Advertisement

அத்தியாயம் 12
சந்துரு அன்று ஆபீஸ் வராது வெளி வேலையாய் போய் இருக்க சௌமியா தான் மீராவுமில்லாது தவித்துப்போனாள். “சோ போரிங்” என்றவாறே வேலைகளை பார்த்திருந்தவளுக்கு நான்கு மணியளவில் சந்துரு கால் செய்து மீரா மயங்கி விட்டதாகவும் இப்பொழுது ஹாஸ்பிடலிலிருந்து வீடு சென்றதாகவும் கூறி இருந்தான்.
“என்னது மீரா ப்ரெக்னன்டா” என்று மியா கூவ “லூசு மாதிரி யோசிக்கிறதே இவளுக்கு வேலையா போச்சு” என முணுமுணுத்தவன். “கத்தாதேடி கேக்குறவங்க தப்பா எடுத்துக்க போறாங்க”
“அதானே அவங்க மீட் பண்ணி ஒரு மாசம் கூட அகலயே” காதில் வைத்திருக்கும் போனை மறந்து தனக்குள் கூறியவாறு யோசிக்க அந்தப்பக்கம் பல்லை கடித்தான் சந்துரு.
“ஆத்தா பரதேவதையே! உன் வாய திறக்காம நா சொல்றத கேளுமா” கடுப்பாக மொழிந்தவன் நடந்தது என்னவென கூற
 “என்னது அம்னீசியாவா?” என்று அதிர்ச்சியடைந்தாள்.
“என்னடி கத்துற மீரா சிஸ்டர் உன்கிட்ட சொல்லலையா!”
“இல்லடா. இரு இன்னக்கி அவள போய் காட்டுற காட்டுல பழைய நியாபகங்கள் எல்லாம் வந்துடும்” கோவமாக கூறினாலும் தோழியின் நிலையறிந்து வருந்தியவள் ஆபிசிலிருந்து மீராவின் வீட்டை நோக்கி சென்றாள்.
  
மீரா வீட்டுக்கு வந்த சௌமியாவை வரவேற்றது சரஸ்வதி அம்மா. “எங்கம்மா அவ” என்றவாறு வந்தவளை
“அவ அறையிலதாம்மா இருக்கா நீ போய் பாரு உனக்கு குடிக்க ஏதாச்சும் எடுத்துட்டு வரேன்”
“ஏதாச்சுமில்லை ஸ்ட்ரோங்கா டீ கொண்டுவாங்க” என்று உத்தரவிட்டு மீராவின் அறையினுள் போக கதவருகே இருந்தவளை கட்டியணைக்க இழுத்து நிறுத்தி கதவடைத்திருந்தாள் மீரா.
அவளின் இச்செய்கையை கண்களை அகலவிரித்து ஆச்சரியமாக பார்த்தவள் “என்னடி பண்ணுற அண்ணனுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தியா?” என குறும்பாக கேட்க அதை ரசிக்கும் மனநிலையில் மீரா இல்லை.
தோழியின் சோர்ந்த முகம் ஏதோ சரியில்லை என புரிந்துக்கொண்டவள் சீரியஸ்ஸாக முகத்தை வைத்துக்கொண்டு “என்னாச்சு மீரா?” என்று கேட்க
“உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் எனக்கு ஹெல்ப் பண்ணுறியா?” என்றாள் கண்களில் கெஞ்சலை தேக்கியவாறு.
“ஒரு நிமிஷம்” என்றவள் கதவை திறந்துக் கொண்டு போய் சரஸ்வதி அம்மாவிடமிருந்து டீயை வாங்கி வந்தவள் அதை பருகியவாறே “ம்ம் சொல்லு என்ன செய்யனும்” என்று கேட்டாள்.
தோழியை முறைத்தாலும் மீராவுக்கு காரியம் ஆகா வேண்டி இருந்ததால் எதுவும் கூறாமல் அமைதியாக இருக்க, “என்ன இப்போ மட்டும் திட்டாம இருக்க? வெயில்ல வந்து தலை வலிக்குது. காது ரெண்டும் கொய்ங்க்குது. டீ உள்ள போனாதான் நீ சொல்லுறத ஒழுங்கா கேக்கவே முடியும். நீ சொல்லுறது வேற தலைவலியை அதிகப்படுத்தினா? அதுக்குதான்” டீ கப்பை காட்டியவள் பேசுமாறு செய்கை செய்து விட்டு உறிஞ்ச ஆரம்பித்தாள்.    
