Advertisement

அத்தியாயம் 10
சைதன்யன் முன்னாடி தீரமுகுந்தன் கால் மேல் கால் போட்டு அமரவும் “கெத்தாகவே சுத்திகிட்டு இருக்கான் அஃபிடரோல் ஒரு சிகியூரிட்டி இன்ச்சார்ஜ்” என அலட்சிய பார்வை பார்த்தான்.
“ஹலோ சைதன்யன்” என அவனுக்கு ஷாக் கொடுத்தான் தீரமுகுந்தன்.
எல்லா இடத்திலும் தனது “ஐம் வாட்சிங் யு” சிஸ்டர்த்தை அமுல் படுத்த தீரமுகுந்தன் அவனுடைய உண்மையான அடையாளத்தை மறைத்து “சிகியூரிட்டி இன்ச்சார்ஜ்” என்ற முக மூடியுடன் அவனே நேரில் செல்வான். “எஸ்.எஸ்.குரூப்புக்கு வந்த வேலை முடிஞ்சது நடையை கட்டணும்” என்றிருந்தவனுக்கு சைதன்யனின் தனஞ்சயன் எனும் முகம் எதுக்கு என தெரியும்வரை பொறுமையாக இருந்தவன் அவர்களின் வீட்டில் பொருத்தப்பட்ட cctv  மூலம் உண்மையை கண்டு பிடித்து விட்டான்.
ஒரு நிம்மதியுடன் சைதன்யன் முன் வந்தமர அவனுடைய அலட்சிய பார்வையை புறம் தள்ளியவனாக பென்ட்ரைவை எடுத்து மேசையின் மேல் வைக்க ஏற்கனவே ஷாக் இல் இருந்த சைதன்யன் “இது என்ன?” என மீண்டும் தீரனை கேள்வியாக ஏறிட்டான்.
 “அன்னைக்கு லிப்ட்ல நடந்த சம்பவத்துக்கான சாட்சி” என தீரன் புன்னகைக்க, அதை உடனே கையில் எடுத்த சைதன்யன் தீரனை முறைத்தான்.
 “கூல். மீரா எங்க வண்டியில தான் ஆக்ஸிடென்ட் ஆனா. ரெத்தம் குடுத்து காப்பாத்தி இருக்கோம். சோ அவ எனக்கு ரெத்த சம்பந்தம் மாப்புள! சிஸ்டர நல்லா பாத்துக்க”  வளவள கொழகொழ என்றில்லாமல் பட்டென்று பேசினான்.
தேவ் தீரன்[ஸ்] பத்தி சொல்லி இருந்தாலும் விஷ்வதீரனை அறிந்திருந்தவன் அவன் தம்பியை சிகியூரிட்டி இன்ச்சார்ஜாக கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. அவன் யார் எனும் உண்மையை சொல்லாமலேயே புரிந்தது. தீரமுகுந்தனுடைய புகைபடங்களை சைதன்யன் எங்கும் பார்த்ததில்லை. அவனை பற்றிய செய்திகள் வந்தவண்ணம் தான் இருக்கின்றன. அவனை நன்றியுடன் பார்த்தவன் மனதால் சாலியுட் வைத்தான்.
‘அமர் வர்மா’ என்ற அவனுடைய நேம் டக் இல் பெயர் இருக்கவே “ஹலோ மிஸ்டர் தீரன்” என்று கண் சிமிட்ட “ஹாஹாஹா அப்போ தீரன்{ஸ்} யாரென அறிந்து தான் வச்சிருக்க” என்றான் தீரமுகுந்தன்.
 “ம்ம் ரெண்டு பேருக்குமே தீரன் என்றே கூப்பிட பிடிக்கும் என்பது வர தெரியும் ஐம் யுவர் பேன் தீரன். பட் எங்க கம்பெனில உங்களுக்கு என்ன வேல” தீரனை கூர்மையாக பார்த்தான் சைதன்யன். 
அழகாக புன்னகைத்த தீரன் “மீரா ஆக்ஸிடென்ட் பத்தி உன் கிட்ட சொன்ன தேவ், தீரா{விஷ்வதீரன்} பத்தியும் சொல்லி கூடவே அவர் தம்பியும் இருந்தார் என்ற ஒத்த வரியிலேயே நா தான் தீரன் என்று சொன்னியே கிரேட். ஐம் டுயிங் மை மிஷன்.  நல்லவனா இருந்தா தீரன் வருகை பத்தி கவலை படாதே!” என்றவாறே எழுந்தவன் “ஓகே ஐம் லீவிங் டுடே. வந்த வேல முடிஞ்சிருச்சு” கையை நீட்ட அவன் கையை பிடித்து சைதன்யன் கை குலுக்க “தனஞ்சயனா இருக்குற வர பேஸ்புக் டிவீட்டர்ல இருக்குற உன் போட்டோஸ எடுத்துடு மீரா கண்டுபிடிச்சிட்டா!” என மீண்டும் ஷாக் கொடுத்து விட்டே அகன்றான்.
