அனுவின் அப்பா விற்கும் ஸ்வரன் அம்மாவிற்கும் வித்தியாசம் இல்லை.
19 வயதில் வாழ்க்கையை இழந்தது கொடுமை தான்.அதற்காக பெற்ற மகனை ஆசிரமத்தில் விட்டது மிக பெரிய பாவம் இல்லையா.அவன் தாத்தாவிடம் அவரே கொடுத்து இருக்கலாம்.
அவர் இரண்டாவது கணவரின் மகனை பார்த்து கொண்டவர் தன் மகனை எண்ண வில்லையே.
இப்போ கூட அவருக்கு யாரும் ஆதரவு இல்லை என்ற நிலையில் மட்டுமே தேடி வந்து உள்ளார்.இல்லை என்றால் இவரும் தன் வளர்ப்பு மகனுடன் வெளிநாடு சென்று இருப்பார்.
கஷ்ட பட்டவர்களுக்கு மட்டுமே அதன் வேதனை புரியும்.மனைவி என்றாலும் ஸ்வரன் மன வருத்தத்தை அனு முழுதாக புரிந்து கொள்ளவில்லை.
அவன் உதவி புரிந்து இருக்கிறான் என்றால் அவன் மனதில் இருக்கும் நல்ல எண்ணம் மட்டுமே.அதற்காக அவரை மன்னித்து ஏற்று கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதே என் கருத்து.
அவன் அவரை பழி வங்கவில்லையே.அவர் கௌரம் ஆக வாழ வழி செய்து இருக்கிறான்.அது போதாதா?
பல காலம் ஒருவரை மனம் வருந்தி,வேதனை படுத்தி,தன் சந்தோஷத்தை மட்டும் பார்த்து வாழ்ந்து விட்டு இறுதி காலம் வந்ததும் திருந்தி விட்டேன்.என்னை மன்னித்து விடு என்று கேட்பவர்களையும், அவர் தான் மன்னிப்பு கேட்கிறார்களே சரி என்றால் என்ன தப்பு என்பரையும் கண்டால் எனக்கு கோபம் தன் வருகிறது.
அவர் செய்ததை நாமும் செய்தால் அவருக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்ற விளக்கம் வேற வரும்.
இது கதை தான் என்றாலும் ஸ்வரன் அம்மா மேல் எனக்கு கோபம் தான் வருது.
கொலை செய்து விட்டு அய்யய்யோ தப்பு தான் மன்னித்து விடுங்கள் என்று பிணத்திடம் கேட்டால் உயிர் வந்து விடுமா?
அவன் எந்த அளவு தன் அம்மாவை தேடி இருப்பான்.எப்படி தவித்து இருப்பான்.அது எல்லாமே இவர் கேட்க்கும் மன்னிப்பில் ஒன்றும் இல்லாமல் போய் விடுமா?