வேறொரு சமயம் என்றால் மீரா சௌமியாவை கிண்டல் செய்திருப்பாள். அவளிருக்கும் மனநிலையில் வேறெதுவும் தோன்றவில்லை. தான் கண்ட கனவையும் இன்று அம்பிகாவை சந்தித்ததையும் கூறியவள் “அவர் பெயர் சைதன்யன் தான்டி அப்போ எதுக்கு தனஞ்சயனா இருக்காரு?அன்னைக்கு அவர் என்ன சரியா பார்க்க கூட இல்ல ஆனா அவருக்கு என்ன தெரிஞ்சிருக்கு ஒரு வேல லவ் பண்ணி இருப்பார் போல, ஊட்டில தான் சந்திச்சு இருக்கணும். என்னோட கெஸ்சிங் என்னென்றா எனக்கு எக்சிடண்ட் ஆனது அவருக்கு தெரியாது என்ன தேடிகிட்டு இருந்தவருக்கு இங்க என்ன பார்த்ததும் நா அவரை மறந்துட்டேனு தெரியல”
மீரா சொல்லியதை கேட்டவள் டீயை அருந்தியவாறே “ம்ம்ம்” என்று எதையோ யோசித்தவள் போனை நோண்ட ஆரம்பித்தாள்.
அவள் செய்வதை பார்த்த மீரா “என்னடி செய்ற எவ்வளவு முக்கியமான விஷயம் பேசிகிட்டு இருக்கேன்” என கடுப்பானாள்.
‘லவ் பண்ணுறேல்ல’ என்று சந்துருட எல்லா பாஸ்வர்டையும் தெரிஞ்சிக்கிட்டது நல்லதா போச்சு பழைய போட்டோஸ் எல்லாம் இங்க தான் பத்திரமா வச்சிருக்கான்’ என்றவாறே சந்துருவின் பேஸ்புக் எகவுன்டை ஓபன் செய்து அவளிடம் போனை நீட்டியவள் அதில் சந்துரு உடன் சைதன்யன் இருக்கும் புகைப்படங்களை காட்டினாள் மியா.
ஒன்றும் புரியாமல் மீரா அவளை ஏறிட
சில பழைய புகைபடங்களை காட்டி “சைதன்யன் சௌதாகர்” என்று சொல்ல அப்புகைப்படத்தை நன்றாக பார்த்தவளுக்கு புரிந்தது. அது ஒரு சுவர் பக்கமாக இருந்து எடுத்த செல்பீ புகைப்படம். சுவர் பூரா இருவரினதும் பெயர்கள் மாத்திரம் இருந்தது. தனஞ்சயன்னு யாருமில்லை. இருந்தா மூவர் அந்த செலபீயில் இருந்திருக்கணும்.
“ஆறுமணி தாண்டிரிச்சு” என்றவாறு கடிகாரத்தை பார்த்த சௌமியா அவளது வீட்டுக்கு அழைத்து தான் இன்று மீராவுடன் தங்கி விடுவதாக கூற, தான் கேட்க நினைத்ததை தோழி செய்து விட்டாள் என்று மீராவுக்கே ஆச்சரியமாக இருந்தது.
“அம்பிகா பத்தின நியாபகம் திரும்பிருச்சுனு ஏன் உன் வேத் அத்தான் கிட்ட சொல்லல” தனக்கு தோன்றிய சந்தேகத்தை தோழியிடம் கேட்டிருந்தாள் மியா.
“நான் தான் ஊட்டி போகணும்னு முடிவு பண்ணேன் ஆனா வேத் அத்தான் அவர் ஏதோ வேல விஷயமா போனதாகவும் அவர் கூட நா போனதாக சொன்னாரு அதான் அவர் கிட்ட இருந்து மறைச்சேன்” தேவ் அவளிடம் எதையோ கூறாமல் மறைகிறான் என்று நினைத்த மீராவும் அவனிடம் இதை பற்றி கூறாமல் இருக்க முடிவு செய்திருந்தாள்.
“உனக்கு அம்பிகா மட்டும் தான் நியாபகத்துல வந்தாளா? இன்னும் வேற ஏதாச்சும்…..” யோசனையாகவே கேட்டாள் மியா.
கனவுல சில முகங்கள் ஏதோ ஒரு காலேஜ்ல சையுவும் நானும் ம்ம்ம்ம்…ஸ்வீட் மெமரீஸ் மாதிரி யார் முகமும் தெளிவா நியாபகத்துல இல்ல கனவுனு விட்டுட்டேன்”
“அப்போ பழைய நியாபகங்கள் தான் கனவு மாதிரி வருதுன்னு சொல்றியா?”
“ஆமா” முடிவாக சொன்னாள் மீரா.
ப்ரியா, தேவ் வீடு வர இரவு சாப்பாட்டை ஒன்றாக முடித்துக் கொண்டு சிறிது நேரம் ஒன்றாக பேசிக் கொண்டிருந்தவர்கள் அறைக்கு வர அங்கே மீராவின் போன் மின்னி மின்னி ஒளிர்ந்தது. அதை பார்த்த சௌமியா “ஹேய் அண்ணாத்தான்டி”
“எடுத்து நா தூங்கிட்டேன்னு சொல்லு” மீரா சொன்ன படியே சௌமியா சொல்ல சில பல கேள்விகளின் பின்னே போனை வைத்தான் சைதன்யன்.
