நீ நான்
தனித்திருக்கும் நேரம்
உன் இதழ்களும்
என் இதழ்களும்
பரிமாறும்
காதல் பாஷைக்கு
என்ன பெயர்???
இருவாரங்கள் கடந்திருக்க ஆபிஸிலிருந்து விரைவாக வீடு திரும்பியிருந்தாள் ஶ்ரீ..இரண்டு வாரங்களில் நன்கு தேறியிருந்தாள் ஹேமா... ராதாவின் கவனிப்பால் மசக்கையிலிருந்து சற்று விடுதலையடைந்திருந்தாள் ஹேமா... இருப்பினும் மார்னிங் சிக்னஸ் மட்டும் இருந்தது... இந்த இருவார காலத்தில் அனு கூறிய டாக்டரிம் ஹேமாவை அழைத்து சென்று வேண்டிய செக்கப் மற்றும் ஸ்கேனை செய்து மருந்து மாத்திரைகள் மற்றும் வைத்தியரின் ஆலோசனைகளையும் பெற்று வந்திருந்தனர்...
ஆபிஸிருந்து வந்த ஶ்ரீயை ராதா
“என்னடி சீக்கிரம் வந்துட்ட??” என்று கேட்க அவர் அருகே சென்ற ஶ்ரீ அவர் காதில் ஏதோ குசுகுசுக்க சரியென்று தலையாட்டியவரிடம் சத்தமாக
“இன்னைக்கு வர்க் ஏதும் இருக்கலை... அதான் லீவ் சொல்லிட்டு வந்துட்டேன்... ஆமா ஹேமா எங்க?? அவளை வார்க்கிங் கூட்டிட்டு போகலையா??”
“அவ ரூம்ல தான் இருக்கா...அவளை எதுக்கு வார்க்கிங் கூட்டிட்டு போகப்போற?? அதுவும் என்னைக்கும் இல்லாத வழமையா??”
“சும்மா தான் மம்மி.. குட்டிப்பையன் ஹெல்தியா இருக்கனும்ல... “
“அதெல்லாம் மூனு மாசம் முடிஞ்சதும் பார்த்துக்கலாம்... இப்போ வேணாம்...”
“இல்லை மம்மி.. சும்ம காத்து வாங்கிட்டு வர்றாம்னு பார்த்தேன்... அவளும் வந்ததுல இருந்து வீட்டுக்குள்ள தான் இருக்கா.. அதான்...” என்று ஶ்ரீ கூற
“சரி பார்த்து பத்திரமா கூட்டிட்டு வா...ஜூஸ் போட்டு வச்சிருக்கேன்.. அதையும் எடுத்துட்டு போ.. நீ குடிச்சிராத.... அது ஹேமாவுக்கு... புரிஞ்சிதா?? இருட்டுறதுக்கு முதல்ல வீட்டுக்கு வந்திடனும் சரியா??”
“சரி சரி... எவ்வளவு வளர்ந்தாலும் இந்த ஆர்டர் போடுற பழக்கத்தை மட்டும் ஏன் மம்மி விடவே மாட்டேங்குற??”
“என்னடி வாய் நீளுது...”
“எது எப்பவோ நீண்டுருச்சே... நீ இப்போ தான் பார்க்கிறியா??” என்றவளை அடிக்கத்துரத்தினார் ராதா.
அறையினுள் நுழைந்தவளை வரவேற்றாள் ஹேமா..
“என்னடி ஆண்டிக்கிட்ட திட்டு வாங்கினியா??”
“இல்லை பப்ளி... எப்பவும் போல மம்மி செல்லமா கொஞ்சிட்டு இருந்தாங்க.. அதான்..”
“அவங்களுக்கு உன்னை கொஞ்சிறதை தவிர வேற வேலை பாரு... சரி நீ என்ன இன்னைக்கு ஏர்லியா வந்துட்ட?? உன்னோட டமார் தலையன் உன்னை அவ்வளவு சீக்கிரம் பர்மிஷன் குடுத்திருக்கமாட்டானே..??”