ஐந்து மணியளவில் பொண்ணு பார்க்க வந்து விடுவார்கள் என்பதால் மூன்று மணிக்கே மீராவை அழைத்து செல்ல வந்து விட்டாள் ப்ரியா
“எதுக்கு அத்து பொண்ணு பாக்குறது எல்லாம் “அவரும் நானும் தான் ஏற்கனவே பார்த்துட்டோமே! இன்னைக்கி கூட பேசினேன் பா!”
ப்ரியாவின் மனமோ ‘இதுக்கே இப்படி வீட்டுக்கு போய் புடவை கட்ட சொன்னா என்ன சொல்வாளோ! “அத்த தான் எல்லாம் முறைபடியாய் நடக்கணும்னு வர சொன்னாங்க பா” ப்ரியாவும் அவளை போலவே பேசி மீராவை வம்பிழுத்தாள்.
சரஸ்வதி என்றதும் அமைதியானவள் “இப்போ எல்லாம் காபி ஷாப்லயே பொண்ணு பாக்குறாங்க இந்த அத்த என்னென்றா இன்னும் பழையபடியே வீட்டுக்கு வர சொல்லி இருக்காங்களே! புடவைய கட்டிகிட்டு அவங்க முன்னாடி காபி கப்புக்களை தூக்கி கிட்டு அப்பப்பப்பா…”  உச்சுக்கொட்டினாள் மீரா.
“அம்மா தாயே கொஞ்சம் வாய மூடிட்டு வா. எதுனாலும் அத்த கிட்டயே கேளு” என்று சிடு சிடுக்க, பிரியா ஏதோ கோவத்தில் இருக்கிறாள் என நினைத்த மீரா அமைதியானாள்.
வீட்டுக்கு வந்தவளை ரவிக்குமார் தலையை தடவ அவர் நெஞ்சில் சாய்ந்தவளை “அவங்க இப்போ வந்துடுவாங்க போய் குளிச்சிட்டு வா சீக்கிரம்” என சரஸ்வதி அம்மா அதட்ட
“அத்த” என அவர் கழுத்தை கட்டிக் கொண்டு முத்தம் வைத்து சமத்தாக அவர் சொல்வதெல்லாம் செய்தாள்.
அப்பாவினதும் அத்தையினதும் முகத்தில் இருந்த அதிகப்படியான சந்தோசமே அவள் வாய் திறவாது எல்லாவற்றையும் செய்தாள். இருந்தாலும் பட்டுப் புடவையை பார்த்து ப்ரியாவிடம் கண்களால் கெஞ்ச அதை கண்டும் காணாதது போல் ப்ரியா முகம் திருப்பிக் கொண்டாள்.
உதடு பிதுக்கி “வினு குட்டி உன் அம்மா ஓவரா பண்ணுறாடி சொல்லி வை” என்றதும் 
வினுவும் “அம்மா ஓவரா மேக் அப் பண்ணாத” என்று அவளுக்கு புரிந்ததை சொல்ல, ப்ரியாவும் மீராவும் வாய் விட்டே சிரித்தனர்.
மீராவை ப்ரியாவே அலங்கரிக்க பட்டுப் பாவாடையை அணிந்து கொண்ட வினுவும் “எனக்கு எனக்கு” மேக் அப் கிட்டிலுள்ள எல்லாவற்றையும் போடச்சொல்லி கொஞ்ச, அவளையும் அலங்கரித்து மீராவிடம் விட்ட ப்ரியா சரஸ்வதி அம்மாவுக்கு உதவ சமயலறைக்கு சென்றாள்.
சரவணன் சாரும் , சைதன்யனும் நேசமணியுடன் ஆபிசிலிருந்து நேராக வர சரவணன் சாருக்கே அதிர்ச்சி தரும் விதமாக சரியாக லட்சுமி அம்மா ஐந்து மணிக்கே பத்து சொந்தக்கார பெண்களை அழைத்துக் கொண்டு வந்து பதினெட்டு விதமான தட்டுக்கோளோடு நடு ஹாலில் அமர்ந்திருந்தார்.