“ஹப்பா முடியலடி இதுக்கு பேசாம நீயே அவர்கிட்ட பேசி இருக்கலாம்” அலுத்துக்கொள்ள
“நா பேசி இருந்தா விடியும்வர பேசிகிட்டு இருப்பாரு பரவாலையா?” சிரிக்காமல் சொன்னாள் இவள். 
“அந்த லூசு சந்துரு என்னடானா பேசிகிட்டு இருக்கும் போதே தூங்கிடுறான்” என்று அந்த நேரத்திலையும் அவனை திட்டியவள் சரி வா எங்க வேலைய பார்க்கலாம். சரி சொல்லு உனக்கு என்ன டவுட்டு” சௌமியா ஒரு நோட்டையும் பேனாவும் எடுத்துக் கொண்டு கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.
 “1 :- சைதன்யன் ஏன் தனஞ்சயனா மாறனும்?
2  :-  எனக்கு மறந்திருச்சு பட் ஏன் என் கிட்ட மறைக்கணும்?
3 :- இந்த விஷயம் யார் யாருக்கெல்லாம் தெரியும்?
4 :- நா சையுவ லவ் பண்ணுறது வேத் அத்தானுக்கு தெரியும் இருந்தும் தனஞ்சயன் எனும் சைதன்யனுடன் என் கல்யாணம் பிக்ஸ் பண்ணி இருக்காரு இந்த விஷயம் அவருக்கு தெரியுமா? தெரியாதா?
5:- ஊட்டில என்ன நடந்தது? நா அங்க போனத வேத் அத்தான் அவருக்காக தான் போனேனு ஏன் சொல்லணும்?
தட்ஸ் ஆல்” மீரா சொல்லி முடிக்க அவள் கூறியவற்றை எழுதி முடித்தவள்
“ ஓகே நம்பர் வன் பேர் மாற்றம். அண்ணா ஆபீஸ்ல எக்கவுண்ட் செக்சன்ல சேர்ந்திருக்காரு. அதுவும் வேற பேர்ல. வருங்கால M.D வேற, ஆஃபீஸ்ல ஏதாச்சும் தில்லுமுல்லு நடக்குதான்னு பாக்க நடிக்கிறார். சௌமியா சொல்ல
“ம்ம்ம் இருக்கலாம். வேற காரணம் பொருந்தல்ல.நெக்ஸ்ட்”
“நம்பர் டூ ஒரு வேல நீ நோ சொல்லி இருந்தா? உன்ன திரும்பவும் காதலிக்க வைக்க” மீரா சௌமியாவை நன்றாக முறைக்க “1st  ரீசன் தான்மா உனக்கு தான் மறந்திருச்சில்ல. நம்பர் த்ரீ கண்டிப்பா சரவணன் சார், லட்சுமி அம்மா, நேசமணி அங்கிள் அண்ட் சந்துருக்கு தெரியும்.
“அப்போ வேத் அத்தானுக்கு தெரியாதா?” குழப்பமான குரலில் கேட்டாள் மீரா.
“நம்பர் போவே அதான்மா…  கண்டிப்பா உன் அத்தானுக்கு தெரிஞ்சிருக்கு அதான் கல்யாணத்த பிக்ஸ் பண்ணிட்டார். நாலாவதும் ஓகே. அஞ்சாவது தான் இடிக்குது அத தெரிஞ்சது ரெண்டு பேர் ஒன்னு நீ மத்தது அண்ணாக்கு”
 “அவர் கிட்ட கேக்க முடியாது” மீரா கூறியவள்,  “அங்க என்ன நடந்தது என்று எல்லாம் தெரியாட்டிலும் வேத் அத்தானுக்கு ஓரளவு தெரிஞ்சிருக்கும். கண்டிப்பா நா சொல்லி இருப்பேன். அப்படி இருந்தும் மறைக்கிறாருனா நா தெரிஞ்சிக்க கூடாதுனு நினைக்கிறார்” தன்னுடைய அத்தானை நன்கு அறிந்திருந்தவளாக கூறினாள்.
“இப்போ என்ன பண்ண போற” யோசனையாகவே கேட்டாள் சௌமியா.
“அவர் தனஞ்சயனா இருக்குறது சரவணன் சருக்காக. எப்போ சொல்லணும்னு தோணுதோ சொல்லட்டும்.” கொஞ்சம் வருத்தமாகவே வந்தது அவள் குரல்.
மீராவின் கைமேல் கை வைத்து சௌமியா “சந்துரு கூட என் கிட்ட சொல்லல. உன் வேத் அத்தானும் சொல்லாம இருக்கார் என்றால் விஷயம் பெருசுனு அர்த்தம். சரி விடு பாத்துக்கலாம்”
தன்னை நம்பாமல் பொய் மேல் பொய் சொல்லும் சந்துருவின் மேல் கோவம் கோவமாய் வந்தாலும் அவனிடம் மீராவுக்கு தனஞ்சயனாக சைதன்யன் நடிப்பது தெரியும் என்று கூற போவதில்லை என முடிவெடுத்தாள்.
