அகரயாழினி மனுஷின் கனவில் வந்து விட, அவளைப் பற்றி வந்திருந்த செய்தித்தாளை படித்துக் கொண்டிருந்தான்.
இங்கே நமசிவாயம் அகரயாழினியை பிடித்து வைத்திருந்தான்.
அவளைப் கண்டுபிடித்த மகிழ்ச்சியில் அவளை தன் வசமாக்கி கொள்ள முயற்சி செய்ய,அவளோ முகத்தை திருப்பிக் கொண்டாள்.
பளாரென்று அறைந்தான் நமசிவாயம்.
“ஓடுகாலி, அப்பன் புத்தி. ஏன் டி என்னை விட்டு ஓடப் பார்த்த இல்ல… எவன் கூட டி போக நினைச்ச…?”சகட்டு மேனிக்கு அறை விழுந்தது யாழினிக்கு.
“நான் யார் கூட ஓடினா உனக்கு என்ன…?அதான் என் அப்பன் வாங்கின காசுக்கு மேல் யூஸ் பண்ணிட்டியே, அப்புறம் என்ன ?”என்று திமிராகவே கேட்டாள் அகரயாழினி.
“யூஸ் பண்ணேனா…?!ஹான் பண்ணேன் தான்,ஆனால் நீ என் பொண்டாட்டி, அதைத் தர வேண்டியது உன் கடமை. அதைத் தான் நீ செஞ்சிருக்க. இனியும் செஞ்சு தான் ஆகணும்” என்று அவள் காதோரம் கிசுகிசுத்தான்.
“நான் உன் பொண்டாட்டி’ன்றதுக்கு என்ன ஆதாரம் இருக்கு? ஹான்…!சொல்லு… !!”எனும் போதே உள்ளே காவல்துறை அதிகாரிகள் நுழைந்தனர்.
கூடவே ஷகீராவின் அண்ணன் ஷாஜித்தும் வந்தான்.
“சார் இவங்க தான் என் சிஸ்டர். ஐ மீன் வளர்ப்பு தங்கை என் சித்தி மகள் அகரயாழினி . அவங்களை அழைச்சுட்டு போக வந்தேன்”என்றான் ஷாஜித்.
“இவர் இந்தப் பொண்ணை நீங்க கடத்திட்டு வந்துட்டதா சொல்றார்,உங்க ஸ்டேட்மெண்ட் என்ன சார்?” என்று இன்ஸ்பெக்டர் கேட்க
நமசிவாயம் அப்படியே தன் முகபாவனைகளை மாற்றியவன்,”என்ன ஷாஜி இது…?அகரா இங்க உன் கிட்ட சொல்லாம வந்துட்டா தான், அதுக்காக நீ இப்படி பண்ணியிருக்க வேண்டாம், என்றவன்
இன்ஸ்பெக்டர் பக்கம் திரும்பி,” சார் இவர் என் மச்சான்,ஐ மீன் என் மனைவி ஷகீராவோட அண்ணன். அகரா ஷகீயை பார்க்க வந்திருக்கா. அஃப்கோர்ஸ் எங்களுக்குள் சின்ன மனஸ்தாபம்,அதனால் ஷாஜி இப்படி பேசுறார்.நாங்க இதை ஷால்வ் பண்ணிக்கிறோம்”என படபடப்பாக சொல்ல
“என்ன சார் இது?” என்று இன்ஸ்பெக்டர் ஷாஜியின் பக்கம் திரும்பவே,”ஆமா சார். ஆனா எங்களுக்குள் எதுவும் சரியாகலை ஸோ நான் என் சிஸ்டரை அழைச்சுட்டுப் போறேன். அதுக்கு ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்”என்றான் விட்டேற்றியாக.
“ஏய் ரொம்ப பண்ணாதடா அண்ணா. இப்போ என்ன? அவளை கூப்பிடத் தானே வந்த. கூட்டிட்டுக் கிளம்பு.” என்று வேகமாய் ஷகீரா அகராவை இழுத்து அவன் முன்பு விட்டவள், நமசிவாயத்தின் அருகில் சென்று நல்ல பிள்ளை போல நின்று கொண்டாள்.