சௌமியாவும் சந்துருவோடு வந்தவள் “என்னடி இது அவங்க பையனுக்கு பொண்ணு பார்க்க வந்த மாதிரி இம்புட்டு தட்டோட வந்திருக்காங்க? பூவ கூட விட்டு வைக்காம வித விதமா கொண்டு வந்திருக்காங்க? தனு அண்ணா சாருக்கு பையன் மாதிரின்னு சந்துரு சொன்னான். அவர் ஜாடை வேற சார் மாதிரி இருக்கு ஒரு வேல அப்படி இருக்குமோ?” ஒருவேளை சரவணன் சாருக்குத்தான் தனஞ்சயன் பிறந்திருப்பானோ என்ற தனது அதிமுக்கிய சந்தேகத்தை சொல்லி மீராவின் காதை கடித்தாள்.
“போடி லூசு மாதிரி பேசிகிட்டு சார பத்தியே தப்ப சொல்றியா?”  மீரா தோழியை திட்ட ஆரம்பித்தாள்.  
சைதன்யன் தான் தனஞ்சயன் என்ற உண்மையை சௌமியா மீராவிடம் உளறி விடக்கூடும் என்று சந்துரு சொல்லாமல் விட்டது எந்தெந்த மாதிரி விளைவுகளை எற்படுத்துமோ?
பொண்ணை அழைத்து வர சொன்ன லட்சுமி மீராவை தன் பக்கத்திலேயே உட்கார வைத்தும் கொண்டார்.
 “லட்சுமி மா” என்றவளை
“அத்தனு சொல்லுமா” என்று பரம்பரை நகையை அணிவிக்க மீராவுக்கே ஒரு மாதிரியாகி விட்டது.
வந்திருந்த பெண்களும் லட்சுமி அம்மா விடம் “பொண்ணு அழகா இருக்கா உனக்கேத்த மருமக தான்” என சிலாகிக்க
அங்கே நடந்த பேச்சுகளோடு சௌமியா சொன்னதும் நியாபகம் வர மீராவை யோசிக்க வைத்தது.
சௌமியாவும் “என்னடா நடக்குது இங்க” என்ற பார்வையிலேயே இருந்ததோடு தோழியிடம் கண்களையே தன் சந்தேகத்தை கூறிக் கொண்டே இருந்தாள்.    
அவனை சந்துரு ஓட்டிக்கொண்டிருக்க “இருடா நல்லவனே உன் கல்யாணத்துல வைக்கிறேன் வேட்டு என கருவிக் கொண்டாலும் முதல் முதலாக மீராவை புடவையில் பார்த்தவனுக்கு அவளை விட்டு எங்கும் கண்ணை திருப்ப முடியவில்லை. அவளுக்கான அலங்காரமும் அவளை தேவதையாக காட்ட சைதன்யன் மீராவை வைத்த கண் வாங்காமல் சைட் அடித்துக்கொண்டிருந்தான்.
ப்ரியாவை அழைத்த தேவ் மீராவை உள்ளே அழைத்து செல்லுமாறு, கூற ப்ரியாவும் சௌமியாவை கண்காலைளையே அழைக்க, அவளும் மீராவுடன் உள்ளே சென்றாள்.
உள்ளே வந்த மீராவிடம் சௌமியா” என்னடி அவங்க பையனுக்கு பொண்ணு பாக்க வந்த மாதிரியே பேசுறாங்க? ஒரு வேல நா சொன்னது தானா? சரவணன் சார் வாலிபத்துல வழுக்கி விழுந்துட்டாரோ?”
மிராவும் “சீ வாய கழுவு” என சொல்லியவாறே அறையை அளந்தவாறே நடக்க
“ஒரு இடத்துல உட்காரு”என அவளை இழுத்து அமர வைத்தவள். “ஒரு வேல அவங்க பையனுக்கு தான் உன்ன பாக்க வந்தங்களோ? அண்ணா வேற அமைதியா இருக்குறத பாத்தா அண்ணா வரும் முன்னாடியே இந்தம்மா வந்ததால வளத்தவங்க பாசம் என்று அவங்க பையனுக்கு உன்ன கல்யாணம் பண்ணட்டும்னு அமைதியா இருக்காரோ?” {நீ தமிழ் சினமா பார்த்து ரொம்ப கெட்டு போய்ட்ட} என மீராவை நன்றாக குழப்ப மீராவின் மனமோ வேகமாக  அடிக்க ஆரம்பித்தது.