அப்பொழுது நியாபகம் வந்தவளாக சௌமியா “கல்யாண அழைப்பிதழை பார்க்கலயா? சந்துரு அழைப்பிதழோடு வீட்டுக்கு வரேன்னு சொன்னான் நான் தான் யாரும் வர மாட்டாங்க நா மட்டும் தான் வரேன் அழைப்பிதழ் வேணாம்னு சொல்லிட்டேன். அப்பாக்கு உடம்பு முடியலன்னு தெரிஞ்சே போன் பண்ணி கேட்டிருப்பான். பிராடு” சௌமியா சந்த்ருவை திட்ட ஆரம்பிக்க,
“மாதிரி வடிவமைப்பு இதழை அத்து காட்டினா பெயர் எல்லாம் அச்சிட்ட பின் பாக்கணும்னு இருந்தேன் மறந்துட்டேன். பூஜையறையில் இருக்கு நா போய் எடுத்துட்டு வரேன்” மீரா அறையை விட்டு வெளியேறினாள் 
அழைப்பிதழை பார்த்தவர்களுக்கு பெரிதாக அதிர்ச்சி இருக்கவில்லை அதில் சரவணன் சாரின் பரம்பரை எல்லா பெயர்களுடனும் சைதன்யனின் பெயர் இருந்தது.
“என்னடி இது ஆபீஸ்ல இருக்கிறவங்களுக்கு அழைப்பிதழ் கொடுத்திருப்பாங்களே தனஞ்சயனா இருக்கணும்னா இது எப்படி சாத்தியமாகும். எல்லாருக்கும் தெரிஞ்சிடுமே அப்போ உன்கிட்ட மட்டும் தான் மறைக்கிறாங்களா? எல்லாமே குழப்பமாக இருக்கே மொத சந்தேகமே ஆட்டம் காணுதே……. அப்படி என்னத்தடி மறந்த? இவனுங்க மறச்சி தொலைக்குறானுங்க. இந்த சந்துரு தான்டி பொய் மேல பொய் சொல்லுறான் அண்ணா உயிர அவரே காப்பாத்தினாராமே! என்னை என்ன………” பல்லை கடித்தவாறே “அவன் சொல்றதெல்லாம் நம்புறேன் பாரு. ஒருநாள் இல்ல ஒருநாள் அவன் கைல மாட்டுவான்ல அப்போ இருக்கு அவனுக்கு” சௌமியா கோவமாக பொரிந்தாள்.
“எனக்கு ஏன் பழைய நியாபகங்கள் வரமாட்டேங்குது” கண்கலங்க மீரா கேட்க
அவளை அணைத்து “கவல படாம கல்யாணத்துக்கு ரெடியாகு எல்லாம் சரியாகும் இப்போ தூங்கலாமா?” சிரித்தவாறே மியா கேட்க கண்ணீருடன் சரியென தலையாட்டினாள் மீரா.
ப்ரியா வினுவை அணைத்தவாறு தூங்கி இருக்க தேவோ தூக்கம் வராது மீரா மயங்கி விழுந்த காரணம் புரியாமல் அவள் சிந்தனையிலேயே இருந்தான்.
“என்ன தேவ் தூக்கம் வரலையா? கல்யாண வேலைய நெனச்சி கலங்குறீங்களா? மீராவ  நெனச்சா?” என்றவாறே அவன் நெஞ்சில் சாய ப்ரியாவை அணைத்துக் கொண்டவன் சிறிதும் நினைக்கவில்லை மீரா தன்னிடம் அம்பிகாவை சந்தித்ததை மறைப்பாள் என்று.
ஹாஸ்பிடலிலிருந்து வீடுவரை மீராவை விட்டு அவளுடன் சிறிது நேரம் பேசியவாறு இருந்து விட்டு வந்த சைதன்யனின் சிந்தனையெல்லாம் மீராவே நிறைந்து இருந்தாள். சௌமியா மீரா தூங்கி விட்டாள் என்று கூறியதும் அவள் சாப்பிட்டாளா? டேப்லட் போட்டாளா? என விவரமாக கேட்டுத் தெறிந்தவன் தேவுக்கும் அழைத்து விசாரித்த பின்னே போனை அணைத்தான். அவளுடன் பேசாது தூக்கம் வராது இருந்தவன் எப்போ தூங்கினான் அவனுக்கே தெரியவில்லை.