“என்னடி குடும்பமே சேர்ந்து நாடகம் நடத்துறீங்களா?” என்று பல்லைக் கடிக்க, ஷகீரா கண்டுகொள்ளாமல் நின்றாள்.
‘இங்கிருந்து தப்பித்தால் போதுமென்று’ நினைத்து அகரயாழினி ஷாஜித்துடன் கிளம்பி விட்டாள் .
நமச்சிவாயத்தால் எதுவும் செய்ய இயலவில்லை.
‘அகராவை தன் மூன்றாம் மனைவி என்றால் சமுதாயத்தில் கெட்டப்பெயர் வருமே’ என்று அமைதிகாக்க, அந்த அமைதியை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டாள் ஷகீரா.
காவல்துறையின் உதவியோடு ஷாஜித்துடன் கிளம்பிய யாழினி சிறிது தூரம் சென்றதும் ,”அண்ணா!, என்னை ஏதாவது ஆசிரமத்தில் சேர்த்து விடுறிங்களா..?, இந்த ஆள் கண்ணுல படாத மாதிரி வெளியே எங்கேயாவது…”என்று கெஞ்ச மனமிறங்கினான் ஷாஜித்.
“அப்போ நீ நிஜமாகவே நமச்சிவாயத்தை விரும்பி கட்டிக்கலையா?” என்று கேட்க இல்லையென்று தலையாட்டினாள்.
“ஏன் மா கல்யாணம் நடக்குறதுக்கு முன்னாடி எங்க யார் கிட்டயாவது சொல்லி இருந்தா நான் தடுத்திருப்பேனே?!”என்றான் ஆதங்கமாக.
“விற்பனையான பொருள் எப்படிண்ணா பேசும்…? நானும் என் அப்பாவால நமச்சிவாயத்திற்கு விற்கப்பட்டவ தான் “என்றாள். அவள் மனதின் ரணம் வார்த்தையாக வெளி வந்திருந்தது.
“என்னம்மா சொல்ற…?”வருத்தமடைந்தான் ஷாஜித்.
“ம்ம்ம்… என் அப்பா வாங்கின கடனை அடைக்க முடியாமல் என்னை வித்துட்டு போயிட்டார் . இவர் என்னை வப்பாட்டியா வச்சுக்காம கட்டிக்கிறேன்’னு சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. என் வாழ்க்கையில் கல்யாணம்’னு ஒரு விஷயம் நடக்குமானே தெரியாத எனக்கு இது பெருசு இல்லையா, ஒத்துக்கிட்டேன். வீட்டிலேயே தாலி கட்டி அந்த நிமிஷமே எல்லாம் நடக்க ஆசைப்பட்டாரு. நானும் மறுப்பு சொல்லலை அதுக்குள்ள ஷகீரா அக்காவும், அமுதா அக்காவும் வந்துட்டாங்க, அப்புறம் தான் தெரியும் நான் அவருக்கு மூணாவது பொண்டாட்டினு… ஃபர்ஸ்ட் நைட் ஏற்பாடு எல்லாம் அவங்களையே பண்ண சொன்னார். அன்னைக்கு ஷகீரா அக்கா தான் காப்பாத்துனாங்க… “என்றாள்.
“சரி விடு, அவன் கிட்ட இருந்து தப்பிச்சுட்ட இல்ல.,நான் உன்னை ஆசிரமத்தில் சேர்த்து விடலை, ஆனா அதுக்கு பதிலா எனக்கு தெரிஞ்ச ஒருத்தங்களுக்கு வேலை செய்ய போ… பயப்படாத அந்த அம்மாவுக்கு எழுபது வயசு இருக்கும், அவங்களை பார்த்துக்கனும் எல்லா வசதிகளும் செஞ்சு தருவாங்க. எக்காரணம் கொண்டும் அங்க இருந்து இங்க வரக் கூடாது” என்றான்.
“கண்டிப்பா வர மாட்டேன் ண்ணா” என்றாள் சந்தோஷமாக.
ஷாஜித் யாரிடமோ ஃபோனில் பேசினான். மகிழ்ச்சியோடு யாழினியிடம்,’ வேலை கிடைத்து விட்டது ‘என்றான்.
