சண்முகத்தின் நிலை புரிகிறது நன்றாகவே... தன் நண்பன் என்ற பெயரில் வந்த ஒருவன் கொடுத்த துளி விசம் அவன் மனதை பதம்பார்த்ததோடு அவனின் மகளை அவனை விட்டு விலக்கி வைக்க செய்துவிட்டது...
ஆரம்பத்தில் இருக்கும் மனஅழுத்தத்தில் செய்தது சரி... ஆனால் அதை இன்றுவரை தொடர்வது எந்த வகையில் சரி... ஒரு ரத்தபரிசோதனை காட்டிடுமே அவள் யாரின் ரத்தமென... அதை தாண்டி நிறம் மட்டுமே தன் வாரிசை அடையாளம் காட்டும் என்பதை எப்படி அவர் இன்றும் நம்பலாம்.... அப்போது அவர் அனுபவிக்க வேண்டியதை அனுபவித்து தான் தீரவேண்டும்....