நாம மட்டும் போனா போதும் வேணும்னா நேசமணி குடும்பத்தை அழைத்து செல்லலாம் என்று சரவணன் சார் சொல்லி இருந்தும் லட்சுமி அம்மா சொந்தபந்தங்களை அழைத்து வந்து அவர்கள் பேசியவற்றை கேட்டு மீரா குழம்பி இருக்கிறாள் என புரிந்துக்கொண்ட சரவணன் சார் பொண்ணு பாக்கவே இப்படின்னா நிச்சயதார்த்தம்னு ஒரு ஊரையே கூட்டிட்டு வருவான்னு சரியாக லட்சுமி அம்மாவை கணித்தவர்.
“எல்லாரும் இருக்குறதால நிச்சயதார்த்தத்தையும் இப்போவே செய்யலாமே இன்னைக்கு நல்ல நாளும் கூட” தன் கூற்றை தன் மனையாள் மறுத்து பேசிட முன் தேவுக்கு கண்ணை காட்டியவாறே சொல்ல அதை புரிந்து கொண்டவன்
 “ஆமா ஆமா மீரா இப்போ லட்சுமி அம்மா பண்ணத பார்த்து  ஆனந்த அதிர்ச்சில இருக்கா இன்னும் நிச்சயதார்த்தம் என்று பெருசா பண்ணா சந்தோசம் தாங்காம மயங்கி விழுவா” என்றவன் சத்தமாக சிரித்தான். 
மீராவை பார்த்தவுடன் ஆர்வக் கோளாறுல அவள் நிலையை மறந்து தான் நடந்து கொண்டதை நினைத்த லட்சுமி அவளுக்கு ஏதாவது என்ற உடன் அமைதியானார். சைதன்யனோ கனவுலகில் இருக்க இங்கே நடந்தவைகளை சாதாரணமாக பாத்திருந்தான்.
சைதன்யனை அணுகிய வினு “நீங்க தான் மீராவ கல்யாணம் பண்ண போறிங்களா? பாட்டி தேவ் தான் பண்ணனும்  என்று சொல்றாங்க” என்று சரியான சமயத்தில் சொல்ல என்னடா புது குழப்பம் என்ற பார்வைதான் சைதன்யனிடம்.
குட்டிக்குழந்தையை அதட்ட மனமில்லாது அன்னையை வெற்றுப்பார்வை பார்த்த தேவும் சைதன்யன் என்ன நினைப்பானோ என்று அவனையே பார்த்திருந்தான்.  
ரவிக்குமார் உடனே “தேவ்கு ஒரு தம்பி இருந்தா மீராவ அவனுக்கே கட்டிக் கொடுத்துடலாம்னு அக்கா அடிக்கடி சொல்வா அத தான் வினுக்குட்டி புரிஞ்சிகிட்டு இப்படி சொல்றா” என சூழ்நிலையை சமாளித்தவாறே அவளை மடியில் அமர்த்திக்கொண்டார்.
வந்திருந்த பெண்களுக்கும் “மீராக்கு முறைப்பையனான தேவுக்கு வெளில பொண்ணு எடுத்து இருக்காங்க” என்ற கேள்வியை லட்சுமி அம்மாவிடம் கேட்டிருந்தாலும் தேவுக்கும் மீராவுக்கு அதிக வயது வித்தியாசத்தை காரணமாக சொல்லி இருந்தபடியால் வினுவின் கேள்வியை அப்பெண்கள் பெரிதாக எடுக்கவில்லை.
வம்பு வழக்கும் நோக்கத்துடன் ஒரு பெண்மணி “ஜாதகம் எல்லாம் பார்த்தாச்சா? பொண்ணு அம்மா வேற அல்பபாய்சுலா செத்து போய்ட்டாங்களாமே? ” என கேள்வி எழுப்ப சரஸ்வதி அம்மா தான் கலங்கி நின்றார். 
நல்ல உள்ளம் கொண்ட லட்சுமி அம்மா அவர் பேச்சை கண்டுக்காது “அதெல்லாம் பத்து பொருத்தமும் நல்ல பொருந்துது” என பேச்சை முடித்துக்கொண்டார்.
இந்த கலவரத்துல நடந்த ஒரே நல்ல விஷயம் சரஸ்வதி அம்மா ப்ரியாவிடம் சுமூகமாக நடந்துக்கொண்டது.
குழந்தைகளின் மனமோ! வெள்ளை காகிதம் போல் நாம சொல்றத பதிய வச்சிப்பாங்க அதிலயும் பொண்ணா இருந்தா இரண்டரை, மூன்று வயதிலேயே தெளிவா பேசவும் செய்வாங்க.