“அவன் என்னைக்குடி பர்மிஷன் குடுத்திருக்கான்?? அவன் இன்னைக்கு லீவு. அதான் விடு ஜூட்னு கிளம்பிட்டேன்..வா... அப்படியே பார்க்குக்கு போயிட்டு வரலாம்..”
“என்னடி ஆண்டிக்கிட்ட ஏதோ பூசுத்திட்டு இருந்தியேனு பார்த்தா என்கிட்டயுமாடி..?? இன்னைக்கு எதுக்கு உன் பப்ளி மேல திடீர் கரிசனம்??” என்று ஹேமா கேட்க ஶ்ரீயோ
“நான் எப்பவும் என் பப்ளி மேல கரிசனமா தான் இருப்பேன்..வீட்டுக்குள்ளேயே இருக்கனு வெளிய கூட்டிட்டு போகலாம்னு பார்த்தேன்... ரொம்ப தான் பண்ணிட்டு இருக்க...”
“இல்லையே இதுல ஏதோ இடிக்கிதே...” என்று ஹேமா சந்தேகமாக பார்க்க ஶ்ரீயோ ஹேமாவின் வயிற்றருகே குனிந்து
“பாருங்க குட்டிபையா.. உங்க அம்மா என்னை சந்தேகமா பார்க்குறத?? உங்களுக்காக உங்க அம்மாவை பார்க்குக்கு கூட்டிட்டு போகலாம்னு பார்த்தா உங்க அம்மா ரொம்ப தான் பண்ணுறா..” என்று குழந்தையிடம் நியாயம் கேட்க
“ஆ ஊனா என் குட்டிக்கிட்ட நியாயம் கேட்க போயிர்ற.. குட்டிமா... ஶ்ரீ ஏதோ திருட்டுத்தனம் பண்ணுறா.. அவளை நம்பாதீங்க...”
“பப்ளி குட்டிப்பையன்கிட்ட என்னை பத்தி தப்பு தப்பா போட்டுகுடுக்காத... சொல்லிட்டேன்.. குட்டிபையா நீங்க அம்மா சொல்றதை கேட்காதீங்க.. நீங்க ஶ்ரீயோட செல்லம்.. சோ ஶ்ரீ சொல்லுறத தான் கேட்கனும்.. சரியா?? இப்போ ஶ்ரீ போய் ரெடியாகிட்டு வர்றேன்..அதுக்குள்ள அம்மாவ ரெடியா இருக்க சொல்லுங்க சரியா??” என்றுவிட்டு மாற்றுடை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்துகொண்டாள் ஶ்ரீ..
அவளது செய்கையை பார்த்து சிரித்துக்கொண்டே ஹேமாவும் தயாரானாள்...
இருவரும் கிளம்பும் போது ஹேமாவிற்கென்று ஒரு பையில் ஜூசை ஊற்றிக்கொடுத்த ராதா பல அறிவுரைகளுக்கு பின் இருவரையும் செல்ல அனுமதித்தார்... இருவரும் வெளியே வந்ததும் ஹேமா
“என்ன ஶ்ரீ அண்ணா வந்துட்டாங்களா?? இல்லை லேட்டாகுமா??”
“எந்த அண்ணாவை கேட்குற?? யாரு வருவா..?”
“அம்மா தாயே நடிக்காத.. தாங்க முடியலை.. உன்னோட ஆளை பார்க்க தானே என்னை சாக்கு சொல்லிட்டு கூட்டிட்டு வந்த??”
“அப்.படி....லா.. இல்லையே..”
“ஶ்ரீ உன்னை பத்தி என்னை தவிர வேற யாருக்கு நல்லா தெரியும்... சொல்லு.. அண்ணா வந்துட்டாங்களா???”
“எப்படிடி கண்டுபிடிச்ச??”
“நீ தான் ஐந்து ரூபாய்க்கு நடினா ஐயாயிரம் ரூபாயிற்க்கு நடிக்கிற... அதான் என்கிட்ட மாட்டிக்கிட்ட..”
“ஓ... எக்ஸைட்மெண்ட்ல கொஞ்சம் ஓவரா பர்போமன்ஸ் பண்ணிட்டேன் போல இருக்கு...”