அவள் மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. டமால் என்ற சத்தம் மட்டும் கேட்டது தான் அவளுக்கு நினைவில் இருந்தது.
அவளுக்கு நினைவு வந்தபோது மருத்துவமனையில் கிடந்தாள். கண் விழித்தவளுக்கு வலியாக இருந்தது .உடலை அசைக்கக் கூட முடியவில்லை.
“ம்ம்ம் சரி ,ஆனா எனக்கு எதுவுமே நினைவில்லை” என்று சொல்ல
“டாக்டர்ஸ் சொன்னாங்க உங்களுக்கு சீக்கிரம் நினைவு வந்திடும் கவலைப்படாதீங்க” என ஆறுதல் அளித்தான் வினீத்.
அவன் வெளியேறியதும் அறையை சுற்றி சுற்றி பார்த்தாள் யாழினி.
‘யாழினி… இந்த ஞாபகமறதி டிராமாவையே மெயின்டெயின் பண்ணு,அப்போ தான் இங்கிருந்து வெளியேப் போகத் தேவையில்லை, அந்த நமசிவாயமும் நம்மளை கண்டுபிடிக்க மாட்டான்… உண்மை தெரிஞ்சதும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு எப்படியாவது ஒரு ஆசிரமத்தில் சேர்ந்துக்கலாம் ‘என்று மனதில் நினைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
அறையிலிருந்து வெளியே வந்த வினீத் மற்றொரு அறைக்குள் நுழைந்தவன்,” சேட்டா, ஞான் மனுஷ் சேட்டா தான் சேச்சி ண்ட ஹஸ்பண்ட்’னு பறைஞ்ஞு, ஆ சேச்சியும் நம்புது…பழசு எல்லாம் நினைவுல இல்ல. “என்றான்.
“ஹேய்! கள்ளம் பறையாதேடா வினித். சத்யம் பறா” என்றான் அவன் பரபரப்புடன்
“சத்யம் பறையாம் சேட்டா…நம்பு.. “என்றான் வினித் தலையில் அடிக்காத குறையாக
“ஓகே ஓகே நம்புறேன், ஆனா அது மட்டும் பத்தாது, நம்ம இஷ்டத்திற்கு அவளை ஆட வைக்கணும்,மனுஷிடம் நெருங்கி பழக விட்டு நம்ம காரியத்தை சாதிக்கணும் சரிதன்னே!?” என்றான் அந்த ஆடவன்.
“ஓகே சேட்டா…!”என்றவன் தலையை சொறிந்து கொண்டே ,”சேட்டா எனிக்கு டைரக்டர் சான்ஸு” என்று இழுக்க
“சீக்கிரம் படத்தை பத்தின அறிவிப்பை வெளியிடுவோம் டா “என்றான் அவன். வினீத்திற்கு மகிழ்ச்சி தாளவில்லை.
மகிழன்சக்ரவர்த்தி… தமிழ் திரைத்துறையில் முக்கியமான தயாரிப்பாளர்களில் ஒருவன். பெரிய நடிகர்கள், இயக்குநர்கள் எல்லாம் இவரது ப்ரொடக்ஷனில் நடிக்கவும் இயக்கவும் வரிசையில் நிற்கின்றன.ஆனால் மனுஷ் இதுவரை தன் சொந்த அண்ணனிடம் பணியாற்றியதில்லை. சாதாரணமாகவே மனுஷின் வேலைகளில் தலையிடும் மகிழனை சற்று பிடிப்பதில்லை மனுஷிற்கு. அவனுக்கு தன் எண்ணங்களில் குறுக்கீடு செய்ய கூடாது. அப்போது தான் சிறப்பாக வேலையை முடித்திட முடியும் என்ற நம்பிக்கை அவனுக்கு .
மகிழனுக்கு தம்பியின் வருமானத்தின் மீதிருந்த மோகம், அவனை இவ்வாறு செய்யத் தூண்டி இருந்தது முதல் காரணம்.
இரண்டாவது காரணம் மனுஷின் முதல் மனைவி. என்ன தான் இருந்தாலும் தன் தம்பியை பற்றி அவதூறு பரப்புவளின் முன்பு தனது தம்பி மனைவி, குழந்தை என்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற எண்ணம் இருந்தது மகிழனுக்கு.
