எந்த ஒரு கோரிக்கையும் இதுவரை வந்திருக்கவில்லை அதனால் என்ன செய்யலாம் என ஒரு முடிவுக்கும் வர முடியாமல் தவித்தனர்.
 “என் ஸ்ரீ எங்க?”
“ஹாஹாஹா கோபப்பட்டா வேலைக்காகாதென்று அமைதியா பேசுறியா பாய்.{ப்ரோ} உனக்கு ஒரு கத சொல்றேன் கதையை கேட்டுட்டு இந்த கதைல யொத்தா [போர்வீரன்] பத்தி பாத்துட்டு நீ ஹீரோவா? நா ஹீரோவா? என்று தெரிஞ்சிக்கலாமா?” யார் என்றே தெரியாதவன் சம்பந்தமே இல்லாமல் கடத்திக் கொண்டு வந்து கதை சொல்கிறேன் கேள் என்றதும் அவனை கொலைவெறியோடு முறைத்தான் சைதன்யன். 
சைதன்யனின் முறைப்பெல்லாம் அவன் முன்னால் அமர்ந்திருந்தவனுக்கு பெரிதாக தெரியவில்லை. அவன் பாட்டில் பேசிக் கொண்டிருந்தான். “ராஜஸ்தானையே ஒரு அரசர் ஆண்டாராம் அவருக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு இளவரசர் தான் அடுத்த கிங் அவரை விட்டுடுவோம் கத நம்ம இளவரசியோடது” சைதன்யன் மற்றும் சந்துருவின் பார்வை ‘இவன் என்ன லூசா’ என்றிருக்க ஷரப் மேலும் தொடர்ந்தான்.
“அந்த இளவரசி தளபதி மேல மையல் கொண்டு… காதல் கொண்டிருந்தாளாம். யுத்தத்துல வெற்றியோட திரும்பின தளபதிக்கு அரசர் ஒரு ‘வாளை’ பரிசளித்து இளவரசியை மணமுடிச்சி கொடுத்து கௌரவ படுத்தினாராம். அந்த வாள் தான் யொத்தா. {योद्धा/yoddha } பாய்…….ஸ் ஏதாச்சும் புரிஞ்சதா?” சைதன்யனை ஏறிட்டவாறே கேட்க
“கன்போர்ம் இவன் லூசுதான் ஐயோ ஒரு சைக்கோ கிட்ட வந்து மாட்டிகிட்டேனே” சந்துரு சத்தமாக புலம்ப
“ஸ்ஸ்ஸ்ஸ்” வாயில் விரலை வைத்து சந்துருவின் முகத்தின் அருகே முகத்தை கொண்டு வந்தவன் “கத சொல்லும் போது குறுக்க பேச கூடாது எனக்கு கெட்ட கோவம் வரும்” ஷரப் அமைதியாக மிரட்டினான்.
“கோவத்துல ஏதடா நல்ல கோவம் கெட்ட கோவம் லூசு லூசு” சந்துரு முணுமுணுக்க ஷரப்பின் சிவந்த கண்களை கண்டு சந்துருவும் உள்ளுக்குள் குளிரெடுத்தாலும் அவனை நக்கல் பார்வை பார்த்தான்.
“எங்க விட்டேன் ம்ம்ம் ஆஆ… “யொத்தா” எஸ் யொத்தாவ பரம்பரை பரம்பரையாய் குடும்பத்தின் மூத்த ஆண் வாரிசுக்கு கொடுக்கப் படுமாம். அப்படி கொடுக்கப்பட்ட ஒரு வாரிசுக்கு இரண்டு பையனும் ஒரு பொண்ணும் இருந்தாங்களாம்.