“இப்போவாவது ஒத்துக்கிட்டியே... சரி அண்ணா வந்துட்டாங்களா??”
“ஆமாடி பார்க்கில் வெயிட் பண்ணுறாங்க... வா போகலாம்..” என்று ஹேமாவை அருகிலிருந்த பார்க்கிற்கு அழைத்து சென்றாள் ஶ்ரீ..
அங்கு ரிஷியுடன் ரித்வியும் வந்திருந்தான்...
“இவ எதுக்குடா.. இப்போ நம்ம ரெண்டு பேரையும் வரசொன்னா?? எதுக்குனு கேட்டா சொன்னா தான் வருவீங்களானு மிரட்டுறா.... இவ சொன்னாலேனு அடிச்சி புடிச்சி வந்தா இவளை இன்னும் காணோம்...”
“என்ன அண்ணா இதுக்கே சலிச்சிக்கிறீங்க.. இதெல்லாம் ஆரம்பம் தான்.. இன்னும் எவ்வளவோ இருக்கு... “
“நல்லா ஆரம்பம்டா.. இவ சேட்டைக்கு ஒரு அளவே இல்லாமல் போச்சு.. கொஞ்சம் கண்டிச்சு வைக்கனும்...”
“அய்யோ அண்ணா ப்ளீஸ் காமெடி பண்ணாத.. நீ அவளை கொஞ்சிட்டு அலைவியே தவிர கண்டிக்க மாட்ட...”
“அது என்னமோ உண்மை தான்டா.. அவளை பார்த்தாலே இருக்கிற கோபமெல்லாம் மறந்திடுது... என்ன மாயமோ என்ன மந்திரமோ தெரியலை..”
“ஹாஹா.. இப்பவே இப்படினா கல்யாணத்துக்கு அப்புறம்... ம்ம்ம்.. நடத்துனா நடத்து...” என்று கூறி ரித்வி ரிஷியை கிண்டல் செய்தான்..
அப்போது ஹேமாவும் ஶ்ரீயும் பார்க்கிற்கு வந்து சேர்ந்தனர்...
தனித்திருக்கும் நேரம்
உன் இதழ்களும்
என் இதழ்களும்
பரிமாறும்
காதல் பாஷைக்கு
என்ன பெயர்???
இருவாரங்கள் கடந்திருக்க ஆபிஸிலிருந்து விரைவாக வீடு திரும்பியிருந்தாள் ஶ்ரீ..இரண்டு வாரங்களில் நன்கு தேறியிருந்தாள் ஹேமா... ராதாவின் கவனிப்பால் மசக்கையிலிருந்து சற்று விடுதலையடைந்திருந்தாள் ஹேமா... இருப்பினும் மார்னிங் சிக்னஸ் மட்டும் இருந்தது... இந்த இருவார காலத்தில் அனு கூறிய டாக்டரிம் ஹேமாவை அழைத்து சென்று வேண்டிய செக்கப் மற்றும் ஸ்கேனை செய்து மருந்து மாத்திரைகள் மற்றும் வைத்தியரின் ஆலோசனைகளையும் பெற்று வந்திருந்தனர்...
ஆபிஸிருந்து வந்த ஶ்ரீயை ராதா
“என்னடி சீக்கிரம் வந்துட்ட??” என்று கேட்க அவர் அருகே சென்ற ஶ்ரீ அவர் காதில் ஏதோ குசுகுசுக்க சரியென்று தலையாட்டியவரிடம் சத்தமாக
“இன்னைக்கு வர்க் ஏதும் இருக்கலை... அதான் லீவ் சொல்லிட்டு வந்துட்டேன்... ஆமா ஹேமா எங்க?? அவளை வார்க்கிங் கூட்டிட்டு போகலையா??”
“அவ ரூம்ல தான் இருக்கா...அவளை எதுக்கு வார்க்கிங் கூட்டிட்டு போகப்போற?? அதுவும் என்னைக்கும் இல்லாத வழமையா??”
“சும்மா தான் மம்மி.. குட்டிப்பையன் ஹெல்தியா இருக்கனும்ல... “
“அதெல்லாம் மூனு மாசம் முடிஞ்சதும் பார்த்துக்கலாம்... இப்போ வேணாம்...”