மீரா தூக்கம் வராது தவிக்க சௌமியா தூங்கிக்கொண்டிருந்தாள். மடிக்கணணியை திறந்தவள் இணையத்தளத்தில் அம்னீசியா பற்றிய தகவல்களை படிக்கலானாள். சில மணிநேரம் எடுத்துக்கொண்டவள் ஒரு முடிவுடன் தூங்கச்சென்றாள் 
“எங்க கிளம்பிட்டீங்க ரெண்டு பேரும். மீரா உன்ன ஆபீஸ் போக வேணான்னு சொன்னேனே. கல்யாணம் முடியும் வர எங்கயும் போகவேணாம் சொன்ன பேச்சு கேக்க மாட்டியா” வெளியே கிளம்பிய சௌமியா மற்றும் மீராவை பார்த்து சரஸ்வதி அம்மா கொஞ்சம் அதிகாரமாகவும் கொஞ்சம் அதட்டலாகவும் கூற சௌமியாவுக்கு வேர்த்து விறுவிறுத்தது.
காலையில் எழுந்த சௌமியா வீட்டுக்கு போய்ட்டு ஆபீஸ் போகணும்னு சொல்ல “இன்னைக்கு நீ லீவு ஏற்கனவே ஆபீஸ்க்கு போன் பண்ணி சொல்லியாச்சு” மீரா கூலாக “குளிச்சிட்டு இந்த ட்ரெஸ்ஸ போட்டுக்க ஒரு இடத்துக்கு போகணும்” உத்தரவு போட்டாள்   
மீராவை ஆச்சரியமாக பார்த்த சௌமியா “எங்கடி போக போறோம்?
“சைக்கஸ்ட்ரிக்ட்க மீட் பண்ண”
 “பக்கத்து ரூமுக்கு போக எதுக்கு இந்த அலும்பு” மீராவை முறைத்தாள் மியா.
“பி சீரியஸ் கெட் ரெடி” அலட்டிக்கொள்ளாமல் கண்ணாடி முன் நின்று தலைவார ஆரம்பித்தாள்.
“கேள்வி கேட்டா பதில் சொல்லணும் இங்கிலீஸ்ல பேசி வாயடைக்க கூடாது” சௌமியா கண்ணாடியிலுள்ள மீராவின் விம்பத்துக்கு பழிப்பு காட்டியவாறே குளியலறைக்குள் புகுந்தாள்.
அவள் வெளியே வரும் போது மீரா டீ சாப்பிட்டவாறே ஏதோ பைல்களை புரட்டிக் கொண்டிருக்க அவள் அருகில் வந்தமர்ந்த சௌமியா தனக்கான டீயை பருகியவாறு “அப்படி என்னத்த பாக்குறா?” என்று எட்டிப்பார்க்க மீராவின் பழைய புதிய மருத்துவ அறிக்கைகள் “இத வச்சி என்ன செய்ய போற?”
 “ம்ம் டாக்டர் கிட்ட காட்ட போறேன்”
“உன் அத்தான் தான் ஏற்கனவே பாத்திருப்பாரே செகண்ட் ஒபினியனா?”
“அப்படியும் சொல்லலாம் வீட்டுக்கு தெரியாம போறோம் வா சாப்டுட்டு கிளம்பலாம்” தோழிக்கு எந்த பதிலையும் மீரா கூறவில்லை. 
அப்படி சாப்டுட்டு கிளம்பியவர்களை தான் சரஸ்வதி அம்மா நிக்கவச்சி கேள்வி கேட்டுகிட்டு இருந்தாங்க “என்ன மீரா இந்த சௌமியா பொண்ணு இந்த முழி முழிக்குறா?”
“பியூட்டி பார்லர் போறோம் அத்த. உங்க ஹை பீச் வாய்ஸ் கேட்டு பயந்துட்டா போல. எப்படி அத்த இப்படி வாய்ஸ்லயே பயமுறுத்துறீங்க? வீட்ல தனியா இருக்கும் போது பழைய சினமா ஓவரா பாப்பீங்களோ?” அவரை கொஞ்சி தாஜா பண்ணி முத்தம் வைத்து சௌமியாவை இழுத்துக் கொண்டு வெளியே வர
“தேவ் கிட்ட சொல்லி இருந்தா அவன் ஹாஸ்பிடல் போகும் போது விட்டுட்டு போய் இருப்பானே மா” ரவிக்குமார் மகளை அன்பாக பார்த்தார்.
“திடீர் பிளான் பா இந்த சௌமிய தான் நாலஞ்சு நாள்ல கல்யாணம் பண்ண போற பாலர் போலாம் வானு ஆபீஸ்க்கு லீவ் போட்டுட்டா”
“அடிப்பாவி ஊமை தான் ஊரையே கெடும்கும்னு சொல்வாங்க. இன்னைக்கு கண்ணாலேயே பாத்துட்டேன். அமுல் பேபி மாதிரி பேஷ வச்சிக்கிட்டு இந்த புளுகு புளுகுறா. இந்த அங்கிள் ஆர்மில அப்பம் சுட்டாரா? இப்படி சிரிச்சிகிட்டே இவ சொல்றத நம்புறாரு” நீ எவ்வளவு பேசுவ,  சௌமி வெஸ்ட்டு டி மீரா ஒரே பேச்சு ஒரே வீச்சு” மீராவின் மறுமுகத்தை பார்த்து அசந்து நின்றாள்.