வினு குட்டியும் அப்படிதான் தேவ்வும் ப்ரியாவும் மருத்துவமனை செல்வதால் அதிக நேரம் சரஸ்வதியுடனும் ரவிகுமாருடனும் மீராவுடனும் இருந்தவள்.சரஸ்வதியின் புலம்பலில் முக்கியமாக தேவ் மீரா திருமணத்தை மனதில் பதிவு செய்து வைத்திருந்தாள். [சரியான டைம்ல போட்டும் கொடுத்துட்டா]
சரஸ்வதி அம்மா மருத்துவமனையில் இருந்து வந்ததிலிருந்து ப்ரியாவை கவனித்துக் கொண்டு தான் இருந்தார். ஹாஸ்பிடலில் வேலை பார்த்துவிட்டு வந்தாலும் அவரை வேலை செய்ய விடாது எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்து கொண்டிருந்தாள். ப்ரியாவிடம் முகம் திருப்பா விட்டாலும் ஓரிரு வார்த்தை பேசினார்.
“லட்சுமி அம்மாவின் பையனுக்கு மீராவ கேக்குறாங்க” என்று தேவ் சொன்னதிலிருந்து சரஸ்வதி அம்மா அடைந்த நிம்மதி அலையில்லாத கடல் மாதிரி.
ப்ரியாவை பற்றி எந்த குறையும் சொல்ல முடியாது பொறுப்பான மனைவியாய், மருமகளாக எல்லாவற்றையும் பார்த்துக்கொள்பவள் தான்.
இதுவே வேறொரு பெண்ணாக இருந்தால் தனிக்குடித்தனம் போய் இருப்பாள். “அவ எங்க போவா இங்க தானே நா இருக்கேன் சம்பளமில்லாத வேலைக்காரியா” என்று பல தடவ மீரா திட்டும் போது சரஸ்வதி அம்மா  சொல்லி இருந்தாலும் சரஸ்வதியை  ப்ரியா திருப்பி ஒரு வார்த்தை பேசியதில்லை.
இதோ இன்று மீராவை அலங்கரிப்பதிலிருந்து வருபவர்களுக்கு சாப்பிட என்ன கொடுக்கலாம் என்பதிலிருந்து எல்லாவற்றையும் தன் பொறுப்பென செய்து கொண்டிருக்கிறாள்.
கல்யாணப்பேச்சு ஆரம்பித்ததிலிருந்து இருவருக்கிடையிலும் சுமுகமான பேச்சு வார்த்தை ஆரம்பமாகி மாமியார் மெச்சும் மருமகளாக இருக்கிறாள்.
வினு தேவ் மீரா திருமணத்தை பற்றி கூற ப்ரியா சிரித்தாலே ஒழிய அதை பெரிதாக எடுக்கவில்லை.
சரஸ்வதி அம்மாவுக்கு தான் ப்ரியாவுக்கு அநீதி இழைத்து விட்டதாக தோன்றியது.
அனைவருக்கும் சாப்பிட எல்லாவற்றையும் பரிமாறி ஒவ்வொருத்தரும் கேட்பவற்றை எடுத்துக் கொடுத்து கொண்டிருந்தவளை அன்பாக பார்த்த சரஸ்வதி அம்மா அவள் சமயலறைக்கு செல்லும் போது கூடவே சென்று கையை பிடித்தவாறே
 “என்ன மன்னிச்சுடு ப்ரியா. மீராகு இப்படி ஆகிருச்சே அவளை தேவுக்கே கட்டி வச்சிட்டா அவள பத்தி கவலை இருக்கதேன்னு  நெனச்சேன். மீராவ நல்லா பத்துப்பேன்னு சகுந்தலாக்கு வாக்கு கொடுத்துட்டேன். இடைல தேவ் உன்ன விரும்பி  மீரா  சண்டை போட்டு இந்த கல்யாணத்த நடத்திட்டா. அவள இன்னொரு வீட்டுக்கு அனுப்பனுமே என்ற பயம் தான் உன்ன என் மனசு ஏத்துக்கல நீ ரொம்ப நல்லவ உன்ன புரிஞ்சிக்காம நிறைய பேசிட்டேன் என்ன மன்னிச்சிக்க”  என மன்னிப்பும் கேட்டு விட
அவர் மனதை புரிந்திருந்தவள் “என்னத்த நீங்க என் அம்மா சொன்னா கேட்டுப்பேனே  நீங்களும் எனக்கு அம்மா தான்” என முடித்துக் கொண்டாள்.