**********
மனுஷிற்கு அவனது அன்னையிடம் இருந்து அழைப்பு வந்தது.
“அம்மே சுகந்தனே( சுகம் தானே) ” என்று துவங்கியவனை நினைத்து பெருமிதம் கொண்டவர் ,”மோனே நீ எவிடானு?”
“ஆலப்புழா…அம்மே!”
“மோனே,பகவதி அம்மன் கோவில் போயிட்டு வா” என்றார்.
கேரளாவில் பல பகவதி கோயில்கள் உள்ளன. சோட்டானிக்கரை பகவதி, ஆற்றுக்கால் பகவதி, கொடுங்களூர் பகவதி என நிறைய உண்டு. அதில் ஒன்று தான் ஆழப்புழாவில் உள்ள சக்குளத்துக்காவு பகவதி கோவில்.
சக்குளத்துகாவு ஸ்ரீ பகவதி கோயிலுடன் தொடர்புடைய 3000 ஆண்டுகள் பழமையான வரலாறு உள்ளது. இது அனைத்து மதத்தினருக்கும் திறந்திருக்கும் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள விசுவாசிகளை ஈர்க்கிறது. அன்னை துர்க்கை இங்கு வழிபடப்படுகிறார். கோயிலின் இருபுறமும் முக்கிய நதிகளான பம்பா மற்றும் மணிமாலா ஆறுகள் ஓடுகின்றன. சக்குளத்துகாவு பொங்கலை இக்கோயிலுடன் தொடர்புடைய ஒரு பிரபலமான திருவிழாவாகும். இது மலையாள மாதமான விருச்சிகம் (நவம்பர்/டிசம்பர்) அன்று வருகிறது மற்றும் இது ஒரு பெரிய விவகாரம். ‘பொங்கல நிவேதயம்’ என்பது அம்மனுக்கு விருப்பமான ஒரு இனிப்பு உணவாகும், மேலும் அதை வழங்குவதற்காக பெண்கள் அதிக எண்ணிக்கையில் கோயிலுக்கு வருகிறார்கள். கோயிலுக்கு வெளியே பக்தர்கள் சமையலுக்கு மண் பானைகளில் இந்த உணவை எடுத்துச் செல்வதால் கோவிலுக்கு வெளியே மிகப்பெரிய கோடுகள் உருவாகின்றன.
“ம்ம்ம் சரி… !”
“வீட்டுக்கு சீக்கிரம் வா, என் மருமகளுக்கு உன் கூட இருக்கணுமாம்” என்றார்.
“மருமகளா…?” இழுத்தான் மனுஷ்.
“ஹ்ம்ம் நிங்களன்ட பார்யா… எந்தா மோனே இது… திடுக்குதலில் விவாகம் கழிச்சு (அவசரமா கல்யாணத்தை பண்ணிட்ட), அதுக்காக மருமகளை தெரியலைனு சொல்றியே…நீ அவளை யானை கிட்ட இருந்து காப்பாத்தி அப்புறம் அவளோட கொடுமை பண்ற அக்கா புருஷன் கிட்ட இருந்து காப்பாத்தி கல்யாணமும் செய்து மகிழனோட அனுப்பி வச்சிருக்கியே… இப்ப தான் மகி அழைச்சுட்டு வந்தான்” என்று படபடப்பாக கூறினார் அவனது அம்மா.
‘இதென்னடா நாம் எடுக்கும் கதையை விட சஸ்பென்ஸாக இருக்கிறதே?’ என்று யோசித்தவன் ,தன் அன்னை கூறியதை வரிசைபடுத்தி யோசித்தான்.
“மோனே மனுஷ் ஃபோன் கட் ஆகியோ, மனுஷ், புத்திரா எதாங்கிலும் பறா… “என அவனது அம்மா எதிர்முனையில் சத்தமிட்டுக் கொண்டிருக்க
‘ஓ மை காட் அவளா…!! அவ எப்படி மகி கிட்ட… ப்ம்ச்’ என சலித்தபடி , “ஞான் உடன் வரும் அம்மே”தன் அன்னையிடம் விரைந்து வருவதாக விடை கொடுத்தான்.