அபர்ணா,வாசன் வீட்டை வாங்கியவர் இப்போது ராதநாதனின் கடையும்,வண்டியும் வாங்கி விட்டார்
.என்னடின்னு வாசுகியை பார்த்து என்ன செய்ய வாசு, அபர்ணா இத்தனை வருடங்களாக வாசுகிக்கு கொடுக்க முடியாத பாசத்தையும்,பரிசையும் கொடுப்பதை உன்னால் தடுக்க முடியாது
.
வாசன் சொன்னது போல அவன் கடை ஊரில் தனிச் சிறப்பு பெற்று விட்டது
.அபர்ணா , இருவருக்கும் ஆலோசனையும்,தொழில் நுணுக்கத்தை சொல்லி கொடுத்தது உதவியாக இருந்தது.
படிக்காத நித்யா தன் குழந்தைகளை டாக்டர்,லாயர் என படிக்க வைத்ததுடன் மகளுடன் வெளிநாடு சென்றுவிட,அழகான குடும்பம்,குழந்தைகளுடன் இருக்காமல் தனித்து இருந்த ஆத்மா,இன்று யாரும் இல்லாமல் தனியே இருக்கும் நிலை
.
புஷ்பா மருமகள்,பேரன்,பேத்தி வந்த பிறகும் திருந்தவில்லை,சத்யாவும் அப்படி தான் திருந்தாத ஜென்மம்
.வாசுகி குழந்தையை கலைக்க நினைத்தவளுக்கு,தன் பேரன்களை கொஞ்ச முடியாத
நிலை
.சந்திரா,ஜெயமணி வாசுகிக்காக வேற வீட்டுக்கு வர்றாங்களா
.
ரோஹனுக்கு,மந்த்ராவை போல குட்டி தேவதையா
.அபர்ணாவை தங்கையாக கவனித்து கொண்ட ராஜேந்திரன்,சரளாவை பாராட்ட வார்த்தையில்லை
.
வாசன்,வாசுகியை திருமணம் செய்து கடமைக்காக குடும்பம் நடத்துவதும்,பிறகு ஒருவரை ஒருவர்
புரிந்து கொண்டு விரும்பி வாழ்வதும் அருமை
.வாசுகிக்கு பெட்ரொமாக்ஸ் லைட் தான் வேண்டுமாம்
.
அருமையான குடும்பகதை.எளிமையான நடை.நிறைவான முடிவு.வாழ்த்துக்கள் மிலா