“என்னடி வாய பொளந்துக்கிட்டு நிக்குற சீக்கிரம் வா டைம் ஆச்சு. ரொம்ப நாளைக்கு அப்பொறம் என் ஸ்கூட்டியை வெளிய எடுக்குறேன்”
“என்னது ரொம்ப நாளா எடுக்கலயா?   சரியா ஓட்டுவியா? இல்ல நேராய் போய் ஹாஸ்பிடல்ல சேர்ந்துடனுமா?   இல்ல சுவர்க்க வாசல் தானா?” சௌமியா நெஞ்சில் கை வைத்தவாறே கிண்டலடிக்க
“ஹய்ய இதோடா ஏறு டி உனக்கு சுவாரகத்துக்கு போக போறான்னு கேரண்டி இருக்கா? அவ்வளவு புண்ணியம் சேர்த்து வச்சிருக்கியா? நீ பேசுற பேச்சுக்கே உன்ன நரகத்துல கூட இடம் இல்லனு சொல்லுவாங்க”  பதிலுக்கு அவளை வாரினாள்
 “இன்னைக்கு ரொம்ப ஓவரா பேசுறாளே அமுல் பேபி” என பேச்சை மாற்றவென சௌமியா “ஆமா தனுண்ணா போன் பண்ணலயா?”
“பண்ணாரே உன் கூட வெளிய போறேன்னு சொல்லிட்டேன். அவரும் த்ரூ அண்ணாவும் வரதா சொன்னாரு” 
“இவ என்ன பண்ண பிளான் பண்ணி இருக்கா?” என குழம்பியவாறே சௌமியா “என்னடி சொல்லுற நாங்க டாக்டர்கிட்ட போறேம்னு சொன்ன”
“ஆமா சொன்னேன்”
“இப்போ அவங்களையும் வர சொல்லி இருக்க”
“நாங்க எங்க போறோம்னு நா சொல்லவே இல்லையே!”
“போன் பண்ணுவாங்களே!”
“என் போன மறந்து வீட்டிலேயே வச்சிட்டு வந்துட்டேன். உன் போன்ல சார்ஜ் இல்ல”
“என்னடி என்னென்னமோ சொல்லுற”
“உன் மொபைல நீ குளிக்கும் போதே சுவிட்ச் ஆப் பண்ணிட்டேன் திரும்பவும் ஆன் பண்ணலயே” மீரா பாத்திருக்கும் வேலைகளை கண்டு அவளின் முதுகில் ரெண்டு அடி போட்டவாறே “ஹேய் நீ பக்கா கிரிமினல் டி” என சிரிக்க தோழிகள் இருவரும் பேசி சிரித்தவாறே அவர்கள் வந்து சேர வேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்தனர்.
அது நகரத்திலிருந்து ஒதுக்குப்புறமாக அமைந்திருந்த ஒரு பழைய வீடு. “யார் வீடு டி இது டாக்டர பாக்க இங்க வந்திருக்க”
“வா சொல்லுறேன்” அழைப்பு மணியை அழுத்தி காத்திருந்தவர்களை ஒரு வயதான அம்மா வந்து கதவை திறக்க அவரின் பழைய கால ஹேர் ஸ்டைலை கண்டு புருவம் உயர்த்தினாள் சௌமியா.
அப்பெண்மணி இவர்களை உள்ளே அழைத்து செல்ல “என்னடி இது பூத் பங்களா மாதிரி இருக்கு”  சௌமியா பயந்தவாறே கண்ணை உருட்ட
“இங்க உக்காருங்க டாக்டர் வருவாரு” என்றவாறே அப்பெண்மணி அகல அவரை அந்த கால பேய் படங்களில் வரும் பேய் போல் கற்பனை பண்ணியவள் “ஐயோ அம்மா” என கத்த
“என்னடி ஆச்சு” மீரா அவளை  உலுக்கினாள்.
“ஹிஹிஹி அது வந்து……..அது வந்து……. அதோ வந்துட்டார். என டாக்டர் வருவதை கை காட்ட மீரா எழுந்து வணக்கம் வைத்தாள். பின்ன தான் கற்பனை பண்ணியதை சொன்னால் தோழி பேய் ஓட்டு ஓட்டுவாளே.
உட்காருமாறு கை காட்டியவர் கிட்டத்தட எழுபத்தி ஐந்து வயதுக்கும் மேற்பட்ட ப்ரொபெஸர் க்ரிஷ்ணமூர்த்தி.