அந்த கிழவி தமிழ் நாட்டுல இருந்து வந்த வியாபாரி ஒருத்தன காதலிச்சு ஓடி போய்ட்டாளாம். அண்ணன் தம்பிக்குள்ள பிரச்சினையாகிருச்சு தம்பி தான் அந்த வியாபாரிய வீட்டுக்கு கூட்டிட்டு வந்தான் என்று அண்ணன் சண்டை போட அண்ணன் தான் வியாபாரம் செஞ்சான் என்று தம்பி சண்டை போட சண்டை முத்தி அண்ணனை பலி வாங்க தம்பி யொத்தாவ தூக்கிட்டு சு.. சு.. சு..” தலையை இடது புறம் வலது புறமாக ஆட்டியவாறே “திருடிட்டு சுவடே இல்லாம காணாம போய்ட்டான்.
ரெண்டு தலை முறையா ராஜஸ்தானை புரட்டிப் போட்டு கிடைக்காத யொத்தா மூன்றாம் தலைமுறையின் ஒரே வாரிசான ஷரப் சௌதாகர் எனும் நான் தமிழ்நாட்டுல யொத்தா இருக்குறத கண்டு பிடிச்சிட்டேன்” என வில்லச் சிரிப்பு சிரிக்க சைதன்யனுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.
“என்ன ப்ரோ இன்னும் புரியலையா? புரியாத மாதிரி நடிக்கிறியா? நம்ம கொள்ளு தாத்தா ‘விஸ்வதீர் சௌதகர்’ அரசரிடம் பரிசாக பெற்ற வாள் ‘யொத்தா’ உன் அப்பனோட தாத்தா திருடிட்டு இங்க ஓடி வந்துட்டான். அது எனக்கு சொந்தமானது  அண்ட் தங்க யு சோ  மச் சந்துரு நீ பேஸ்புக்ல போட்டோ போட்டதால் தான் என்னால யொத்தாவ கண்டு பிடிக்க முடிஞ்சது” சொல்லியவன் ஏதோ சாதித்த மாதிரி நிம்மதி பெருமூச்சடைந்தான்.
“ஏன்டா களவானி வம்சமாடா நீ. போயும் போயும் உன்ன பிரெண்டா வச்சிருக்கேனே து… உண்மையான வாரிசான ரௌடி சார் என்ன விட்டுடுங்க. மீ பாவம். மீரா சிஸ்டரும் பாவம் அவங்க எங்க இருக்காங்கனு சொல்லுங்க. நா அவங்கள கூட்டிட்டு போயிடுறேன் இவன என்ன வேணாலும் பண்ணிக்கோங்க” சந்துரு அப்பாவியாய் கெஞ்ச
அவனை புன்னகையுடன் பார்த்த ஷரப் “என்ன என்ன தேர்ட் ரேட் ரௌடி என்று நினைச்சியா? உன் பேச்சுல பாவப்பட்டு மனசு இறங்க” “பளார்” சந்துருவை  அறைந்தான் ஷரப்.
“அம்மா… அடியா இது இடி மாதிரி இருக்கு” கடை வாய் ஓரம் இரத்தம் சொட்ட சொட்ட சந்துரு சொல்ல
“சந்துரு அடங்குடா” சைதன்யன் அதட்டினான்.
“குட். டீல் பேசலாமா?” ஷரப் சைதன்யனை பார்த்த போது வ்ருஷாத் வந்து ஏதோ சைகை செய்ய எழுந்து சென்றான்.
சைதன்யன், மீரா சந்துரு மூவரினதும் உயிருக்காக “யொத்தா” வேண்டும் என்ற கோரிக்கையை பார்த்து சரவண சார் உட்பட அனைவரும் யாரிந்த யொத்தா என குழம்பினர்.
இங்கே மீரா கண்விழித்து சுற்றும் முற்றும் பார்த்து ஒன்றும் புரியாமல் தலை கணக்க தலையில் இருந்த கட்டை கண்டு தான் ஏதோ ஒரு வண்டியில் மோதியது நியாபகத்தில் வர தொடர்ந்து சைதன்யன் சொன்னவைகளும் நியாபகத்தில் வந்து மீண்டும் மயங்கி சரிந்தாள்.

Advertisement