தளிர் கரங்கள்
அன்பைத் தேடுகிறது
தளர்ந்த கரங்கள்
ஆதரவை நாடுகிறது
உதிரத்தின் உதிரமே
என் உதிரத்தை ஒருநாளும்
உதாசீனப்படுத்தி விடாதே
ஏனெனில் உதாசீனம்
பெற்றவனுக்குதான்
வலிக்கும்
வலிக்காது தந்தவனுக்கு
சொகுசு மெத்தை
கொடுக்கும்
தகப்பன் உனக்கு
தன் நெஞ்சையே
மெத்தையாக்கி தந்த
தகப்பன் அவனுக்கு...