மனநல,நரம்பியல்,மூளையதிர்ச்சி[concussion ], அம்னீஷியா, இன்னும் என்னவெல்லாம் இருக்கோ எல்லாவற்றிலும் கற்று தேர்ச்சி பெற்றவர். {அதாங்க கரச்சி குடிச்சிட்டாரு}
மீராவின் மருத்துவ அறிக்கையை திரும்பத்திரும்ப பார்த்தவர். “நடந்ததெல்லாம் மறக்குறது ஒரு வரம் மா” என்று சிரிக்க, இந்த வயசுலயும் பல்லு விழாம இருக்குனு தான் சௌமியாவின் ஆராய்ச்சியாக இருந்தது.
 “உன்னோட ரிப்போர்ட்ஸ் எல்லாம் ஓகே யார் உன்ன பாக்குற டாக்டர்”
“டாக்டர் தேவேந்திரன்”
“ம்ம் நீ சொல்லுறத வச்சி பார்த்தா சைதன்யன பார்த்த பிற்பாடுதான் கனவு வர ஆரம்பிச்சிருச்சு எம் ஐ ரைட்”
“ரைட்டு ரைட்டு” சௌமியா ராகமாக இழுக்க,
அவளை கிள்ளிய மீரா பவ்வியமாக “ஆமா சார்” என்றாள்.
“உனக்கு என்ன நடந்ததுன்னு நா சரியா தெரிஞ்சிக்க ஹிப்னோடிசம் பண்ணனும் உன் ரிப்போர்ட் எல்லாம் ஓகே இன்னைக்கே இப்ப வேணாலும் பண்ணலாம் டாக்டர் தேவ் ஏன் பண்ணலன்னு புரியல பண்ணி இருந்தா நியாபகங்கள் எப்போவே வந்திருக்கும்.
துணுக்குற்றாள் மீரா “அப்போ வேத் அத்தான் எனக்கு பழைய நியாபகங்கள் வராம இருக்கணும் என்று நினைக்கிறாரா?”
மீரா அறியாதது “சையு” அவளை தேடி வராததால் ஒருவேளை அவன் மீராவின் காதலை அன்று ஏற்கவில்லையோ! பழைய நியாபகங்கள் மீராவுக்கு வந்தால் மீண்டும் அவனை தேடி போய் விடுவாளோ! ஒரு வேல அவன் வேறொரு பெண்ணை காதலிப்பதாக இருந்தால்? ஏன் கல்யாணம் கூட ஆகி இருந்தால்? என்ற தேவின் அச்சம் தான் முழுமையான வைத்தியத்துக்கு தடையாக இருந்தது.
சௌமியாவோ இவர்கள் பேசுவதை புரியாதவளாக அமர்ந்திருந்தாள்.
அங்கு சைதன்யன் மீராவை போனில் அழைத்து அழைத்து பார்த்தவன் அது எடுக்கப்படாமல் போகவே, சந்துருவோடு மீராவின் வீட்டுக்கு வந்துவிட்டான் 
“வாங்க மாப்புள உள்ள வாங்க நீங்களும் வாங்க தம்பி” ரவிக்குமார் உள்ளே அழைக்க
அவரின் மீசையை கண்டு “இன்னும் மில்ட்டரிலேயே இருப்பதாக நினைப்பு” என சைதன்யனின் காதை கடிக்க
அவரின் முன் அவனை அடிக்க முடியாமல் முறைத்தவாறே “ஸ்ரீ……… போன் எடுக்கல”
 “போன் எடுக்காததற்கு வீடு வரை வந்திருக்குறாரே” என்று ஆச்சரியமாக “அவ சௌமியா கூட பாலர் போய் இருக்கா மாப்புள” அவருக்கு தெரியாதே இவங்க ஒன்னா சுத்த பிளான் பண்ணது.
 “இந்த எகோமியா வேற போன ஆப் பண்ணி வச்சிருக்கா” சந்துரு கடுப்பாய் முணுமுணுக்க 
  “அப்போ நாங்க வரோம் மாமா”
“இருங்க மாப்புள ஏதாச்சும் சாப்டுட்டு போங்க” அவர் கூறும் போதே சரஸ்வதி அம்மா வினுவை தூக்கிக் கொண்டு போட்டிக் பக்கமிருந்து வர
அவள் கையில் மீராவின் போன். அதை பார்த்த சந்துரு “லிட்டில் பாஸ் சிஸ்டருக்கு அம்னீசியா மட்டுமில்லடா அடிக்கடி மறதியும் இருக்கு போல” அவன் சாதாரணமாக சொல்ல ரவிகுமாரினதும் சரஸ்வதி அம்மாவினதும் முகம் வேதனையை தத்தெடுத்தது. 
