oh...... எப்படி பண்ணுவாங்க சொல்லுங்க.......
தேவையான பொருட்கள் :
சுத்தமான அகல்விளக்கு :1 அல்லது 2.
சுத்தமான நல்லெண்ணெய் அல்லது சுத்தமான விளக்கெண்ணை -விளக்கு ஏத்துவதற்கு தேவையான அளவு.
வெற்றிலை அல்லது செப்பு தட்டு அல்லது சுத்தமான எவர்சில்வர் தட்டு.
சுத்தமான பருத்தி துணி -1.
செய்முறை :
*பருத்தி துணியை 4cm *4cm அளவில் வெட்டிக் கொண்டு நீளமாக உருட்டி திரி போன்று திரித்து கொள்ள வேண்டும்.
*அகல்விளக்கில் இந்த திரி முழுகும் அளவில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.
இரண்டு விதமாக செய்யலாம்.....
* வெற்றிலையின் முன்பக்கம் சிறிது எண்ணெய் தடவி விளக்கிற்கு நேரே சற்றே சாய்வாக பிடித்து கொள்ள வேண்டும்...... சற்று நேரத்திற்கு எல்லாம் வெற்றிலையில் கருமை படிய ஆரம்பிக்கும்..... அதை சேகரித்துக் கொண்டு வரலாம்..... (இது எவ்வளவு நேரம் சூடு தங்குமென்பதை பொறுத்து அவரவர் வசதிக்கு ஏற்ப செய்யலாம்...... இப்போ இந்த முறை செய்யுறாங்களா தெரியாது..... என் பாட்டி செய்து நான் பார்த்த முறை)
** அகல் விளக்கிற்கு நேரே சற்றே சாய்வாக செப்பு தகடு (கிடைத்தால் உத்தமம் ) அல்லது எவர்சில்வர் தட்டை வைக்க வேண்டும்..... தட்டு முழுவதும் விளக்கில் படாமல் விளக்கின் சுடர் தட்டில் படும்படி சற்றே சாய்வாக வைக்க வேண்டும்.... பிடிமானத்திற்கு வெயிட்டு உள்ளது ஏதும் அணைவாக வைக்க வேண்டும்..... விளக்கிற்கு எண்ணெய் தீர தீர ஊற்றி கொள்ளவும். நீங்கள் விரும்பும் நேரம் வரைக்கும் வைத்து இருக்கலாம்.
தட்டில் கரிப்புகை போன்று படிந்து இருக்கும்..... சுத்தமான சிறிய டப்பாவில் சேகரித்து கொண்டு வரலாம். இதனுடன் சிறிதாக சுத்தமான விளக்கெண்ணெய் சேர்த்து குழப்பி வைத்துக்கொண்டு தேவைப்படும் நேரம் உபயோகிக்கலாம்.
6மாதம் ஆனாலும் கெடாது.
இந்த முறை தான் நாங்கள் எல்லோரும் பயன்படுத்துவது.
மிகவும் எளிது. பக்கவிளைவுகள் இல்லாதது.