உச்சி குளிர்ந்து அவளை கட்டி அணைத்தவாறு கண்ணீர் சிந்த அங்கே இருந்தால் இமோஷனல் ஆகிவிடுவார் என “வாங்க போலாம் வந்தவங்க எங்கள தேடுவாங்க” என  அழைத்து சென்றாள்.
ஐயர் நிச்சயதார்த்த பத்திரிகை வாசிக்கவென ஆயத்தமாக பெரிய பிரச்சினையாக சைதன்யனின் பெயர் முன் நின்றது.
இன்னாருடைய கொள்ளுப்பேரன் இன்னாருடைய பேரன் இன்னாருடைய மகன் சைதன்யன் என்றே லட்சுமி அம்மா கொடுத்து விட்டிருக்க இதை மீரா கேட்டால் எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு ப்ரியா தான் பயந்து போனாள்.
உள்ளே இருந்து போன் பண்ணியதும் முதலில் ரிங் போய் அடுத்த முறை போன் சுவிட்ச் ஆப் என்று வரவே சௌமியா சொன்னது போல் லட்சுமி அம்மாவின் பையனை தான் பேசி வந்திருக்கிறார்கள் என்று முடிவே பண்ணி இருந்தாள். எல்லாம் அறிந்த தேவ் இதை எப்படி அனுமதித்தான் என்று யோசிக்க மறந்தாள்.
நிச்சய புடவையை கொடுத்து அணிந்து வர சொன்னவளின் முகம் கலை இழந்து காணப்பட்டது. ஜெய் சூழ்நிலை கைதியாக இருக்கிறான் நான் தான் ஏதாவது செய்தாகணும் என்று முடிவெடுத்தவள் வாசலுக்கு வர
பின்னாலயே வந்த சௌமியா அவள் அருகிலேயே அமர்ந்துக் கொண்டு “என்ன செய்ய போகிறாய்” என நூறு தடவ கேட்கலானாள்.
“எல்லார் முன்னாடியும் நா ஜெய்ய லவ் பண்ணுறேன்னு சொல்ல போறேன் லட்சுமி அம்மா பையன கல்யாணம் பண்ண முடியாது”
“குட் நமக்கு தேவையானதை நாம போராடித்தான் பெறணும்னா போராடுவோம்” தோழியின் முடிவுக்கு ஒத்தூதிய மியா “இந்த லூசு சந்துரு வேற அமைதியா இருக்கான் இங்க என்ன நடக்குதுனு நமக்கு அறியத்தரணுமா இல்லையா? அறையில் இருந்து போன் மேல போன் போட்டாலும் எடுக்கல இரு வரேன்” என அக்கூட்டத்தினுள் அவன் எங்கே இருக்கிறான் என பார்க்க அவளையே பார்த்திருந்தவனுக்கு அவனை வெளியே வருமாறு கண்ணாலேயே சைகை செய்து வெளியே செல்ல.
“ஐ நம்ம மியா எதுக்கு வெளியே வர சொல்றா? நாமளும் கல்யாணம் பண்ணிக்கலாமானு கேக்கப்போறாளோ என்னவோ!” ஆனந்தமாக வெளியே சென்றான் சந்துரு.
வெளியே வந்தவர்கள் சரஸ்வதி அம்மாவின் போட்டிக் பக்கம் செல்ல யாருமில்லாத அவ்விடத்தில் அவனை ஒரு  பிடி பிடித்து விட்டாள் சௌமியா “ஹேய் லூசு போன் பண்ணா எடுக்க மாட்டியா? அண்ணா போன் வேற சுவிட்ச் ஆப் ஆகா இருக்கு”
“போன் பண்ணியா” என பார்க்க “சிஸ்டர் போன் பண்ணும் போது என் கைல தான் அவன் போன் இருந்துச்சு நா தான் சுவிட்ச் ஆப் பண்ணேன்” என்று இளித்தவன் சௌமியாவின் முகபாவத்தை கண்டு  “ஆமா உள்ள இருந்துகிட்டு எதுக்கு போன் பண்ணாங்க?  என் போன  சைலன்ட்ல போட்டுட்டேன்” என கைல இருந்த மொபைலாலேயே நெத்தியை தட்டிக் கொண்டான்.