அவன் தலையில் கொட்டியவன் “உன் மியா என் மீராவ என்ன சொல்லி டென்ஷன் பண்ணி கூட்டிட்டு போனாலோ” என மீண்டும் கொட்ட வினு கைதட்டி சிரிக்க அவளை தூக்கி தட்டாமாலை சுற்றி “சந்துரு அங்கிள்ல இன்னும் ரெண்டு போடலாமா” என அவனை விரட்ட
“ஐயோ யாராச்சும் என்ன காப்பாத்துங்க” என்று சந்துரு ஓட ரவிக்குமாரின் முகத்தில் புன்னகை அரும்ப சரஸ்வதியின் முகத்தில் நிம்மதி.
“இப்போ நீங்க ஆழ்ந்த தூக்கத்துக்கு போக போறீங்க”
“தூங்கத்தான் இங்க வந்தாளா” சௌமியா குறுக்கிட
“பேசாம இருக்க முடியும்னா இரு இல்லாட்டி வெளிய இரு” ப்ரொபெஸர் கிருஷ்ணமூர்த்தி கண்ணாடியை சரிசெய்தவாரே கூற கப்சிப் என மௌனமானாள் சௌமியா.
“சொல்லுங்க இப்போ எங்க இருக்கீங்க”
“காலேஜ் வாசலில் உள்ள போக போறேன்” மீரா தூக்கத்தில் கூறுவதாக சௌமியா நினைக்க
“ம்ம் சொல்லுங்க உள்ள போனீங்களா?”
” ம்ம் நடந்துக்கிட்டே இருக்கேன் அங்க….அங்க அது சையு என் சையுவே தான் ஐ….என்னதான் கைகாட்டி கூப்பிட்டாரு. நா வே…….கமா  ஓடி போய்ட்டேன்.
“ஏய் பாப்லிமாஸ் உன் பேர் என்ன”
யார்டா இந்த மங்கூஸ் மண்டையன் மீரா கண்ணை உருட்டி அவனை முறைத்து விட்டு சைதன்யனை பார்த்தவாறே “ஸ்ரீ” என்று கூற
 “ஸ்ரீராமா? சாய்ராமா?” நவீன் பக்கத்தில் இருந்த கவிதாக்கு ஹைப்பை கொடுக்க
“டேய் ஸ்ரீகு ஸ்ரீராம் ஓகே சாய்ராம் எப்படிடா லூசு லூசு” மனதுக்குள் அர்ச்சித்தவாறே “மீராஸ்ரீ” என்று சைதன்யனை பார்த்தவாறே சொன்னாள்.
சரி உனக்கு பாட தெரியுமா?? ஆட தெரியுமா??” நவீன் கேட்க
மீரா மனதுக்குள் “நவீனா உன் பேர் வீண் வீணாப்போனவனே.
“மினி பூசணிக்கா மாதிரி இருக்கா இவ ஆடினா பூமி தாங்குமா??வொய்ஸ் வேற கர கரனு துரு புடிச்ச தகரம் மாதிரி இருக்கு” கவிதா பக்கத்தில் இருந்த ரேஷ்மா குரல் கொடுக்க
 “குண்டு பூசணிக்கா மாதிரி இருந்துகிட்டு என்ன சொல்லுறியா பேர பாரு ரேஷ்மானவாம் ரேஷன் அரிசி வாங்க ரேஸ் ஓட போற. என் வாய்ஸ் துரு புடிச்ச தகரம் மாதிரி இருக்கா? உனக்கு தான்டி காக்கா வாய்ஸ். சைதன்யன் பார்த்துக் கொண்டிருப்பதால் கண்கள் கலங்க
 “பாக்க பச்சை புள்ள மாதிரி இருக்கா இவளைப்போய் இப்படி சொல்லிட்டியே ரேஷு’ எப்பொழுதும் ரேஷ்மாவின் காலை வாரும் குணால் சத்தமாக சொல்ல
“நா பச்சை புள்ளையா வேணா விட்டுடு அழுத்துடுவேன்” அவர்கள் சொல்லும் எல்லாவற்றுக்கும் மனதில் பதில் பேசினாள் மீரா.
  “நீ சொல்லுடா மச்சான் இந்த குட்டிக்கு என்ன டாஸ்க் கொடுக்கலாம்” நவீன் சைதன்யனை ஏறிட அவனை கண்கள் விரித்து பார்த்தவள் என்ன சொல்ல போறானோ என உள்ளுக்குள் தவிக்க
“கியூட்டா இருக்கா பேசாம உனக்கு புடிச்ச யாருக்காச்சும் ஐ லவ் யு சொல்லிட்டு போய்கிட்டே இரு க்யூட்டிப்பை”
“ஐ………சையுவே சொல்லிட்டாரு” பொறுமையா தனது பையிலிருந்து சாக்லெட்டை எடுத்து சையுக்கு கொடுத்துட்டு ‘ஐ லவ் யு சோ மச்’ என்று சிரித்தவாறே தனது வகுப்பை தேடி நடக்க ஆரம்பிச்சிட்டேன்.
மீரா அன்று நடந்தவற்றை சொல்லிக்கொண்டிருந்தாள்.

Advertisement