அத்தியாயம் – 4
செழியன் தன் முன் வைக்கப்பட்டிருந்த ஃபைல்களை ஒவ்வொன்றாக அக்கு வேறு, ஆணி வேறாக ஆராய்ந்து கொண்டிருந்தான். நேற்று நடைபெற்ற எக்ஸ் MLA ராஜரத்தினத்தின் மகனோடு சேர்த்து, இதுவரை 5 கொலைகள். இதுவரை நடத்தப்பட்ட கொலைகளின் போஸ்ட்மார்ட்டம் அத்தனையும், அவன் டேபிளின் மேல் விரிந்து கிடந்தன. அந்த ரிப்போர்ட் படி, இரண்டு கொலைகள் ஊசி போன்ற ஆயுதத்தால் தாக்கப்பட்டும், மீதி மூன்று கொலைகள் கடித்துக் குதறி, சின்னா பின்னாமாக்கப்பட்டும் இருந்தன.
எதற்காக இந்த தொடர் கொலைகள் என்று ஆராய்ந்தவனுக்கு, இவற்றையெல்லாம் செய்தது ஓரே கும்பலா அல்லது தனி நபரா என்றும் புலப்படவில்லை.
தனக்குள் ஆராய்ந்து, ஒரு முடிவுடன் எழுந்தவன், சில அதிகாரிகளுடன் பேசி, தனக்கென்று ஒரு டீமை வரவழைத்துக் கொண்டான். அதன் படி அவர்கள் அனைவரையும் மீட்டிங் ஹால் வரச்சொல்ல, அனைவரும் வந்ததும், சம்பந்தப்பட்ட கொலைச் சம்பவங்களையும் ஆதாரங்களையும், காணொலி மூலம் விளக்கிக்கொண்டே, தனக்கு ஏற்பட்ட சந்தேகங்களை ஒவ்வொன்றாக பட்டியலிட ஆரம்பித்தான்.
“வெல்கம் ஆல்!” என்ற செழியன், “இப்போ நடைபெற்ற கொலைகள் சம்பந்தமா எனக்கு தோணினதை எல்லாம் நான் வரிசையா சொல்றேன். அதுல ஏதாவது சந்தேகமோ, இல்ல.. உங்களுடய அபிப்பிராயங்களோ இருந்தா, நீங்க என்கிட்ட பகிர்ந்துக்கலாம்.” என்றவன், ஒவ்வொன்றாகப் பட்டியலிட ஆரம்பித்தான்.
“பாய்ன்ட் நம்பர் 1. கொலைகள் இரண்டு விதமா நடத்தப் பட்டிருக்கு..”
-
“இதுவரை, எந்த ஆதாரங்களோ இல்ல தடையங்களோ நமக்கு இம்மி அளவு கூட கிடைக்கல. கொலையாளிகள், தேவைப்பட்ட இடங்கள்ல சிசிடிவி ஜாமர் யூஸ் பண்ணி இருக்காங்க.”
-
“கொலை நடந்தவிதம் பார்க்க, சைக்கோ கொலைகாரன் மாதிரி இருந்தாலும், கண்டிப்பா இது அப்படி இல்ல. ஏன்னா ஒன்னு ஒன்னும் பக்காவா திட்டம் போட்டு, எந்த வித சின்ன க்ளு கூட இல்லாம செஞ்சிருக்காங்க. போலீஸ்காரன் கூட இவ்ளோ துல்லியமா செயல்பட முடியுமா தெரியல.”
-
“ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவனால, இவ்ளோ தெளிவா சிந்திச்சி, செயல்படுறது கஷ்டம்.”
-
“இவங்களால பாதிக்கப்பட்டவங்களா இருக்கலாம்னு பார்த்தாலும், இவங்கள்ள யாருக்கும், ஒருத்தருக்கு ஒருத்தர் சம்மந்தம் இருக்க மாதிரி தெரியல..” எனவும்,