 “உன்ன” என அவன் கழுத்தை பிடித்து மியா இறுக்க, அவளின் கையை பிடித்து இழுத்து விளக்கியவன். “ராட்சசி ராட்சசி பேயே பிசாசே ரெத்த காட்டேரி” என கண்டமேனிக்கு திட்ட ஆரம்பித்தான்
பெரிய பெரிய மூச்சுக்கலை எடுத்தவாறே துப்பட்டாவை இடுப்புப்பக்கம் கட்டியவள் அவன் தலைமுடியை இரண்டு கையாலையும் பிடித்து இழுக்க “ஆஆஆ” என கத்தியவன் அவளிடமிருந்து விலக முயற்சிக்க அவளோ கையை விடவே இல்லை.
வலியால் துடித்தவன் அவளின் இடுப்பை பிடித்து கிள்ள, கையை விட்டவள் அவனை அடிக்க துவங்க அவளை தடுத்துத் தடுத்துப் பார்த்தவன் பொறுமை இழந்து அவளை கட்டியணைத்து முத்தமிட ஆரம்பித்தான். திமிறி அவனிடமிருந்து விலக முயற்சித்தவளை அடக்கி தனது  கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டவனுக்கு இடம் சூழல் வந்த வேலை மறந்து போனது மீராவுக்காக சண்டையிட தொடங்கியவள் அவளை மறந்து அவனுள் மூழ்கி இருந்தாள்.
அப்பக்கமாக போன் பேசுவேன வந்த நேசமணி இவர்களை பார்த்துவிட்டார்.
பெயர் பிரச்சினையை எப்படி சரி செய்வதென்று சரவணன் சார் இருக்க, லட்சுமி அம்மா பரம்பரை பெயர் எல்லாம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என சொல்ல “அது என் பரம்பரை டி நானே அவசியமில்லன்னு சொல்றேன்ல” வார்த்தையை கடித்துத் துப்பினார்.
 “மாமாக்கு நா வாக்கு கொடுத்து இருக்கேங்க” என்றார் லட்சு பரிதாபமாய்.
இவர்களின் நிலையை கண்டு தேவுக்கோ மீராவிடம் உண்மையை சொல்லாம் எனக்கூட ஒருகணம் தோன்ற மறுகணம் மீராவின் ட்ரீட்மென், அவ சந்தோசம் முக்கியமாகபட என்ன பண்ணலாம் என்று மீராவை பார்க்க அவளோ ஏதோ சிந்தனையில் இருப்பதாகவே தோன்றியது.
மீராவை அழைத்து வந்து சில சடங்குகளை செய்ய மீரா நெருப்பின் மேல் இருப்பது போல் தவித்துக் கொண்டிருந்தாள். வாயை திறந்து பேசலாம் என நினைக்க
“மாப்பிள்ளையை வர சொல்லுங்க” என ஐயர் அழைக்க கோவம் தலைக்கேற கழுத்தில் போட்ட மாலையை கழட்டவென மாலையில் வைத்திருந்தாள்.
அவள் பாரம் தாங்காமல் மாலையை சரி செய்ய முயற்சிக்கின்றாள் என எண்ணியவானாக அவள் முன் வந்து நின்ற சைதன்யன் மாலையை சரிசெய்ய, அதிர்ச்சியாக அவனை நிமிர்ந்து பார்த்தவளை கண்சிமிட்டி இவன் புன்னகைக்க எல்லாவற்றையும் மறந்தவளாக அவனுள் தொலைந்து போனாள் மீரா.
சைதன்யனின் குடும்ப முறைப்படி மணமகள் அதற்குப்பின் மணமகன் மாலையிட்டு,நெற்றியில் திலகமிட்டு, அழைத்து வரப்பட்டு இருவரும் முகம் பார்க்குமாறு நிற்கவைக்கப்பட்டு நிச்சயதார்த்த பத்திரிகை வாசிக்கப்படும்.
அவனின் மயக்கும் புன்னகையில் உருகி கரைந்த்துக் கொண்டிருந்தவளுக்கு அங்கே நடப்பவைகள் ஏதோ கனவுலகில் நடப்பது போலவே இருந்தது. வெட்கப்புன்னகை சிந்தியவாறே கோட் சூட் அணிந்து தலையில் வடநாட்டவர் போல் முண்டாசு கட்டி அழகாய் இருந்தவனை கண்ணெடுக்காமல் பார்த்திருந்தாள். சுற்றுப்புற சூழலை கவனிக்கும் நிலையில் அவளில்லை. நிச்யதார்த்த பத்திரிக்கையில் சைதன்யனின் பெயர் வாசிக்கும் பொழுதும் அவன் முகத்தையே பார்த்திருந்தவள் பூர்வஜென்ம பந்தம் கை கூடிவிட்டது என்று  மயக்கத்திலேயே இருந்தாள்.
