“இதுவும் முதல் முறையா கேக்குறேன்…”என்றவன் லேசாய் இடைவெளிவிட்டான். அவள் முகம் சுருங்கிப் போனது.
“நான் எதையும் எதிர்பார்க்கிறது இல்லை… எதிர்ப்பார்ப்பு இருந்தா தானே ஏமாற்றம் வரும்… இந்த சாரி, தேங்க்ஸ் இதெல்லாம் அதுல அடக்கம் தான்… சரி கிளம்பறேங்க…” என்றுவிட்டு கிளம்பிச் சென்றும் விட்டான்.
‘இவன் என்ன மாதிரி மனிதன்’என்ற ஆராய்ச்சி அவளுக்குள் இப்போது.