“இல்லை மம்மி.. சும்ம காத்து வாங்கிட்டு வர்றாம்னு பார்த்தேன்... அவளும் வந்ததுல இருந்து வீட்டுக்குள்ள தான் இருக்கா.. அதான்...” என்று ஶ்ரீ கூற
“சரி பார்த்து பத்திரமா கூட்டிட்டு வா...ஜூஸ் போட்டு வச்சிருக்கேன்.. அதையும் எடுத்துட்டு போ.. நீ குடிச்சிராத.... அது ஹேமாவுக்கு... புரிஞ்சிதா?? இருட்டுறதுக்கு முதல்ல வீட்டுக்கு வந்திடனும் சரியா??”
“சரி சரி... எவ்வளவு வளர்ந்தாலும் இந்த ஆர்டர் போடுற பழக்கத்தை மட்டும் ஏன் மம்மி விடவே மாட்டேங்குற??”
“என்னடி வாய் நீளுது...”
“எது எப்பவோ நீண்டுருச்சே... நீ இப்போ தான் பார்க்கிறியா??” என்றவளை அடிக்கத்துரத்தினார் ராதா.
அறையினுள் நுழைந்தவளை வரவேற்றாள் ஹேமா..
“என்னடி ஆண்டிக்கிட்ட திட்டு வாங்கினியா??”
“இல்லை பப்ளி... எப்பவும் போல மம்மி செல்லமா கொஞ்சிட்டு இருந்தாங்க.. அதான்..”
“அவங்களுக்கு உன்னை கொஞ்சிறதை தவிர வேற வேலை பாரு... சரி நீ என்ன இன்னைக்கு ஏர்லியா வந்துட்ட?? உன்னோட டமார் தலையன் உன்னை அவ்வளவு சீக்கிரம் பர்மிஷன் குடுத்திருக்கமாட்டானே..??”
“அவன் என்னைக்குடி பர்மிஷன் குடுத்திருக்கான்?? அவன் இன்னைக்கு லீவு. அதான் விடு ஜூட்னு கிளம்பிட்டேன்..வா... அப்படியே பார்க்குக்கு போயிட்டு வரலாம்..”
“என்னடி ஆண்டிக்கிட்ட ஏதோ பூசுத்திட்டு இருந்தியேனு பார்த்தா என்கிட்டயுமாடி..?? இன்னைக்கு எதுக்கு உன் பப்ளி மேல திடீர் கரிசனம்??” என்று ஹேமா கேட்க ஶ்ரீயோ
“நான் எப்பவும் என் பப்ளி மேல கரிசனமா தான் இருப்பேன்..வீட்டுக்குள்ளேயே இருக்கனு வெளிய கூட்டிட்டு போகலாம்னு பார்த்தேன்... ரொம்ப தான் பண்ணிட்டு இருக்க...”
“இல்லையே இதுல ஏதோ இடிக்கிதே...” என்று ஹேமா சந்தேகமாக பார்க்க ஶ்ரீயோ ஹேமாவின் வயிற்றருகே குனிந்து
“பாருங்க குட்டிபையா.. உங்க அம்மா என்னை சந்தேகமா பார்க்குறத?? உங்களுக்காக உங்க அம்மாவை பார்க்குக்கு கூட்டிட்டு போகலாம்னு பார்த்தா உங்க அம்மா ரொம்ப தான் பண்ணுறா..” என்று குழந்தையிடம் நியாயம் கேட்க
“ஆ ஊனா என் குட்டிக்கிட்ட நியாயம் கேட்க போயிர்ற.. குட்டிமா... ஶ்ரீ ஏதோ திருட்டுத்தனம் பண்ணுறா.. அவளை நம்பாதீங்க...”