அவளின் பார்வைக்கு பதில் பார்வை பார்த்திருந்தவனின் நிலையும் அதே போல் இருந்தது. அவளின் சந்தோசமான முகத்தை பார்த்திருந்தவனுக்கு அவளை அள்ளி அணைத்து முத்த மிட துடிக்கும் கைகளை மாலையை பிடித்து ஒரு வித மோனப்புன்னகையுடன் தடுத்துக் கொண்டிருந்தான்.
“மாலை கழண்டு கையேடு வந்துட போகுது தம்பி” என்ற தேவின் குரலுக்கு அசடு வழிந்தவனாக காதுக்கு கீழாக கையை நுழைத்து பின் தலையை கோதி சமாளித்தவன் மீராவை பார்க்க அவளோ இன்னும் மோன நிலையிலிருந்து விடுபடாமல் இருக்க மெதுவாக அவள் பக்கம் சாய்ந்து அவள் முகத்தின் மேல் ஊத அவனின் மூச்சுக்காற்று பட்டு சிலிர்த்து, இமைகளை  பட்டாம்பூச்சி போல் சிமிட்ட அசந்து தான் போனான் சைதன்யன்.
ஒருவாறு நிச்சயதார்த்த மோதிரம் வழங்கப்பட அவள் வெண்பஞ்சு விரலை பிடித்து அவளை பார்த்தவாறே அணிவித்தான் சைதன்யன்.
அவனுக்கான மோதிரம் அவள் கையில் வழங்கப்பட அதை வாங்காது அவனையே பார்த்திருந்தவளை ப்ரியா உலுக்க சுயநினைவுக்கு வந்தவள் அழகாக வெட்கப்பட “இது தான் அழகுல மயங்குறது” ப்ரியா சொல்ல சிரிப்பு சத்தத்துடனே மீரா சைதன்யன் கையில் மோதிரத்தை அணிவித்தாள்.
இருவரையும் அமர்த்தி இன்னும் சில சடங்குகளை செய்ய வந்து சேர்ந்தனர் சந்துருவும் சௌமியாவும்.
நிச்சயதார்த்தம் நல்ல படியாக முடிந்திருந்ததை கண்டு சௌமியா நிம்மதி அடைந்தவளாக மீரா பக்கத்தில் போய் நிக்க “எங்கடி போன” மீராவின் கேள்விக்கு சௌமியா திருதிருனு முழிக்க ஆரம்பித்தாள்.
அவளின் முழியை பார்த்து சைதன்யன் சந்துருவை ஒரு மார்க்கமாக பார்த்தவாறு “டேய் நல்லவனே நிச்சயதார்த்தம் நடக்கும்   போது எங்க போன உன்னயெல்லாம் நம்ப முடியாது சைக்கிள் காப்பிலேயே ட்ரைன ஓட்டிட்டு போய்டுவ” என சிரிக்க அசடுவழிந்தான் சந்துரு.
“எல்லாம் உன்னால் தான்” என்ற பார்வையோடு சந்துருவை முறைத்தாள் சௌமியா.
 “நா என்னடி பண்ணேன் ராட்சசி” என்று முணுமுணுதான் சந்துரு.
“அங்க என்ன பார்வை” என மீராவும்
“இங்க  என்ன முணுமுணுப்பு” என்று சைதன்யனும் ஒரே நேரத்தில் கேட்க
“உன்ன அப்பொறமா கவனிச்சிக்கிறேன்” என்றது சந்துரு மற்றும் சௌமியாவின் பார்வைகள்.
இன்னும் பன்னிரண்டு நாட்களில் திருமணம் என பெரியவர்களால் முடிவுசெய்யப்பட சைதன்யனை கட்டிக் கொண்டு வாழ்த்துக் கூறினான் சந்துரு.
திருமண வேலைகள் தலைக்கு மேல் இருக்கு அதை பண்ணனும் இத பண்ணனும்னு லட்சுமி அம்மாவின் சந்தோசம் சரஸ்வதி அம்மாவை மெய்சிலிர்க்க வைத்ததென்றால், சௌமியாவின் முகமோ யோசனைக்குள்ளானது.
நாளை மறுநாள் நல்ல நாள்  துணிமணியும் நகையும் வாங்க போலாம் என லட்சுமி அம்மா முடிவெடுக்க அங்கே மீராவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி அறியாது மீராவையும் அழைத்து செல்வேன் கறாராக சொல்லி விட்டார்.

Advertisement