அருமையான பதிவு சவீதா
.எதுக்கு கூப்பிடனும்,ஏன் சொல்லனும்,என்ன அடிக்க நீங்க யாருன்னு கேட்டு நயனா கலக்குறா
.
அவளா வந்து காதலை சொல்லவும்,கல்யாணம் பண்ண முடியாதுன்னு சொன்னவன்,அவளோட கல்யாணத்தை பத்தி அக்கறை பட தேவையில்லைன்னு முகத்துல அடிச்சத போல சொல்லிட்டா
.
ஆதி தொடர்ந்து போன் செய்தும் எடுக்க கூடாதுன்னு விலோக்கு அப்படி என்ன பிடிவாதம், ஆதி
ஒருமுறை தான் அவ மனசை காயப்படுத்துனான்,ஆனா இவ கல்யாணம் பண்ணிட்டு தினமும் சண்டை போட்டு பிரச்சனை பண்றா
.
ஆதி போன் பண்றப்போ விலோ எடுக்கலை,இவ போன் செஞ்சா மட்டும் அவன் எடுப்பானா
.
விலோ ரொம்பவும் தான் ஆட்டம் போடறா,சந்தியா இவங்க எவ்வளவு தூரம் போறாங்க பார்க்கலாம்னு இருக்காங்க
.
ஆதி பழையபடி கோபக்காரனா மாறுவானா,இல்லை சந்தியா மாமியார் கெத்தை காட்டினாலே எல்லாம் சரியாகிடுமோ
.