“பப்ளி குட்டிப்பையன்கிட்ட என்னை பத்தி தப்பு தப்பா போட்டுகுடுக்காத... சொல்லிட்டேன்.. குட்டிபையா நீங்க அம்மா சொல்றதை கேட்காதீங்க.. நீங்க ஶ்ரீயோட செல்லம்.. சோ ஶ்ரீ சொல்லுறத தான் கேட்கனும்.. சரியா?? இப்போ ஶ்ரீ போய் ரெடியாகிட்டு வர்றேன்..அதுக்குள்ள அம்மாவ ரெடியா இருக்க சொல்லுங்க சரியா??” என்றுவிட்டு மாற்றுடை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்துகொண்டாள் ஶ்ரீ..
அவளது செய்கையை பார்த்து சிரித்துக்கொண்டே ஹேமாவும் தயாரானாள்...
இருவரும் கிளம்பும் போது ஹேமாவிற்கென்று ஒரு பையில் ஜூசை ஊற்றிக்கொடுத்த ராதா பல அறிவுரைகளுக்கு பின் இருவரையும் செல்ல அனுமதித்தார்... இருவரும் வெளியே வந்ததும் ஹேமா
“என்ன ஶ்ரீ அண்ணா வந்துட்டாங்களா?? இல்லை லேட்டாகுமா??”
“எந்த அண்ணாவை கேட்குற?? யாரு வருவா..?”
“அம்மா தாயே நடிக்காத.. தாங்க முடியலை.. உன்னோட ஆளை பார்க்க தானே என்னை சாக்கு சொல்லிட்டு கூட்டிட்டு வந்த??”
“அப்.படி....லா.. இல்லையே..”
“ஶ்ரீ உன்னை பத்தி என்னை தவிர வேற யாருக்கு நல்லா தெரியும்... சொல்லு.. அண்ணா வந்துட்டாங்களா???”
“எப்படிடி கண்டுபிடிச்ச??”
“நீ தான் ஐந்து ரூபாய்க்கு நடினா ஐயாயிரம் ரூபாயிற்க்கு நடிக்கிற... அதான் என்கிட்ட மாட்டிக்கிட்ட..”
“ஓ... எக்ஸைட்மெண்ட்ல கொஞ்சம் ஓவரா பர்போமன்ஸ் பண்ணிட்டேன் போல இருக்கு...”
“இப்போவாவது ஒத்துக்கிட்டியே... சரி அண்ணா வந்துட்டாங்களா??”
“ஆமாடி பார்க்கில் வெயிட் பண்ணுறாங்க... வா போகலாம்..” என்று ஹேமாவை அருகிலிருந்த பார்க்கிற்கு அழைத்து சென்றாள் ஶ்ரீ..
அங்கு ரிஷியுடன் ரித்வியும் வந்திருந்தான்...
“இவ எதுக்குடா.. இப்போ நம்ம ரெண்டு பேரையும் வரசொன்னா?? எதுக்குனு கேட்டா சொன்னா தான் வருவீங்களானு மிரட்டுறா.... இவ சொன்னாலேனு அடிச்சி புடிச்சி வந்தா இவளை இன்னும் காணோம்...”
“என்ன அண்ணா இதுக்கே சலிச்சிக்கிறீங்க.. இதெல்லாம் ஆரம்பம் தான்.. இன்னும் எவ்வளவோ இருக்கு... “
“நல்லா ஆரம்பம்டா.. இவ சேட்டைக்கு ஒரு அளவே இல்லாமல் போச்சு.. கொஞ்சம் கண்டிச்சு வைக்கனும்...”
“அய்யோ அண்ணா ப்ளீஸ் காமெடி பண்ணாத.. நீ அவளை கொஞ்சிட்டு அலைவியே தவிர கண்டிக்க மாட்ட...”
“அது என்னமோ உண்மை தான்டா.. அவளை பார்த்தாலே இருக்கிற கோபமெல்லாம் மறந்திடுது... என்ன மாயமோ என்ன மந்திரமோ தெரியலை..”
“ஹாஹா.. இப்பவே இப்படினா கல்யாணத்துக்கு அப்புறம்... ம்ம்ம்.. நடத்துனா நடத்து...” என்று கூறி ரித்வி ரிஷியை கிண்டல் செய்தான்..
அப்போது ஹேமாவும் ஶ்ரீயும் பார்க்கிற்கு வந்து சேர்ந்தனர்...